சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

Posts Tagged ‘ஏ.டி

புதிய கடவுளின் ஏ.டி.எம்

5 மறுமொழிகளுடன்

எங்கள் தெருமுனையில்
வந்திருக்கிறது
புதிய கடவுளின்
சின்ன ஏ.டி.எம்

நமக்கு சேரவேண்டியதை
நமக்கே பொறுப்பாக தந்துவிடுவதாக
அதிகப்படியான புகழ்

இப்போதெல்லாம்
அவரின் மதிப்புக்கூட்டப்பட்ட சேவைகள்
பற்றிய பேச்சைப் போல
பரவுகிறது தீ.

பக்கத்து தெரு கடவுளின்
திருப்பதிப்படாத ஏ.டி.எம்
வாடிக்கையாளர்கள்
அவ்வபோது இங்கு தென்படுகிறார்கள்

எங்களுக்கு கூட புலப்படாத
நல்ல விஷயங்களை
சுட்டிக்காட்டுகிறார்கள்

கார்டு போடாமலே
பணம் வந்ததாகக் கூட
பரவசப்படுகிறார்கள் சிலர்

அவசரத்தேவைக்கு
அலறியடித்து செல்கிற
அனைவருக்கும்
அவரவர் பொருளையே
புன்னகையுடன் வழங்குவதில்
அத்தனை பெருமை கடவுளுக்கு.

அவருக்கு தெருவெங்கும்
கிளைகள் உண்டு

Written by aravind

மார்ச் 13, 2008 இல் 5:55 மு.பகல்

எண்ணங்கள், கவிதை இல் பதிவிடப்பட்டது

Tagged with , , , ,