<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:geo="http://www.w3.org/2003/01/geo/wgs84_pos#" xmlns:media="http://search.yahoo.com/mrss/"
	>

<channel>
	<title>சிறுமழை</title>
	<atom:link href="http://sirumazai.wordpress.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://sirumazai.wordpress.com</link>
	<description>வானம் எனக்கொரு போதி மரம்.....</description>
	<lastBuildDate>Sun, 29 Jan 2012 17:11:52 +0000</lastBuildDate>
	<language>ta</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.com/</generator>
<cloud domain='sirumazai.wordpress.com' port='80' path='/?rsscloud=notify' registerProcedure='' protocol='http-post' />
<image>
		<url>http://s2.wp.com/i/buttonw-com.png</url>
		<title>சிறுமழை</title>
		<link>http://sirumazai.wordpress.com</link>
	</image>
	<atom:link rel="search" type="application/opensearchdescription+xml" href="http://sirumazai.wordpress.com/osd.xml" title="சிறுமழை" />
	<atom:link rel='hub' href='http://sirumazai.wordpress.com/?pushpress=hub'/>
		<item>
		<title>படகு இலைகள் நிலா பருவங்கள்</title>
		<link>http://sirumazai.wordpress.com/2012/01/27/%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%95%e0%af%81-%e0%ae%87%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/</link>
		<comments>http://sirumazai.wordpress.com/2012/01/27/%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%95%e0%af%81-%e0%ae%87%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/#comments</comments>
		<pubDate>Fri, 27 Jan 2012 03:27:24 +0000</pubDate>
		<dc:creator>aravind</dc:creator>
				<category><![CDATA[எண்ணங்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://sirumazai.wordpress.com/?p=1289</guid>
		<description><![CDATA[மேகங்களைப் பார்க்கிற மற்றொரு கனவாகவே அது துவங்கியது. எழுதுவதற்காக யோசித்து யோசித்து சேர்க்கிற சொற்கள் சொற்றொடராகி கதையாகி கலைவதைப் போல சலிப்பில்லாத எண்ணங்களின் பெரும் விளையாட்டு அது. கடல் நீரைத் தொடர்ந்து செல்லும் பார்வை வண்ணக் குழப்பமின்றி நீல வானேறுவதைப் போல இக்கனவிலிருந்து நினைவிற்கு விழித்திருக்க வேண்டிய நான், கழுத்தில் மெல்லிய வலியின் கிளைகள் படரப் படர மேகங்களை தொடர்ந்து பார்த்துக்கொண்டேயிருக்கிறேன். கழுத்தை கொஞ்சம் இறக்க முற்படத் துவங்கியதும் முதல் அதிர்ச்சி – நான் மேகங்களை மேல்நோக்கியல்லாமல் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sirumazai.wordpress.com&amp;blog=312050&amp;post=1289&amp;subd=sirumazai&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>மேகங்களைப் பார்க்கிற மற்றொரு கனவாகவே அது துவங்கியது. எழுதுவதற்காக யோசித்து யோசித்து சேர்க்கிற சொற்கள் சொற்றொடராகி கதையாகி கலைவதைப் போல சலிப்பில்லாத எண்ணங்களின் பெரும் விளையாட்டு அது. கடல் நீரைத் தொடர்ந்து செல்லும் பார்வை வண்ணக் குழப்பமின்றி நீல வானேறுவதைப் போல இக்கனவிலிருந்து நினைவிற்கு விழித்திருக்க வேண்டிய நான், கழுத்தில் மெல்லிய வலியின் கிளைகள் படரப் படர மேகங்களை தொடர்ந்து பார்த்துக்கொண்டேயிருக்கிறேன். கழுத்தை கொஞ்சம் இறக்க முற்படத் துவங்கியதும் முதல் அதிர்ச்சி – நான் மேகங்களை மேல்நோக்கியல்லாமல் கீழ்நோக்கி பார்த்துக்கொண்டிருக்கிறேன். மேகங்கள் மெல்ல கலைந்து விலக அதன் கீழே கடற்கோளால் புதைந்ததைப் போல ஒரு பெருநகரம் பார்வைக்கு வர, அதிர்ச்சியில் விழித்துவிட்டேன். அக்கனவு பின் எப்போது நினைவிற்கு வந்தாலும் சொல்ல முடியாத ஒரு வார்த்தையின் படபடப்பும் பரவசமும் என்னைத் தொற்றிக்கொள்ளும். முதன் முறையாக விமானத்தில் ஏறிய இரவில் அக்கனவின் இருப்பிடம் சட்டென புரிந்தது.</p>
<p>விமானத்தின் சத்தம் கொஞ்சம் பயமாக இருந்தது. ஜன்னல் வழியே அதன் இறக்கைகளை எப்போதும் பார்த்தாலும் அவை வலுவில்லாதவை போன்றே இருந்தது. கண்டங்களையும் காலங்களையும் தாண்டிக்கொண்டிருந்ததால் ஒரு கட்டத்திற்கு பின்னர் ஜன்னல்கள் திறக்க அனுமதியில்லை. காணக் காட்சிகள் இல்லாததால் கற்பனையில் அதீத பயம். அமெரிக்காவில் பின் வரும் நாட்களில் நகரங்களுடையில் பறக்கிற பொழுது மேகங்களை உரசி கடந்து அவை அமிழ்ந்து அமிழ்ந்து அசையாத கடலலைகள் போல உறைவதைப் பார்க்கப் போகிறேன் என்றாலும், அன்று மேகங்களை விமானங்கள் உரசுகையிலெல்லாம் நடுக்கம். பத்திரிக்கைகளில் பார்வை பதியவில்லை. ஐபாட் ஏதோ ஒரு பையில் சிக்கிக்கொண்டு விட்டது. திரைப்படங்கள் எதுவும் ருசிக்கவில்லை. ஒவ்வொரு முறை விமானம் மெல்ல குலுங்குகிற பொழுதும் சுற்றி முற்றி பார்க்கிறேன். தூக்கம் பிடிக்கவில்லை. உணவு பெட்டியைத் திறக்கையிலெல்லாம் செயற்கையான ஒரு மணம். சில கணங்களில் விமானங்கள் கொஞ்சம் மேலும் கீழும் அசைகிற அளவிற்கு மேகங்கள் பாதையை தடுக்கின்றன. சில சமயங்களில் மேகங்களைப் பற்றி முன்னெச்சரிக்கை விடப்படுகிறது இருக்கையில் இருக்கும் இசைப்பேழையை உயிர்ப்பித்து காதுகளில் கருவியை பொருத்தி எச்சரிக்கைகளை கேட்க மறுக்கிறேன். இளையராஜா என்று தேடிப் பார்த்தால் அந்தப் பாடல்களில் எதுவுமில்லை. மொசார்ட், பீத்தோவன், அரபிய இசை என எது எதுவோ தேடித் திரிந்தும் சுகமில்லை. கடைசியில் ஜானகியின் பாடல்கள் என்று கண்ணில் பட்டதை உடனே இயக்க ’கடல் மீன்கள்’ படப்பாடல் துவங்குகிறது. கடலலையில் அசைகிற தோணியின் தாளத்தில் ஒலிக்கிற ‘தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்’. மீண்டும் மீண்டும் இதையே பாடுமாறு கட்டளையைப் பிறப்பித்து விட்டு கண்களை மூடிக்கொள்கிறேன். விமானம் மெல்ல மேகங்களின் குளிரில் நடுங்கிக்கொண்டே நகர்கிறது. இசை தூக்கத்தை முழுமையாக தந்த நொடியில், மேகம் கடலாகி விமானம் சின்னஞ்சிறு படகாகியது.</p>
<p align="center">*****</p>
<p>இலையுதிர்காலம் உச்சத்தில் இருந்த பொழுது, காற்று பெரும் மரமாகியிருந்தது. விழுந்து கொண்டிருக்கிற வண்ண மிகுதியைப் பார்த்தால், பூமியின் மரங்களிலிருந்து விழுகிற இலைகளைப் போலில்லை. எப்போதும் அதிவேகமாக பல வண்ணங்களில் பிரண்டுகொண்டேயிருக்கிற இலைகள். இளஞ்சிவப்பு இலைகள் மெல்லிய காந்தம் போல பார்வையை உடன் இழுக்கின்றன. காற்றில் பரவசமான இரைச்சல். யாரும் ரகசியமாக நடந்து செல்ல முடிவதில்லை. அசைவில்லாத ஒரு நொடி நிகழ முடிவதில்லை. மழை அன்று தன் அழகை கொஞ்சம் இழந்தே விட்டது. அந்த வார இறுதியில் எங்கு சென்றால் மிக அழகான இயற்கை காட்சிகள் காணக் கிடைக்குமென விசாரித்து தேடிப் படித்துத் திட்டமிட்டு இறுதியில் எங்கும் போகாமல் ஒரு வாடகைக் கார் மற்றும் ஜிபிஎஸ்ஸுடன் தனித்து விடப்பட்டேன். ஓட்டுனர் உரிமம் இல்லை. கார்களுடன் ஆறு வார பழக்கம் மட்டுமே. வீட்டில் இருக்க பிடிக்காமல் காரை கிளப்பிக்கொண்டு தங்கியிருந்த தூங்குமூஞ்சி டவுனை சுற்றி வரத் துவங்கினேன். காரின் வேகம் ஏறி இறங்கி ஏறி இறங்கி சமன்பட்டதும், சாலைகள் சிறப்பானதும் இலைகளுக்கு நடுவே மிதப்பது போன்றதொரு உணர்வு. சரசரவென்ற இலைகளின் இயக்கம் பிற அத்தனை அசைவுகளையும் வீழ்த்தி விடுகிறது. காவலர்களும் காதலர்களும் வராத சாலைகளாகத் தேர்வு செய்து கடக்கிறேன். டவுனை கடந்ததும் அமைதியான காட்டுச்சாலைகள் திறக்கின்றன. மிக உயரமான மரங்களும் அடர்த்தியான நிழல்களும். பல வண்ண இலைகளினால் சூரிய ஒளி உற்சாகமாக குழம்பிக் கசிகிறது. நேராகச் செல்லும் சாலைகளே எங்குமில்லை. சதா வளைந்துகொண்டிருக்கிற திருப்பங்களில் விரைகிற போது ஓவியத்தினுள்ளே இறங்கித் அடுத்து என்னவெனத் தேடிச் செல்வதைப் போலிருக்கிறது. ஐபாடை காருடன் இணைக்கிற விசித்திர கருவியில்லாததால் விசித்திரமான பண்பலை கிட்டார் இசை ஒலிக்கிறது. சூழ்நிலையை நன்று கிரகித்து உள்வாங்கிக்கொண்டதும் கவனம் வெறும் இலைகளை மட்டும், சாம்பல் சிகப்பு மஞ்சள் இளஞ்சிகப்பு இங்கு அங்கு எங்கென துரத்துகிறது. பிரமாதான ஒத்தியக்கத்துடன் உள்ளங்கையளவேயான சாம்பல் நிறப் பறவைகளின் சின்னஞ்சிறு கூட்டங்கள் அதிவேகமாக மரங்களிருந்து சட்டென கீழிறங்கி இலைக் கூட்டமென ஏமாற்றிப் பறந்த மின்னல் கணங்கள் தான் சென்ற வருடத்தின் மிகச் சிறப்பான ஹைக்கூ தருணங்கள்.</p>
<p style="text-align:center;">*****</p>
<p>ஹார்ட்ஃபர்ட் வந்து சேர்ந்து ஒரு வாரத்தில் வீடு தேடி அதில் ஒரு அறையின் பாதியை அடைத்துக்கொண்ட பிறகு எல்லோரும் ஒரே ஒரு எச்சரிக்கையை மட்டும் திரும்ப திரும்பச் சொல்லத் துவங்கினர். தங்கியிருந்த இடத்தைப் பற்றிய எச்சரிக்கை. உயிர்கள் அங்கே மலிவு, கையில் வைத்திருக்கும் பொருட்களின் மதிப்பு அதிகம். சென்ற ஆண்டு அங்கே நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு மிகப்பிரபலம். போதைப் பொருட்கள் நல்ல புழக்கம். வழிப்பறி எப்போது வேண்டுமானாலும் நிகழும். அங்கே இருந்த இந்தியர்கள் எப்போதும் கூட்டமாக வெளியே சென்று வந்துகொண்டிருந்தனர். பேருந்தை விட்டு இறங்கி வீடு வரும் வரை அனைவரும் சீனியைத் தூக்கிச் செல்லும் எறும்புக்கூட்டத்தைப் போல நெருக்கமாக நடப்போம். வெளியே சென்று வர அறை நண்பரின் கார் இருந்தது. இருந்தும் காலாற நடக்க முடியாதது மிகுந்த சங்கடமாக இருந்தது. காரணமில்லாமல் உடன் நடந்து வர யாரும் தயாரில்லை. குளிரினால் உடலில் நடுக்கம், குற்றங்களினால் மனதில் நடுக்கம்.</p>
<p>நடந்து செல்லுகிற தொலைவில் இந்திய பல்பொருள் அங்காடி இருந்தும் யாரும் நடந்து போவதில்லை. ஓரிரு முறை நான் தனியாக நடந்து செல்ல முயன்று எதிர் வரும் ஆசாமிகள் எல்லோரையும் குற்றவாளிகளைப் போல பார்க்கிற என் பார்வை எனக்கே பிடிக்காமல் அந்த எண்ணத்தை கைவிட்டேன். காலையில் பேருந்தை பிடிக்க நடப்பது, மாலையில் பேருந்திலிருந்து இறங்கி வீட்டுக்கு நடப்பது தவிர வீட்டினுள்ளே மட்டுமே நடக்க முடியும். இரண்டு மாதங்கள் மடிக்கணினியுடனே கழிந்தது. வேறொரு நல்ல இடத்தில் வீடு பார்க்கத் துவங்கி இடம் கிடைத்து மாற நாள் குறித்து காத்திருந்த பொழுது மார்ச் 19 வந்தது. அன்றைய இரவு உதிக்கப் போகிற நிலா பூமிக்கு மிக நெருக்கமாக வலம் வரப்போகிறதென்பது தகவல். மற்ற சமயங்களில் இந்த செய்தி பெரும் சலனத்தை ஏற்படுத்தியிருக்காமல் போயிருக்கலாம். ஆனால் அன்று ஏனோ அப்படியில்லை.</p>
<p>பிறைகள் காண எப்போதும் பிடிக்கும். நான்காம் பிறையை பார்த்து நினைவுகளை அழித்துக்கொள்ளக் கூடாதென பார்க்காமல் தவிர்த்த சிறு வயதின் இரவுகள், மிகச்சரியாக திட்டமிட்டு எல்லரையும் அனுப்பிவிட்டு தனியாக வீடு திரும்பி வந்த தொலை தூர ரயில் பயணத்தில் அடுத்த தண்டவாளத்தில் சிறிய வெளிச்சப் பூச்சியாக விடாமல் உடன் ஊர்ந்த நேரங்கள், இலக்கின்றி நடந்தும் பேசியும் களைத்து இரண்டு நண்பர்களுடன் உயரமான தண்ணீர் டாங்க் மீது ஏறி அமர்ந்த நீண்ட இரவில் திடீரென சிகப்பாகி கிரகண நிழலில் மறைந்து மீண்டும் வளர்ந்த எதிர்பாராத நிமிடங்கள் தவிர, நிலவுக்கும் எனக்கும் பெரிதாக நெருக்கமில்லை. மார்ச் 19 இரவு குளிருக்குத் தோதான உடையுடன் காதுகளில் இசையுடன் ஏழு மணிக்கு வீட்டை விட்டு வெளியேறி புல்வெளிகளில் மிச்சமிருந்த வெண்பனியினூடே நடந்து வீட்டைச் சுற்றி சின்னசிறு வட்டங்கள் போட்டுக்கொண்டிருந்த சில மணி நேரங்களில் பூமிக்கும் எனக்கும் மிக நெருக்கமாக பிரகாசித்துக் கொண்டிருந்தது குற்றமற்ற ஒரு நிலா.</p>
<p style="text-align:center;">*****</p>
<p>அஞ்சல் பெட்டியில் தேவையற்ற இன்னுமொரு கடிதம். மறுபடி கிட்டாரில் ஈ மைனர் முதற்கொண்டு ஆரம்பம். மீண்டும் எப்படியோ தனித்து விடபட்ட ஒற்றை காலுறை. முதல் மழையிலேயே உடைந்து விட்ட குடைக்கம்பி. துவக்கப் பாடலுக்கு மறுபடி வருகிற இசைத்தட்டு. பாதியில் செய்வதறியாத திகைத்து நின்றுவிட்ட கதை மாந்தர்கள் மீண்டும் முதல் காட்சிக்கு விரைதல். சிந்தனை தீர்ந்ததும் மீண்டும் அதே சிந்தனையுடன் மறுபடி ஒரு நடை. திரையரங்கில் சொற்ப மக்களுடன் இன்னுமொரு திரைப்படம். ஒரு புதிய நண்பர் மற்றும் வேண்டுமென்றே தவறவிட்ட ஒரு தொலைபேசி அழைப்பு. தூக்கத்தை தேடப்போகிற நாளைய அதிகாலை. அடுத்த முறை எந்திரத்தில் போட்டதும் இன்னமும் சுருங்கப் போகிற சட்டை. கொஞ்சம் சாயமிழக்கும் நினைவுகள். தெருவோர இசைக்கலைஞனுக்கு சில்லறை போடலாமா என்ற தினசரி யோசனையும் செலவழிக்காமல் சின்னப்பெட்டியில் தினசரி சேர்ந்து கொண்டிருக்கிற சில்லறைகளும். மறுபடியும் தீர்கிற அலைபேசி நிமிடங்கள். மீண்டும் தவறாகவே உச்சரிக்கிற ஆங்கிலச் சொல். மறுபடியும் நீளமான கால் நகங்கள். மீண்டும் கலைதல் கலைத்தல். மறுபடியும் திரைச்சீலை மாற்றம். மறுபடியும் உறுதி இழத்தல். மறுபடி முடிவுகளை மாற்றுதல். மறுபடியும் அதே உரையாடல்கள். மறுபடியும் மறுபடியும் நான்.</p>
<p>சென்ற ஜனவரி துவங்கி இந்த ஜனவரி வரை, சக்கரம் ஒரு முறை முழுக்க சுழன்றிருக்கிறது. சிறு சக்கரத்தில் சுழன்றபடி கடந்த கணமொன்றை குறிக்க வேண்டி எறிந்த சிற்றம்பு காலத்தை ஒரு சுற்று சுற்றி முடிந்து மீண்டும் விழிப்பார்வைக்கு நேரே வந்து நிற்கிறது. அதே காலம் வேறொரு காலமென ஏமாற்றியபடி உங்களுக்கும் எனக்கும் பொதுவானதாகச் மறுபடி சுழலப்போகிறது. முரகாமி சொன்னது போல, Time weighs down on you like an old ambiguous dream. எப்போதும் தொடர்கிற இதே வினோதத்தில் சென்ற வருடம் மட்டும் மிகச் சுவாரசியமான மாறுதல். அழுத்தந் திருத்தமாக  உச்சரிக்கப்பட்ட சொல்லைப் போல, நிதானமாக பெறப்பட்ட முதல் முத்தத்தைப் போல முதல் முறையாக கோடையும், உறைகாலமும், இலையுதிர்காலமும், வசந்தமும் என் முன்னே திருத்தமாக அரங்கேறி முடிந்திருக்கின்றன. பனியும், புற்களும், இலைகளும் கால்களை புதைக்க புதைக்க அதே சாலையில் அதே சிந்தனைகளுடன் மீண்டும் மீண்டும் நான் நடந்து கொண்டேயிருக்கின்றேன். ஐந்தாம் முறையாக அதே காட்சி ஜனவரியில் தொடங்கியிருக்கிறது.</p>
<p>நேற்று இரவு சட்டென <a href="http://www.youtube.com/watch?v=HQfOFVMth5Q&amp;feature=player_embedded" target="_blank">Father And Daughter</a> குறும்படம் நினைவிற்கு வந்தது. சதா சுருங்கிக்கொண்டேயிருக்கிற மேகங்கள், பின்னோக்கி பறக்கிற நினைவுப் பறவைகள், மாறிக்கொண்டேயிருக்கிற பருவங்கள், துல்லியம் மாறாமல் பதிகிற நிழல்கள் கடக்கிற பிம்பங்கள், பெருகியும் வற்றியும் போகிற நதிகள், எதிர் திசையில் கடக்கிற அதே யாரோ, காலமெனும் பல்லாயிரக்கணக்கான சக்கரங்கள் பலபலப்பரை பலப்பல நிலைகளில் வைத்து நேராகவும் தலைகீழாகவும் சுற்ற வைக்கிற அதே நாடகம், எத்தனை காலத்திற்குப் பிறகும் உள்ளே மாறாமல் இருக்கிற அதே உணர்வுகள் என ஒவ்வொரு கணமும் பிரமிப்பான உயிர்ப்பான குறும்படம். மிகச்சுலபமாக நெஞ்சை நிறைக்கிற இசை. இப்படத்தை நீங்கள் பார்த்தால், உங்களைச் சந்திக்கையில் தேநீருடன் உரையாட நமக்கொரு விஷயம் இருக்கிறது.</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/sirumazai.wordpress.com/1289/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/sirumazai.wordpress.com/1289/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/sirumazai.wordpress.com/1289/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/sirumazai.wordpress.com/1289/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/sirumazai.wordpress.com/1289/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/sirumazai.wordpress.com/1289/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/sirumazai.wordpress.com/1289/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/sirumazai.wordpress.com/1289/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/sirumazai.wordpress.com/1289/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/sirumazai.wordpress.com/1289/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/sirumazai.wordpress.com/1289/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/sirumazai.wordpress.com/1289/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/sirumazai.wordpress.com/1289/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/sirumazai.wordpress.com/1289/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sirumazai.wordpress.com&amp;blog=312050&amp;post=1289&amp;subd=sirumazai&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://sirumazai.wordpress.com/2012/01/27/%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%95%e0%af%81-%e0%ae%87%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/696d6f93a60d344ddad261acf7b4259e?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">aravind</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>என்னமோ ஏதோ</title>
		<link>http://sirumazai.wordpress.com/2011/12/05/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8b-%e0%ae%8f%e0%ae%a4%e0%af%8b/</link>
		<comments>http://sirumazai.wordpress.com/2011/12/05/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8b-%e0%ae%8f%e0%ae%a4%e0%af%8b/#comments</comments>
		<pubDate>Mon, 05 Dec 2011 04:11:23 +0000</pubDate>
		<dc:creator>aravind</dc:creator>
				<category><![CDATA[தொடர்]]></category>

		<guid isPermaLink="false">http://sirumazai.wordpress.com/?p=1276</guid>
		<description><![CDATA[நூறு சதவீத பாலியஸ்டரால் ஆனது என்னுடைய சாக்லேட் நிற போர்வை. (ஓப்பனிங் வித்தியாசமா இருக்கா?). பார்த்தவுடனே எடுத்துக் கட்டிக்கொள்ள அழைக்கிற நாய்க்குட்டி போல ப்ளாஸ்டிக் கவரில் மெத்தென அமைதியாக அடைந்திருந்ததை பார்த்ததுமே, ‘அது தான் வேணும்’ என்று பக்கத்திலிருந்த டேபிளை பிடித்துக்கொண்டு ஒற்றைக் காலில் நின்று வாங்கினேன். இந்தியாவிலிருந்து அப்போதே புத்தம் புதிதாக இறங்கியிருந்ததாலும் ஜனவரி மாதம் ஆதலாலும் குளிரிலும் தூக்க கலக்கத்திலும் இரு வாரங்கள் போர்வையினுள் ஒளிந்திருந்தேன். மூன்றாம் வாரம் தூக்கம் தப்பி விழித்திருந்த ஒரு [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sirumazai.wordpress.com&amp;blog=312050&amp;post=1276&amp;subd=sirumazai&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>நூறு சதவீத பாலியஸ்டரால் ஆனது என்னுடைய சாக்லேட் நிற போர்வை. (ஓப்பனிங் வித்தியாசமா இருக்கா?). பார்த்தவுடனே எடுத்துக் கட்டிக்கொள்ள அழைக்கிற நாய்க்குட்டி போல ப்ளாஸ்டிக் கவரில் மெத்தென அமைதியாக அடைந்திருந்ததை பார்த்ததுமே, <em>‘அது தான் வேணும்’</em> என்று பக்கத்திலிருந்த டேபிளை பிடித்துக்கொண்டு ஒற்றைக் காலில் நின்று வாங்கினேன். இந்தியாவிலிருந்து அப்போதே புத்தம் புதிதாக இறங்கியிருந்ததாலும் ஜனவரி மாதம் ஆதலாலும் குளிரிலும் தூக்க கலக்கத்திலும் இரு வாரங்கள் போர்வையினுள் ஒளிந்திருந்தேன். மூன்றாம் வாரம் தூக்கம் தப்பி விழித்திருந்த ஒரு நள்ளிரவில் சட்டென தோன்றிய இத-வெச்சு-ஒரு-போஸ்ட்-எழுதலாமே ஐடியாவினால் கொஞ்சம் வேகமாக திரும்பிப் படுத்ததில் போர்வை தன்னோடு தானே உரசிக்கொண்டு ஒரு நெருப்புப்பொறி. அலறியடித்துக்கொண்டு எழுந்து மொபைல் வெளிச்சத்தில் போர்வையை ஆராய்ந்து பார்த்து மோப்பம் பிடித்துப் பார்த்தும் ஒன்றும் விளங்காததால், எப்போதும் வேண்டுமானாலும் தீப்பிடிக்கக் கூடிய பொருளாக போர்வை பகல் வரை ஓரமாக கிடந்தது. அடுத்த நாள் அறையிலிருந்த எல்லாரும் மாற்றி மாற்றி, static electricity என்றால் என்ன என்று எப்போதோ பள்ளியில் படித்த ரெண்டு மார்க் கேள்விக்கு பத்தி பத்தியாக விளக்கம் அளித்தார்கள். (நிச்சயமாக நான் விளக்கப் போவதில்லை). கடைசியில் தங்கிய கசடு இது தான் – என் போர்வையில் கரண்ட் இருக்கிறது. (இது ஒரு மொழிபெயர்ப்பு கவிதை தலைப்பாக இருக்க நேர்ந்தால் ஆச்சரியப்பட மாட்டேன்)</p>
<p>இரண்டு மாதங்கள் நானும் இந்த ஐடியாவுடன் ரொமான்டிஸைஸ் செய்து பார்த்தேன். நான் சிறிய குழந்தை போலவும் போர்வையை கசகசக்கி ‘சிக்கிமுக்கி நெருப்பு பாரு’ என்று விளையாடுவதாகவும்; சில சமயங்களில் அஞ்சலி பாப்பா போலவும் சிரித்தும் பார்த்தாயிற்று. வீட்டுக்கு வருபவர்களில் குழந்தை மனம் கொண்டவர்களையும் புத்தம் புது இந்திய ஏற்றுமதிகளையும் தேர்ந்தேடுத்து, ‘இங்க பாரேன்’ என்று காட்டி மகிழ்ந்தாயிற்று. ’இரவெல்லாம் / அசையாத மின்மினிப்பூச்சி / அணைக்கப்படாத லேப்டாப்’ என்று யோசித்திருந்த ஹைக்கூவை ரத்து செய்துவிட்டு அதை முழு நீள போர்வைக் கவிதையாக விரிக்கும் எண்ணம் உடனடியாக அமலுக்கு வந்தது. பலப்பல உணர்ச்சிகரமான கதைச் சந்தர்ப்பங்களில் கதை மாந்தர்கள் இதைப் பற்றி பேசினால் எப்படியிருக்கும் என்று பேச வைத்து பாதியில் வெடுக்கென டயலாக் பேப்பரை பிடுங்கியுமாயிற்று. சரியாக மூன்றாவது மாதம் போரடிக்க ஆரம்பித்து விட்டது. ரொமான்டிசிஸம் முடிந்தது ரியாலிசம் வந்தது.</p>
<p>இதனால் ஷாக் அடிக்குமோ? தீப்பிடிக்குமா? இதை தவிர்க்க வழியில்லையா? தோலில் ஏதேனும் தீக்காயங்கள் ஏற்படுமா என்பன போன்ற நிபுணருடன்-பேசுங்கள்-பொதிகை-தொலைகாட்சிக்-கேள்விகள் கூகிளில் ஆங்கிலத்தில் தேடப்பட்டன. (“polyster blanket static electricity”, “bizarre static electricity incidents”, “static electricity kills software engineer” ஆகிய தேடுபொறிகள் பயன்படுத்தப்பட்டன). கூகிள் பெரிதாக பயப்படத் தேவையில்லை என்று சொன்னது மட்டுமல்லாமல், இது க்யூட்டான விஷயம் என்று பந்தயம் கட்டியவர்களின் பாஸ்போர்ட் புகைபடங்களை காட்டியது. உயிருக்கு ஏதும் ஆபத்தில்லாத விஷயமில்லாததால், மிஸ்டர்.சோம்பேறித்தனம் விஷயத்தை தன் கையில் எடுத்துக்கொண்டுவிட்டார். [கவிதை மொழி அலர்ட்] கோடைக்காலம் வந்ததும் மினிமினிப்பூச்சிகளும் மெல்ல என் போர்வையிலிருந்து தொலைதூரம் பறந்து போயின. [அலர்ட் ஓவர்]. நவம்பர்  வந்ததிலிருந்து [அலர்ட்] பனிக்காலப் பூச்சிகள் போல மீண்டும் போர்வையெங்கும் பொறிகள் [/அலர்ட்]. தண்ணீர் குடிக்க எழுந்திருக்கையில், படுக்கையை சரிசெய்கையில், சாமி சத்தியமாக யாருமே எதுவுமே அசையாத சமயத்தில் என சும்மா சும்மா மின்மினிப்பூச்சிகள் வந்துகொண்டிருந்தால் எப்படி? என்பதே கடைசிக் கேள்வி. என் மனதையும் போர்வையையும் மாற்றக்கூடிய அனுபவங்கள் அதிர்ச்சி சம்பவங்கள் இருந்தால் கமெண்ட்டில் சொல்லவும்.</p>
<p>[போர்வை / மின்மினிப்பூச்சிகள் கான்ஸெப்ட்டை புதுக்கவிதையில் உபயோகிக்க விரும்புபவர்கள் முறையாக இப்பதிவை லிங்க் செய்யவும்]</p>
<p>[..]</p>
<p><img class="alignleft size-full wp-image-1285" title="27SRI-RAMA-RAJYAM2.jpg.crop_display" src="http://sirumazai.files.wordpress.com/2011/12/27sri-rama-rajyam2-crop_display.jpg?w=700" alt=""   />இந்த வருடம் வெளிவந்த திரைப்படங்களில் மொத்தம் இரண்டே இரண்டு தமிழும் இரண்டு ஹிந்தியும் மட்டுமே பார்த்திருந்தாலும், தைரியமாக போர்வையிலிருந்து வெளியே வந்து ‘2011ன் சிறந்த காதல் ஜோடி’ ராமரும் சீதாவும் தான் என்று பந்தயமே கட்டுவேன். [ஸ்ரீராமராஜ்யம் – தெலுங்கு – பாலகிருஷ்ணா, நயன்தாரா]. சீதையும் ராமரும் வனவாசம் முடிந்து திரும்பி அயோத்திக்கு வருவதுடன் துவங்குகிற திரைப்படம் சீதையை மீண்டும் சந்தேகித்து காட்டுக்கு அனுப்புவது, லவ-குசா பிறப்பு, அப்பாவுடன் மகன்கள் போர் தொடுப்பு என்ற பாதையில் ஏராளமான ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளுடனும் க்ராஃபிக்ஸ் மான்கள் மரங்களுடனும் பயணிக்கிறது. இன்னும் ‘ராவணன்’ தந்த பிரமிப்பே தீராத நிலையில், ராமரை என்னவென்று எதிர்பார்த்து சென்றிருந்தேன் என்று எனக்கே தெரியவில்லை. ராமர் மிகுந்த காதல் கொண்ட கணவனாக, சாதரணனாக வந்தது சுவாரசியமாக இருந்தது. துளியும் பக்தி இல்லாமல் வெறும் மனிதர்களின் கதையாக இருந்தது ஓரளவிற்கு படத்தை காப்பாற்றியது. எல்லாவற்றுக்கும் மேலாக, சீதையும் ராமரும் ஒன்றாக நான்கைந்து காட்சிகளில் தோற்றமளித்தாலும், இரண்டு காட்சிகளில் காதல் பொங்கி வழிந்தது.</p>
<p>ஊரார் சீதையின் கற்பை சந்தேகித்துப் பேசியதை அறிந்து அதிர்கிற ராமர், (பாலகிருஷ்ணாவின் ரியாக்‌ஷன் டாப் க்ளாஸ்!), ராஜ்ஜியத்தை துறந்து விட்டு சீதையுடன் காட்டுக்கே போவதாக கதறியும் தம்பிகள் கிரீடத்தை ஏற்க மறுக்க, தன்னுடைய கர்மா இதுதானென சமாதானமடைந்து சீதையை அடுத்த நாள் அதிகாலை ஏதும் சொல்லாமல் அழைத்துச் சென்று காட்டில் விட்டுவிட லட்சுமணனை பணிக்கிறார். கட்டளை பிறப்பித்துவிட்டு ஊஞ்சலில் பச்சைப் பட்டாடையில் சித்திரம் போல தூக்கத்தில் ஆழ்ந்திருக்கும்     சீதையின் (நயன்தாரா கொள்ளை அழகு! யாய்!) காலருகே கன்னம் சாய்த்து கண்ணீர் விட்டு விடைகொடுக்கும் காட்சி ஏனோ பளிச்சென மனம் தொட்டது. ராமர் இத்தனை காதலுக்கு உருகுவாரா என்று சந்தேகம் இருந்தது எனக்குப் புரிந்தது, புரிந்தவுடன் ப்ருத்விராஜ் அணிந்திருந்த கறுப்புக் கண்ணாடியை கழற்றி கிளம்ப சொல்லிவிட்டு அந்த இடத்தில் பாலகிருஷ்ணாவை கிரீடத்துடன் அமரச் செய்தேன். இரண்டாவது காட்சி &#8211; காட்டில் தனியே வாழ்ந்துகொண்டிருக்கும் சீதை ராமர் நடத்தவிருக்கும் அஸ்வமேத யாகம் குறித்து கேள்விப்பட்டு தம்பதி சமேதராக மட்டுமே யாகம் நடத்தவியலும் என்பதால் ராமர் மறுமணம் புரிந்திருக்கக்கூடும் என்று வருந்துகிறார். வருத்தத்தை நீக்க விசுவாமித்திரர் சீதையை மனதை அயோத்திக்கு அனுப்பி வைக்கிறார். ராமரின் அறைக்குள் செல்லும் சீதை அங்கே தன்னுடைய தங்க விக்கிரஹம் இருப்பதைக் கொண்டு கொள்ளை இன்பமும் துன்பமும் ஒரு சேர அடைந்து அதை வைத்தே யாகம் நடக்கவிருப்பதை அறிந்து நிம்மதி அடைவது காட்சி. அக்காட்சியில் ராமர் வந்து சிலையிடம் பேசுவதும் சீதையின் வாசம் அறிந்து துடிப்பதும் – அட, கண்களில் நீலு சார்!. நயன்தாராவின் கடைசி படம் என்று பரவலாக பேச்சு – வேறு எந்த ஸ்டார் நடிகை இப்பாத்திரத்தில் நடித்திருந்தாலும் அது அவர்கள் அவர்களையே கேலி செய்துகொண்டது போலிருந்திருக்கும் என்பதையே நாம் இவருக்கு பாராட்டாக கொடுக்கலாம். ஒரு நந்தி அவார்டு ப்ராப்பிரஸ்த்து!</p>
<p>தியேட்டரை விட்டு வந்தபிறகும் இவ்விரண்டு காட்சிகளும் மனதில் வட்டமிட்டுக்கொண்டே இருக்க, இரண்டு விஷயங்கள் தெளிவாயின – ஒன்று இக்காட்சிகளில் பாலகிருஷ்ணா, நயனின் அழகான நடிப்பையும் மீறி ராஜாவின் பிண்ணனி இசை ஒரு சொட்டு தேன் போல இனிமை ஏற்றியிருக்கிறது. (இரண்டாவது காட்சியின் இசை <a href="http://soundcloud.com/pkiran/sri-rama-rajyam-theme-track-1" target="_blank">இங்கே</a>); இன்னொறு &#8211; ராஜாவை விட வேறு யாருக்கும் இப்படி #kolaveri விசிறியாக இருக்க என்னால் இயலாது.</p>
<p>மனைவியின் மரணத்திற்குப் பிறகு மனிதர் என்ன செய்துகொண்டிருக்கிறார்? எழுபதை தொடப் போகிறவரை யார் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்? சாப்பாடு, தூக்கம் என யார் உடனிருந்து கவனிக்கிறார்கள்? மனதுக்கு நெருக்கமான கலைஞர்களின் சொந்த வாழ்க்கை துயரங்கள் எப்படி நம்மை அலைகழிக்கக் கூடும் என்பது விசித்திரம். மனம் வருந்திக்கொண்டிருந்த சமயத்தில், பக்கத்து தியேட்டரில் ஸ்ரீராமராஜ்யம் படம் என்றதும் ராஜாவுக்காக டிக்கெட் வாங்கிச் சென்று அமர்ந்து விட்டேன். இந்த இரண்டு காட்சிகளும் மனிதருக்கு இன்னும் ஒரு யுகத்திற்கு காதல் காட்சிகளுக்கு இசையமைப்பதற்கான longing அவரது மனதிலும் இசையிலும் இருப்பதையே காட்டின. டிசம்பரில் நேரில் சந்திக்க வருவதாக அறிவிக்கவும் <a href="http://www.youtube.com/watch?v=tHhRDapoS7k&amp;feature=player_embedded" target="_blank">செய்திருக்கிறார்</a>. சென்னைவாசிகள் கொடுத்து வைத்தவர்கள்.</p>
<p>[..]</p>
<p>காக்கை எத்தனை முயன்றாலும் என்னவோ ஆக முடியாது என்றொரு பழமொழி இருக்கிறது. ஆனால் Crow-pheasant என்றொரு குயிலினமாக ஆக வாய்ப்பிருக்கிறது, சங்கக் காலப் போர்க்களப் பாடலை பொறுத்தவரையில்.</p>
<p>தெரிகணை யெஃகந் திறந்தவர் யெல்லாம்</p>
<p>குருதி படிந்துண்ட காகம் – உருவிழந்து</p>
<p>குக்கிற் புறத்த சிரல்வாய செங்கண்மால்</p>
<p>தப்பியா ரட்ட களத்து</p>
<p>போர்களத்தில் கிடந்த பிணங்களில் அம்புகள் பட்டுத் திறந்த இடங்களிலெல்லாம் இருந்த இரத்தத்தை வாய் வைத்த குடித்த காகங்கள், தங்கள் அலகில் ரத்தமேறி மீன்கொத்திப் பறவைகள் போலவும், உடலில் ரத்தம் படிந்து குக்கு – crow pheasant – போல உருமாறியதாக களவழி நாற்பதில் சொல்லப்படுகிறது. போரைக் காட்டிலும் உக்கிரமாக இருக்கும் இந்த வர்ணனை உலக சினிமாக்களில் பார்த்த அப்பட்டமான வன்முறைக் காட்சிகளைக் கூட வீழ்த்திவிடும்.</p>
<p>பெரும்பாலும் யானைகள், அவற்றின் மீது ரத்தம், செம்மலை போன்ற யானைகளின் தோற்றம், ரத்த ஆறு என்பன போன்ற உவமைகள் நிரம்பியிருக்கிற நாற்பது பாடல்களில் ஈர்த்த இன்னொறு வர்ணனை &#8211; போரில் இறந்தவர்கள் குடல்களை தின்ற பருத்த நரி சண்டையில் சாய்ந்து கிடக்கும் வெண்கொற்றக் குடையின் ஓரமாக தூங்கிற காட்சி, முழு நிலவில் ஓரமாகத் தோன்றும் முயல் களங்கம் போலிருந்ததாம்! Terrific!</p>
<p>[..]</p>
<p>ஒரு தமிழ் சினிமா க்விஸ். முதல் படங்கள், இயக்குனர்-நடிகர்கள், துணை நடிகர்கள் என்ற பொது அம்சத்தை வைத்து உருவாக்கியது.</p>
<p>நடிகை A இயக்குனர்-நடிகர் Bயின் திரைப்படத்தில் அறிமுகமானார். இப்படத்தில் Cயும் Dயும் துணை கதாபாத்திரங்களில் தோன்றினார்கள்.</p>
<p>B நடிகராக முதன்முதலில் ஒரு காட்சியில் தலைகாட்டியது நடிகர் E ஹீரோவாக நடித்த படத்தில். பின்னாளில், E நடித்த படமொன்றை B எழுதினார்.</p>
<p>Cயும் Eயும் ஜோடியாக ஒரே ஒரு படம் மட்டுமே நடித்தார்கள். A அப்படத்தில் தன்னுடைய முதல் படம் போன்றே ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.</p>
<p>நடிகை Fயும் Eயும் இணைந்து நடித்த மிகப்பிரபலமான படத்தை இயக்கியவர் G. இதில் D தன் முதல் படம் போன்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.</p>
<p>பலப்பல அருமையான படங்களை இயக்கிய G முதன் முதலில் Eயை நாயகனாக வைத்து எடுத்த படத்தில் ஒரு வேடத்தில் தோன்றினார்.</p>
<p>ஏராளாமான வருடங்களுக்குப் பிறகு, E எழுதி நடித்த படமொன்றில் Dயும் Fம் துணை கதாபாத்திரங்களில் தோன்றினார்கள்.</p>
<p>பின்னர், D இயக்கிய படத்தில் ஹீரோவாக நடித்து இந்த காம்ப்ளெக்ஸான நடிகர்-இயக்குனர் சைக்கிளை முடித்து வைக்கிறார் E.</p>
<p>Aயிலிருந்து F வரை அடையாளம் காண்க. ஒரு க்ளு – சம்பந்தப்பட்ட புள்ளி ஒருவர் தெலுங்கில் தான் பிரபலம். ஆனால் இங்கே குறிப்பிடப்பட்ட படங்கள் தமிழிலும் உண்டு.</p>
<p>[..]</p>
<p>நீங்கள் படித்துக்கொண்டிருக்கிற பதிவர் மாற்றத்தை விரும்புகிறார் என்று எது உங்களுக்கு சுட்டிக்காட்டிகிறது?</p>
<p>அ) இதுவரை ‘தேநீரில் சினேகிதம்’ என்ற தலைப்பில் அரைத்துக்கொண்டிருந்ததை ‘என்னமோ ஏதோ’வாக அரைக்கிறார்.</p>
<p>ஆ) ரொம்ப நாட்களாக பதிவெழுதாதவர் இப்போது திடீரென பதிவெழுத முயல்கிறார்</p>
<p>இ) பத்திகளை கொண்டு ***** பிரிப்பவர் விசித்திரமாக ‘[**]’ கொண்டு பிரித்திரிக்கிறார்.</p>
<p>சரியான விடை அடுத்த என்னமோ ஏதோவில்.</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/sirumazai.wordpress.com/1276/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/sirumazai.wordpress.com/1276/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/sirumazai.wordpress.com/1276/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/sirumazai.wordpress.com/1276/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/sirumazai.wordpress.com/1276/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/sirumazai.wordpress.com/1276/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/sirumazai.wordpress.com/1276/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/sirumazai.wordpress.com/1276/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/sirumazai.wordpress.com/1276/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/sirumazai.wordpress.com/1276/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/sirumazai.wordpress.com/1276/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/sirumazai.wordpress.com/1276/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/sirumazai.wordpress.com/1276/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/sirumazai.wordpress.com/1276/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sirumazai.wordpress.com&amp;blog=312050&amp;post=1276&amp;subd=sirumazai&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://sirumazai.wordpress.com/2011/12/05/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8b-%e0%ae%8f%e0%ae%a4%e0%af%8b/feed/</wfw:commentRss>
		<slash:comments>9</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/696d6f93a60d344ddad261acf7b4259e?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">aravind</media:title>
		</media:content>

		<media:content url="http://sirumazai.files.wordpress.com/2011/12/27sri-rama-rajyam2-crop_display.jpg" medium="image">
			<media:title type="html">27SRI-RAMA-RAJYAM2.jpg.crop_display</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>நீட்சி</title>
		<link>http://sirumazai.wordpress.com/2011/10/31/%e0%ae%a8%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/</link>
		<comments>http://sirumazai.wordpress.com/2011/10/31/%e0%ae%a8%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/#comments</comments>
		<pubDate>Mon, 31 Oct 2011 04:06:53 +0000</pubDate>
		<dc:creator>aravind</dc:creator>
				<category><![CDATA[சிறுகதை]]></category>
		<category><![CDATA[கதை]]></category>

		<guid isPermaLink="false">http://sirumazai.wordpress.com/?p=1273</guid>
		<description><![CDATA[குகைக்குள் நுழைந்து திரும்பும் பறவை போல ஜிபிஎஸ் கார் திரும்பிய திசையில் தன் வான்பார்வையை திருப்பி இன்னும் இரண்டரை மைலில் என் பயணம் முடியப்போகிறது என்று சொல்கிறது. ரோஜாப்பூ நிறத்தில் நான் செல்கிற சாலையை சுட்டிக் காட்டியபடி அதன் இருபுறத்திலும் வெறும் பச்சைவெளிகளும் மலைகளும் இருப்பதை மலிவான க்ராஃபிக்ஸில் வரைந்து காட்டுகிறது. பதிவு செய்யப்பட்ட பெண் குரல் நிதானமாக அடுத்த இரண்டு திருப்பங்களைப் பற்றி அதிகாரமில்லாமல் சொன்னது. கடந்த பத்து மைல்களாகவே இந்த சாலையில் யாரும் பயணிப்பதாக [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sirumazai.wordpress.com&amp;blog=312050&amp;post=1273&amp;subd=sirumazai&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>குகைக்குள் நுழைந்து திரும்பும் பறவை போல ஜிபிஎஸ் கார் திரும்பிய திசையில் தன் வான்பார்வையை திருப்பி இன்னும் இரண்டரை மைலில் என் பயணம் முடியப்போகிறது என்று சொல்கிறது. ரோஜாப்பூ நிறத்தில் நான் செல்கிற சாலையை சுட்டிக் காட்டியபடி அதன் இருபுறத்திலும் வெறும் பச்சைவெளிகளும் மலைகளும் இருப்பதை மலிவான க்ராஃபிக்ஸில் வரைந்து காட்டுகிறது. பதிவு செய்யப்பட்ட பெண் குரல் நிதானமாக அடுத்த இரண்டு திருப்பங்களைப் பற்றி அதிகாரமில்லாமல் சொன்னது. கடந்த பத்து மைல்களாகவே இந்த சாலையில் யாரும் பயணிப்பதாக தெரியவில்லையாதலால் சுழல்தட்டு இசை அனுமதிக்கப்பட்ட உச்ச வரம்பு வேகத்தில் காரை செலுத்திக்கொண்டிருந்தது. காற்றும் காரும் சுமார் மூன்று மைல்களை சல்லென விழுங்கி முடித்திருக்கக்கூடிய நேரத்தில் சந்தேகம் எழுந்து ஜிபிஎஸ்ஸை பார்க்க அது ஒளியிழந்திருந்தது. நம்ப முடியாதவனாக பார்வையை கூராக்கி பார்த்தும் அது அணைந்தே இருந்தது. ஒரு மைல் தாண்டி சாலையோரமாக வீக்கம் போல அகலமாக வளைந்து  இழுக்கப்பட்டிருந்த சிறிய கிளைச் சாலையில் ஒதுங்கி காரை நிறுத்தினேன். அடுத்த இரண்டு திருப்பங்களைப் பற்றி ஜிபிஎஸ் சொன்னது வந்த வேகத்தில் எங்கோ நினைவிலிருந்து நழுவியிருந்தது.</p>
<p>&nbsp;</p>
<p>ஜிபிஎஸ்ஸை எடுத்து மீண்டும் இயக்கிப் பார்த்தும் ஏதும் பலனில்லை. ஐஃபோன் கையில் இல்லை. சுமார் நூற்றியறுபது மைல்கள் வீட்டைத் தாண்டி முதன் முறையாக இந்த அமெரிக்க மாகாணத்திற்கும் இடத்திற்கும் வந்துகொண்டிருப்பதால் அடுத்த திசை என்னவென்று தெரியவில்லை. சென்றடைய வேண்டிய இடம் ஒரு இசைப்பள்ளி என்பதைத் தவிர மூளையில் எதையும் பதிக்கவில்லை. ஆளில்லாத சாலையில் தனியாக நின்றுகொண்டிருந்தேன். இந்தியாவில் இப்போது நேரம் மாலை ஆறரை இருக்கும். அப்பாவை அழைத்தேன்.</p>
<p>&nbsp;</p>
<p>‘கண்ணா?’</p>
<p>&nbsp;</p>
<p>‘அப்பா, வீட்லயா இருக்கே?’</p>
<p>&nbsp;</p>
<p>‘இல்ல, சுகந்தி வீட்டுக்கு வந்திருக்கேன், ஏன் கண்ணா?’</p>
<p>&nbsp;</p>
<p>‘ஓ. இல்ல அட்ரெஸ் மறந்திட்டேன்’</p>
<p>&nbsp;</p>
<p>‘அடடா. ம்ம்ம்.. ஸ்லேட்டர் ஸ்ட்ரீட்னு நினைக்கிறேன் கண்ணா, சரியா நினவில்ல’</p>
<p>&nbsp;</p>
<p>‘எப்போ மறுபடி வீட்டுக்குப் போகப் போறே?’</p>
<p>&nbsp;</p>
<p>‘நைட் இங்க தான் தூங்கச் சொல்லியிருக்கா அவ. மாப்பிள்ளையும் சொல்றார்’</p>
<p>&nbsp;</p>
<p>‘சரி சரி’</p>
<p>&nbsp;</p>
<p>‘வீட்டுக்குப் போயி பாத்து சொல்லவா?’</p>
<p>&nbsp;</p>
<p>’வேண்டாம் வேண்டாம், நான் பாத்துக்குறேன்’</p>
<p>&nbsp;</p>
<p>‘சரி’.</p>
<p>&nbsp;</p>
<p>அலைபேசியை அணைத்துவிட்டு காற்று கலைத்த தலைகேசத்தை சரிசெய்தேன். காற்று ஒரு இடைவெளிவிட்டு மீண்டும் பலத்துடன் வீச, நினைவுகளை எடுத்து புரட்டியது போல ‘0.6 மைலில் வலதில் திரும்பவும்’ என்று ஜிபிஎஸ் சொன்னது நினைவுக்கு வந்தது. வந்த வழியே மீண்டும் சென்று முதல் இடது திருப்பத்தில் திரும்பிக்கொண்டேன். மனதில் கணக்கிட்ட பொழுது சரியான இடத்தில் திரும்பியிருக்கிறேன் என்று பட்டது. இன்னும் ஒரே திருப்பம் மட்டுமே பாக்கி. காரை கிளப்பி நேரே சென்று கொண்டேயிருந்ததில், சாலை இறுதியில் இரண்டாக நேரெதிராக பிரிந்து சவால் விட்டது. மீண்டும் நல்ல இடம் பார்த்து காரை ஓரங்கட்டினேன். மலையை நெருங்கிக்கொண்டிருப்பதால் நிறைய மரங்களும் அடர்ந்த நிழலுமாய் சூழ்நிலை ரம்மியமாக மாறியிருந்தது. அப்பாவை அழைத்து அட்ரெஸை பார்க்கச் சொல்லிவிடலாமா என்று நினைத்தேன். ஸ்டியரிங்கில் கைகளை அழுந்த வைத்து யோசித்துக்கொண்டிருக்கையில் வலது பக்கத்திலிருந்து மட்டும் நிறைய பறவைகளின் ஒலிகள் கேட்டபடி இருந்தது புலப்பட்டது. கூர்ந்து கவனித்து நிச்சயப்படுத்திக்கொண்டு, என்ன தோன்றியதோ காரை வலதில் திருப்பி மெதுவாக சென்றுகொண்டே இருந்தேன். ஒரு மிகச்சிறிய கிளைச்சாலையின் முடியில் நான் தேடிவந்த இசைப்பள்ளி பெரிய வாயிலுடன் நின்றுகொண்டிருந்தது.</p>
<p>&nbsp;</p>
<p align="center">****</p>
<p>&nbsp;</p>
<p>கடந்த காலத்திலிருந்து மீண்டு வருவது போல தொலைதூரத்திலிருந்து ஒரு பெருமேகம் மெல்ல எங்களை உற்று பார்த்தபடி நகர்ந்து வந்து கொண்டிருந்தது. மலையுச்சியிலிருந்த அந்த பள்ளியின் முன்னே விரிந்திருந்த வெளியில் ஒரு மர பெஞ்ச்சில் மரத்தின் கீழே நானும் ரம்யாவும் அமர்ந்திருந்தோம். ரிஷப்ஷனிஸ்ட், ‘ராம்யா?’ என்று நிச்சயப்படுத்திக்கொண்ட ரம்யா. ‘ஃப்ரெண்ட்ஸ் கால் மீ ரம்’ என்றுட் தன்னைத் தானே அறிமுகப்படுத்திக்கொண்ட ரம்யா. அழுக்கேறிய ஜீன்ஸும் பச்சை நிற டிஷர்ட்டும் அச்சு அசல் தமிழ் முகமும் குரலும் கொண்டிருந்தாலும், ஓவியத்தின் நிறத்திற்கு கொஞ்சமும் தொடர்பில்லாத வண்ணத்தில் வரைந்த வெளிக்கோடு போல இருபது வருட அமெரிக்க வாழ்க்கை அவளை தன்னுள் முற்றிலுமாக வாங்கியிருந்தது. கையில் வைத்திருந்த பேப்பர் கட்டை எங்களிருவருக்கிடையில் வைத்தேன். அவள் மீண்டுமொரு முறை தன் வயலினை தூரமாக நகர்த்த முற்பட்டாள். ‘நோ, தட்ஸ் ஃபைன்’ என்று சொல்லிவிட்டு பேசுவதற்கு தயாரானேன்.</p>
<p>&nbsp;</p>
<p>‘தமிழ் புரியுமா?’</p>
<p>&nbsp;</p>
<p>‘நல்லா, பேச தான் கொஞ்சம் கஷ்டம்’</p>
<p>&nbsp;</p>
<p>’யு ஆர் ஃபைன். அண்ட் திஸ் ஈஸ் வாட் ஐ ஹாவ் ப்ராட்’ என்று கடிதங்கள் நிரம்பிய கட்டினை எடுத்து நீட்டினேன்.</p>
<p>&nbsp;</p>
<p>‘உங்க மெயில் படிச்சேன். ஃப்ராங்க்கா சொன்னா, என்னால நம்ப முடில’</p>
<p>&nbsp;</p>
<p>‘எத?’</p>
<p>&nbsp;</p>
<p>‘தி ஃஹோல் திங்’</p>
<p>&nbsp;</p>
<p>‘ரியலி?’ சிரித்தேன்.</p>
<p>&nbsp;</p>
<p>‘திடீர்னு எப்படினு சந்தேகமா இருந்தது. நீங்க ஒரு தடவ திரும்ப சொல்றீங்களா?’ புன்னகைத்தாள். ‘மெயில்ல படிக்கறத விட நேர்ல கேக்கறது பெட்டர்ல? ஐ வாண்ட் டு ஹியர் இட்’</p>
<p>&nbsp;</p>
<p>‘ஷ்யூர் ஷ்யூர்’, எங்கே தொடங்குவது என்று யோசித்து, ‘உங்கப்பா ஒரு ரைட்டர்னு உங்களுக்கு.. ஐ மீன் யு நோ ரைட்?’</p>
<p>&nbsp;</p>
<p>‘கேள்விபட்டிருக்கேன்’</p>
<p>&nbsp;</p>
<p>‘ம்.. ஆக்சுவலி எனக்கு ரொம்ப தெரியாது.. உங்கப்பா பத்தியோ நீங்களும் உங்கம்மாவும் அவரோட ஏன் இருந்ததில்லங்கறதப் பத்தியோ.. சோ இதெல்லாம் நேர்ல பேசலாமான்னு எனக்குத் தெரியல’</p>
<p>&nbsp;</p>
<p>‘நோ ப்ராப்ளம். எனக்கே தெரியாது. யு வில் நாட் ஹர்ட் மீ’ புன்னகைத்தாள்.</p>
<p>&nbsp;</p>
<p>‘ரைட். திருச்சில எங்கப்பா போஸ்ட்மேனா இருந்தப்போ உங்கப்பா அங்க இருந்திருக்கார். நிறைய கதைகள், கவிதைகள் எழுதி பத்திரிக்கைக்கு அனுப்ப போஸ்ட் ஆஃபீஸுக்கு வரும் பொழுது அப்பாகிட்ட ஒண்ணு ரெண்டு வார்தை பேசுவாராம். அப்பாக்கு கொஞ்சம் படிக்கிறதில இண்டிரஸ்ட். உங்கப்பா பத்திரிக்கைக்கா அனுப்பறத பாத்துட்டு அப்பா ஒரு முற கேட்டு கதைய வாங்கி படிச்சிட்டு போஸ்ட் பண்ணாராம். அதுக்கு அப்புறம் எல்லா கதையையும் உங்கப்பா நேரா அப்பாகிட்ட குடுத்துட்டு போயிடுவாராம். அப்பா படிச்சிட்டு போஸ்ட் பண்றது வழக்கமாச்சாம். சுமார்..’ யோசித்து, ‘ஐ திங்க் ரெண்டு வருஷம் இப்படியே போச்சு’.</p>
<p>&nbsp;</p>
<p>‘இண்டரஸ்டிங். அம்மா சொல்லிருக்காங்க கதையெல்லாம் பத்திரிக்கைல வந்ததே இல்லனு’</p>
<p>&nbsp;</p>
<p>‘ஆமா. அந்த ரெண்டாவது வருஷத்துல உங்கம்மா இங்க அமெரிக்காவுக்கு வந்துட்டாங்கன்னும் நீங்க இங்க பொறந்தீங்கன்னும் அப்பா சொல்லியிருக்கார்’</p>
<p>&nbsp;</p>
<p>‘யா’.</p>
<p>&nbsp;</p>
<p>‘உங்கம்மா கெளம்பினதும் உங்கப்பா திருவனந்தபுரத்துக்கு இடம் மாறிட்டார். அங்கிருந்தும் அப்பாவுக்கு மொதல்ல கதைகள அனுப்பி வைப்பாராம். அப்பா படிச்சிட்டு போஸ்ட் பண்ணுவாராம். ஆனா படிச்சிட்டு பெருசா கருத்துன்னு எதுவும் சொல்லிகிட்டதில்ல. இன்ஃபாக்ட் ஜாஸ்தி எதும் பேசிகிட்டதில்லனு கூட நினைக்கிறேன். ஆனா அப்பாவுக்கு உங்கப்பா எழுதறது ரொம்ப பிடிக்கும்னு நினைக்கிறேன். இல்லனா இவ்வளவு மெனக்கெட மாட்டார்’</p>
<p>&nbsp;</p>
<p>‘அப்பாவ பிடிக்கும்கிறதால கூட இருக்கலாம்’</p>
<p>&nbsp;</p>
<p>‘யா. இருக்கலாம். ஒரு ஆறு மாசத்துக்கு அப்புறம் இனிமே பத்திரிக்கைக்கு எதும் அனுப்ப வேண்டாம்னு உங்கப்பா எழுதியிருந்தாராம். ஆனா அதுக்கு அப்புறமும் நிறைய கதைகள் அப்பாவுக்கு போஸ்ட்ல வந்துட்டே இருந்தது. அதுல நிறைய இன்கம்ப்ளீட்னு அப்பா சொல்லியிருக்கார். அப்பா எல்லாத்தையும் படிச்சு பத்திரமா வெச்சுகிட்டார். அடுத்த எட்டு மாசத்துல வந்த முப்பத்தி ஏழு லெட்டர்ஸ் தான் இது’ என்று பேப்பர் கட்டை நீட்டினேன்.</p>
<p>&nbsp;</p>
<p>’க்ரேட், சீர்யஸ்லி’ என்று அதை வாங்கிக்கொண்டாள்.</p>
<p>&nbsp;</p>
<p>‘ம்ம்.. உங்கப்பாவ நீங்க நேர்ல பாத்ததில்லல?’ கேட்கக்கூடாதென்று நினைத்த கேள்வி தொண்டையிலிருந்து முள்ளென நழுவி விழுந்தது.</p>
<p>&nbsp;</p>
<p>‘யெஸ்’</p>
<p>&nbsp;</p>
<p>‘ஐயாம் சாரி’</p>
<p>&nbsp;</p>
<p>‘தட்ஸ் ஓகே. அம்மா அங்கிருந்து கெளம்பும் போது நான் பொறக்கவே இல்ல. சோ நான் பாத்ததில்ல. ஒண்ணு ரெண்டு ஃபோட்டோஸ்ல பாத்தது. அவ்வளவு தான்’</p>
<p>&nbsp;</p>
<p>‘ம்’</p>
<p>&nbsp;</p>
<p>‘இங்க வந்தப்புறம் திரும்ப இந்தியா போனதேயில்ல. அப்பா சைட் ரிலேடிவ்ஸ் கிட்டயும் டச் இல்ல. அம்மா எப்பவாச்சும் பேசுவாங்க அவரப் பத்தி. ஷீ ஸ்டில் லைக்ஸ் ஹிம்’</p>
<p>&nbsp;</p>
<p>‘குட்’</p>
<p>&nbsp;</p>
<p>‘நீங்க மீட் பண்ணியிருக்கீங்களா எங்கப்பாவ?</p>
<p>&nbsp;</p>
<p>‘யா. ஆனா ரொம்ப ஞாபகமில்ல. எனக்கு அப்போ ஒரு ஏழு வயசிருக்கும். ஸ்பெக்ஸ் போட்டிருப்பார். நல்ல தடியா மீசையிருக்கும்’</p>
<p>&nbsp;</p>
<p>’ரைட்’</p>
<p>&nbsp;</p>
<p>‘இந்த லெட்டர்ஸெல்லாம் அப்பா ரொம்ப நாளா படிச்சுப் படிச்சு பத்திரமா வெச்சிருந்தார். என்ன தோணிச்சோ திடீர்னு உங்கள பத்தி எதாச்சும் தகவல் கிடைக்குதான்னு தேட ஆரம்பிச்சு எப்படியோ கண்டுபிடிச்சிட்டார். இத உங்ககிட்ட சேக்க சொல்லி போன முற வெக்கேஷன் போனப்ப கொடுத்தார். ஐ திங்க் ஹீ ஃபீல்ஸ் ஓல்ட். உங்ககிட்ட பத்திரமா இருக்கும்னு நினச்சிருப்பார்’</p>
<p>&nbsp;</p>
<p>‘ஹவ் ஈஸ் யுவர் டாட்?’</p>
<p>&nbsp;</p>
<p>‘ஹி ஈஸ் ஃபைன்’</p>
<p>&nbsp;</p>
<p>‘அம்மா?’</p>
<p>&nbsp;</p>
<p>‘ஷீ பாஸ்ட் அவே. நாலு வருஷம் முன்ன’</p>
<p>&nbsp;</p>
<p>‘ஓ. கஷ்டமா இல்லியா? இங்க தூரமா இருக்கிறது?’</p>
<p>&nbsp;</p>
<p>‘யா. இன்னும் ஒரு வருஷத்துல போயிடுவேன்’</p>
<p>&nbsp;</p>
<p>‘அவர் இங்க வந்திருக்காரா?’</p>
<p>&nbsp;</p>
<p>‘மாட்டார். பிடிக்காது’ சிரித்தேன்.</p>
<p>&nbsp;</p>
<p>‘ஈஸ் ஹி ஹாப்பி அபௌட் யு?’ முன்பின் தெரியாதவர்களால் தான் சில சமயம் இப்படி சுவாரசியமான அந்தரங்கமான கேள்வியை கேட்டுவிட முடிகிறது.</p>
<p>&nbsp;</p>
<p>‘ஆ.. ஐ திங்க் சோ’</p>
<p>&nbsp;</p>
<p>’குட். மை மாம் ஈஸ் ஹாப்பி அபௌட் மீ. அப்பா சந்தோஷப்பட்டிருப்பாரா தெரியல. அவர் நான் என்ன பண்ணுனும்னு நினச்சார், விருப்பப்பட்டார், ஹூ நோஸ்?’. என்று இடைவெளி விட்டவள். ’அப்பாவ கொஞ்சம் பாத்தது வெச்சு சொல்லுங்க. நான் அவர் ஜாடைல இருக்கேனா கொஞ்சமாச்சும்?’</p>
<p>&nbsp;</p>
<p>மீண்டும் அவள் முகத்தை கவனித்துப் பார்த்துவிட்டு, ‘தெரில. ஐ வுட் சே மே பி நாட்.’</p>
<p>&nbsp;</p>
<p>‘அம்மாவும் அதத் தான் சொல்றாங்க. நீங்க யார் ஜாடை? உங்க அப்பா எப்படி இருப்பார்னு யோசிச்சு பாக்க கேக்கறேன்’</p>
<p>&nbsp;</p>
<p>‘அம்மா. எல்லாமே அம்மா மாதிரி. பேச்சு, யோசிக்கிறது எல்லாம் அம்மா மாதிரியே’</p>
<p>&nbsp;</p>
<p>‘குட்’</p>
<p>&nbsp;</p>
<p>‘பட், யு நோ&#8230; ஸ்ட்ரேஞ்..’ என்ன சொல்ல முனைகிறேன் என்று எனக்கே புரியாதது போல நிறுத்தினேன்.</p>
<p>&nbsp;</p>
<p>புருவங்களை உயர்த்தினாள்.</p>
<p>&nbsp;</p>
<p>‘இன்னிக்கு மே பி கேட்டா அப்படியில்லனு சொல்லத்தோணுது’</p>
<p>&nbsp;</p>
<p>‘ஏன்?’</p>
<p>&nbsp;</p>
<p>‘டோன்னோ. ஜஸ்ட் லைக் தட். ஸ்ட்ரேஞ். வெரி’ தோள்களை குலுக்கினேன்.</p>
<p>&nbsp;</p>
<p>‘ம்’</p>
<p>&nbsp;</p>
<p>‘ரெண்டு கைலயும் ரெண்டு நூல் கட்டி தொங்கவிட்ட பொம்ம மாதிரி. என்னிக்கி எந்த நூல் இழுக்கும்னு எப்படி சொல்றது’</p>
<p>&nbsp;</p>
<p>பெரிதாக சிரித்தாள், உவமையை முழுதும் ரசித்தது போல. ‘ரைட்’ என்றாள்.</p>
<p>பேப்பர் கட்டை எடுத்துப் பார்த்தவள், ‘எனக்கு தமிழ் படிக்கக் கூட தெரியாது’ என்றாள். என்ன சொல்வதென்று தெரியாமல் புன்னகைத்தேன்.</p>
<p>’திருவனந்தபுரத்தில் இருந்து உங்கப்பா எழுதின மொதல் லெட்டர்லயே நீங்க பொறந்தத பத்தி எழுதியிருக்காராம்’</p>
<p>&nbsp;</p>
<p>‘ரியலி?’ என்று கடிதங்களைப் பார்த்தவள், ‘எனக்கிதுல செலது படிச்சு காட்டுறீஙகளா? என்றாள் சட்டென. நான் அதை முற்றிலும் எதிர்பார்த்திருக்கவில்லை. ‘ஆஹ்.. தமிழ் படிக்கிறது எனக்கு கொஞ்சம் கஷ்டம்’</p>
<p>&nbsp;</p>
<p>‘ஓ ஓகே’ என்றாள். ஏமாற்றம் குரலில் தென்பட்டது போல இருந்தது.</p>
<p>&nbsp;</p>
<p>‘சரி குடுங்க’</p>
<p>&nbsp;</p>
<p>‘ஒண்ணே ஒண்ணு படிச்சாக் கூட போதும்’</p>
<p>&nbsp;</p>
<p>‘சரி’ புன்னகைத்தேன். அப்பா எல்லாவற்றை தேதி வாரியாக அடுக்கி வைத்திருந்ததால், முதல் கடிதம் நிச்சயம் அவள் பிறந்ததைப் பற்றி எழுதியதாக இருக்கக்கூடும். அதை எடுத்துப் பிரித்தேன். உள்ளே ஒரு நீண்ட கதை இருந்தது. அதனுடன் ஒரு துண்டு பேப்பர்.</p>
<p>&nbsp;</p>
<p>‘இதுல ஒரு கதை இருக்கு’</p>
<p>&nbsp;</p>
<p>’எதுவேணா படிக்க. ஐ ஜஸ்ட் வாண்ட் டு ஹியர் சம்திங். எனக்கு சவுண்ட்டோட தான் ரிலேட் பண்ணிக்க முடியும். குறிப்பா தமிழ பொறுத்த வர’</p>
<p>&nbsp;</p>
<p>கடிதத்தின் நீளத்தை இன்னுமொருமுறை பார்த்துவிட்டு படிக்கத் துவங்கினேன். ‘<em>சாலை முழுக்க பள்ளிச் சீருடையில் மாணவர்கள் நிரம்பியிருக்கிறார்கள். வானத்தில் இரு நீல பலூன்கள் இலக்கின்றி மிதந்துகொண்டிருக்கின்றன. ஒரு சிறுமி தனியாக நின்று தலைநிமிர்ந்து பலூனை பார்த்துக்கொண்டிருக்கிறாள். பாக்கெட்டில் ஏதும் பணமில்லை. இருந்தும் அப்படியே விட்டுவிட மனமில்லை. தெரிந்த கடையென்பதால் சிகரெட் கடையில் நின்று ஒரு ரூபாய் கொடு என்றேன். என் வறுமை புரிந்தவன் என்பதால் அவன் மறுக்காமல் கொடுத்தான். பலூனை வாங்கிக்கொண்டு நடந்தேன். சிறுமி இன்னுமும் அங்கேயே நிற்கிறாள்..’ </em>என்று கொஞ்சம் மூச்சை எடுத்தேன்.</p>
<p><em> </em></p>
<p>’சவுண்ட்ஸ் குட்’</p>
<p>&nbsp;</p>
<p>’யா’</p>
<p>&nbsp;</p>
<p>‘மெஷர் பண்ணி எழுதுனா மாதிரி இருக்கு’</p>
<p>&nbsp;</p>
<p>‘புரிஞ்சுதா?’</p>
<p>&nbsp;</p>
<p>‘வெரி வெல்’</p>
<p>&nbsp;</p>
<p>‘மேல படிக்கவா?’</p>
<p>&nbsp;</p>
<p>‘இல்ல. ஆனா எதுல என்ன பத்தி எழுதிருக்கார் சொன்னீங்க? அத மட்டும் படிச்சு காட்டுறீங்களா?’</p>
<p>&nbsp;</p>
<p>‘ஷூயர்’</p>
<p>&nbsp;</p>
<p>‘உங்க வாய்ஸ் நல்லாருக்கு. தமிழ்ல அத கேக்க நல்லாருக்கு’</p>
<p>&nbsp;</p>
<p>‘சீரியஸ்லி?’</p>
<p>&nbsp;</p>
<p>அமைதியாக புன்னகைத்தபடி ஆமோதித்தாள். அந்த கடிதத்துடன் இருந்த துண்டு காகிதத்தை எடுத்துப் பார்த்தேன். ‘இதுல இருக்கு’ என்றதும் அவள் ஆர்வமானாள்.</p>
<p>&nbsp;</p>
<p><em>’சேதி வந்திருக்கிறது. பெண் பிறந்திருக்கிறாள். எப்படி கற்பனை செய்தும் அந்த காட்சியை கைவசப்படுத்தமுடியவில்லை. என்னுடைய..’ </em>நிறுத்தினேன். ‘இங்க அழிஞ்சு போயிருக்கு’. ‘<em>என்னுடைய&#8230;.. எனினும் இனி நானே அதில் இருக்கப்போவதில்லை. வேடிக்கையாக இருக்கிறது. கொஞ்சம் வருத்தமாகவும் இருக்கிறது’ ’</em>அவ்வளவு தான் இருக்கு’.</p>
<p><em> </em></p>
<p>’தாங்க்ஸ்’</p>
<p>&nbsp;</p>
<p>’வேற எதாச்சும் படிக்கவா? இல்ல இதயே திரும்பி படிக்கவா?’</p>
<p>&nbsp;</p>
<p>‘நோ. போதும். நான் தமிழ் படிக்க நிச்சயம் கத்துக்கப்போறேன்’ என்று அழகாகச் சிரித்தாள். திடிரென அவள் மிக அழகு என்று தோன்றியது. கண்களில் எப்போதும் ஆர்வமும் இதழில் எப்போதும் புன்னகையும் தேங்கியிருந்தன.</p>
<p>&nbsp;</p>
<p>கொஞ்ச நேரம் அப்படியே அமர்ந்திருந்தோம். அவள் சிற்சில கடிதங்களை எடுத்துப் பார்த்துப் படித்துவிட்டு அங்கங்கே சில வார்த்தைகளை என்னவென கேட்டாள். பின்னர் பொதுவாக பேசிக்கொண்டிருந்து விட்டு நான் விடைபெற்றுகொண்டேன்.</p>
<p>&nbsp;</p>
<p>கார் வரை உடன் நடந்து வந்தாள். மரங்களின் மேலே நிறைய பறவைகள் அமர்ந்து பள்ளியிலிருந்து கேட்டுகொண்டிருந்த இசைக்கு பதில் பாடிக்கொண்டிருந்தன. முற்றிலும் பேச ஏதுமற்றவர்கள் போல அமைதியானோம். அடிக்கடி அழைப்பதாகச் சொன்னாள். நானும் என்று உறுதியளித்து விட்டு காரை கிளப்பினேன். ஜிபிஎஸ் எதிர்பார்த்ததைப் போல தடையின்றி இயங்கியது.</p>
<p>&nbsp;</p>
<p align="center">*****</p>
<p>&nbsp;</p>
<p>’ஷிவா?’</p>
<p>&nbsp;</p>
<p>‘யெஸ்?’</p>
<p>&nbsp;</p>
<p>‘ரம் பேசறேன்’</p>
<p>&nbsp;</p>
<p>‘ஹாய்!’</p>
<p>&nbsp;</p>
<p>‘அந்த வார்தையை கண்டுபிடிச்சிட்டேன்’</p>
<p>&nbsp;</p>
<p>‘எந்த வார்த்தை?’</p>
<p>&nbsp;</p>
<p>‘அந்த லெட்டர்ல அழிஞ்சிருந்ததே?’</p>
<p>&nbsp;</p>
<p>‘யா?’</p>
<p>&nbsp;</p>
<p>‘நீட்சி’</p>
<p>&nbsp;</p>
<p>‘அப்படின்னா?’</p>
<p>&nbsp;</p>
<p>‘கண்டினியுவேஷன். இன்னும் பெட்டரா ப்ரொட்ராக்‌ஷன். பட் தமிழ் வார்த்தை இன்னும் அதிக அர்த்தம் கொடுக்குது’</p>
<p>&nbsp;</p>
<p>’நான் வார்த்தை கேள்விபட்டதேயில்ல. என்னவிட தமிழ் கம்மியா தெரிஞ்சும் ஒரே நாள்ல கண்டுபிடிச்சிட்டீங்க?’</p>
<p>&nbsp;</p>
<p>‘அந்த இடத்துல இட் சவுண்டட் பெர்ஃபெக்ட். எனக்கும் தெரியல. அம்மாகிட்ட ரெண்டு மூணு வார்த்தை கேட்டுட்டே வந்தேன், அதுல நான் கெஸ் பண்ண மூணாவது வார்த்த இது. அம்மா அப்படி ஒரு வார்த்த இருக்குன்னு சொன்னாங்க. அர்த்தமும் சரியா இருக்கு. கண்டிப்பா அது தான்’</p>
<p>&nbsp;</p>
<p>‘இம்ப்ரெசிவ்!’</p>
<p>&nbsp;</p>
<p>‘ரைட். ஜஸ்ட் இத சொல்லணும்னு தோணுச்சு. திரும்ப கூப்பிடறேன். தாங்க்ஸ்’</p>
<p>&nbsp;</p>
<p>’பை’</p>
<p>&nbsp;</p>
<p>ஃபோனை வைத்துவிட்டு அப்பாவிடம் பேச்சை தொடர்ந்தேன். அப்பா குறுகுறுவென வெப் காமில் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்.</p>
<p>&nbsp;</p>
<p>‘அவ தான்பா. சும்மா கூப்பிட்டிருந்தா’</p>
<p>&nbsp;</p>
<p>‘தமிழ் பேசறாளா?’</p>
<p>&nbsp;</p>
<p>‘நல்லா’</p>
<p>&nbsp;</p>
<p>’இல்லனா வருத்தப்பட்டிருப்பார்’</p>
<p>&nbsp;</p>
<p>‘ம்’</p>
<p>&nbsp;</p>
<p>‘அவங்கம்மா அவங்கப்பா பத்தி பேசறாங்களாமா?</p>
<p>&nbsp;</p>
<p>‘தெரியல. அதெல்லாம் கேக்கல. அம்மாவுக்கு அப்பாவ பிடிக்கும்னு சொன்னதா ஞாபகம்’</p>
<p>&nbsp;</p>
<p>‘நல்லது. திரும்ப வரப்போ வழி எப்படி பாத்தே?’</p>
<p>&nbsp;</p>
<p>‘ஜிபிஎஸ் இருந்ததே’</p>
<p>&nbsp;</p>
<p>’சரி சரி. சரி கண்ணா, நான் வெக்கட்டா?’</p>
<p>&nbsp;</p>
<p>‘சரிப்பா, நாளைக்கு கூப்பிடறேன்’</p>
<p>&nbsp;</p>
<p>அப்பா மவுஸை மெல்ல அழுத்திப் பிடித்து நகர்த்துவது தெரிந்தது. எதையோ க்ளிக் செய்துவிட்டு கைகளை எடுக்கிறார். தூக்க கலக்கத்தில் மெல்ல என் வலது உள்ளங்கை வலது கண்ணோரமாக அழுந்த துடைத்து அப்படியே சோம்பல் முறிக்கிறது. அதே கணம் அப்பாவும் வெப் காமில் அதையே அச்சுஅசலாக செய்துகொண்டிருக்க, என்னுடைய வெப்காம் ஒளிபரப்பு எனக்கே சிறியதாக கீழே தென்பட்டுக்கொண்டிருப்பதிலும் நான் அதையே செய்துகொண்டிருக்கிறேன். ஒரு நொடி அசைவின்றி அதை பார்த்துக் கிரகிப்பதற்குள் இணைப்பு சட்டென துண்டாகிறது.</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/sirumazai.wordpress.com/1273/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/sirumazai.wordpress.com/1273/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/sirumazai.wordpress.com/1273/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/sirumazai.wordpress.com/1273/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/sirumazai.wordpress.com/1273/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/sirumazai.wordpress.com/1273/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/sirumazai.wordpress.com/1273/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/sirumazai.wordpress.com/1273/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/sirumazai.wordpress.com/1273/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/sirumazai.wordpress.com/1273/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/sirumazai.wordpress.com/1273/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/sirumazai.wordpress.com/1273/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/sirumazai.wordpress.com/1273/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/sirumazai.wordpress.com/1273/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sirumazai.wordpress.com&amp;blog=312050&amp;post=1273&amp;subd=sirumazai&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://sirumazai.wordpress.com/2011/10/31/%e0%ae%a8%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/feed/</wfw:commentRss>
		<slash:comments>12</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/696d6f93a60d344ddad261acf7b4259e?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">aravind</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>மரத்தடி</title>
		<link>http://sirumazai.wordpress.com/2011/10/24/%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%9f%e0%ae%bf-7/</link>
		<comments>http://sirumazai.wordpress.com/2011/10/24/%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%9f%e0%ae%bf-7/#comments</comments>
		<pubDate>Mon, 24 Oct 2011 05:09:49 +0000</pubDate>
		<dc:creator>aravind</dc:creator>
				<category><![CDATA[எண்ணங்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://sirumazai.wordpress.com/?p=1268</guid>
		<description><![CDATA[முதற்கனவு வெறும் இருளாக இருந்திருக்கலாம். முற்றிலும் புதியதொரு குரலாகவோ வண்ணக்குழப்பமாகவோ சலனமில்லாத மௌனமாகவோ அம்மாவின் வாசமாகவோ இருந்திருக்கலாம். சீக்கிரம் உறங்கிப் போகிற பிள்ளை வயதில் கனவின் குரலுக்கு ஒரு பொழுதும் விழித்ததில்லை. பல வருடங்களுக்கு கனவுகளின் இருப்பைப் பற்றிய ஊர்ஜிதமோ ஊர்ஜிதப்படுத்த வேண்டிய அவசியமோ தேவையின்றி இருந்தது. இதுவரை கடந்து முடிந்த ஆண்டுகளிலேயே கல்லூரி இரண்டாம் வருட ஆண்டு மிக முக்கியமான ஆண்டு. துக்கங்கள் ஐயங்கள் மகிழ்ச்சிகள் குழப்பங்கள் அத்தனையும் துறந்த ஆண்டாதலால், மனம் பளிங்கைப் போல [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sirumazai.wordpress.com&amp;blog=312050&amp;post=1268&amp;subd=sirumazai&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>முதற்கனவு வெறும் இருளாக இருந்திருக்கலாம். முற்றிலும் புதியதொரு குரலாகவோ வண்ணக்குழப்பமாகவோ சலனமில்லாத மௌனமாகவோ அம்மாவின் வாசமாகவோ இருந்திருக்கலாம். சீக்கிரம் உறங்கிப் போகிற பிள்ளை வயதில் கனவின் குரலுக்கு ஒரு பொழுதும் விழித்ததில்லை. பல வருடங்களுக்கு கனவுகளின் இருப்பைப் பற்றிய ஊர்ஜிதமோ ஊர்ஜிதப்படுத்த வேண்டிய அவசியமோ தேவையின்றி இருந்தது. இதுவரை கடந்து முடிந்த ஆண்டுகளிலேயே கல்லூரி இரண்டாம் வருட ஆண்டு மிக முக்கியமான ஆண்டு. துக்கங்கள் ஐயங்கள் மகிழ்ச்சிகள் குழப்பங்கள் அத்தனையும் துறந்த ஆண்டாதலால், மனம் பளிங்கைப் போல துல்லியமாக இருந்தது. அந்த ஆண்டில் தூங்கும் நேரமும் பழக்கமும் பெருமளவில் மாறியிருந்தது. பூமித்தகடுகள் ஒன்றின் மேல் ஒன்று ஏறுவது போல தூங்கும் நேரமும் விழித்திருக்கும் நேரமும் ஏறிக்கொண்டது. மனம் கனவில் விழித்திருக்கத் துவங்க, ஒரு நாள் விழிக்கையில் முதன் முறையாக இரவு கண்ட கனவு முழுதாக நினைவிற்கு வந்தது. விசித்திரமானதொரு கனவு. வேறுக்கிரகவாசிகள் இல்லை. மிருகங்கள் இல்லை. மாயாஜாலங்கள் இல்லை. அசரீரிகள் இல்லை. முந்தைய தினம் நான் கேட்ட வார்தைகள், பார்த்த காட்சிகள், போய் வந்த இடங்கள் அத்தனையும் அப்படியே மீண்டும் தோன்றியிருக்கும், ஆனால் – அருகே இருக்கிறதென பார்த்துக்கொண்டே இருந்த மேஜையை மின்சாரம் துண்டிக்கப்பட்டதும் இருளில் தேட முயன்று சுவற்றைப் பிடிப்பது போல – கனவில் அத்தனையும் இடம் மாறியிருக்கும். சொற்கள் இருந்த இடத்தில் பாடலும், பாடல் இருந்த இடத்தில் குழந்தையின் ஒரு மொழியும். வானிலையும் வண்ணங்களும் வாசல்களும் மாறிப் போயிருக்கும். விண்வெளியில் மனிதர்கள் மெல்ல மிதந்து மிதந்து இடம் மாறுவது போல கனவுவெளியில் பொருட்கள் மிதந்து இடம் மாறிக்கொண்டேயிருக்கும். விழித்தெழுகிற ஒவ்வொரு நாளும் – ஒவ்வொரு நாளும் – ஒரு கனவுடன் விழித்தெழுவது வழக்கமானது. கண் திறந்து மூளை இயங்கத்துவங்கும் முதல் நொடியிலிருந்து துகள் துகளாக தூசி படிவது போல கனவு மெல்ல மெல்ல விழுந்து உருப்பெறும். தினமும் காலையில் உதிரும் பூவானது கனவு. பெரும்பாலும் அபத்தமாக எஞ்சிப்போகும் என்றாலும், தினமும் தோன்றும் கனவுகள் அவசியமாக இருந்தது, மனம் நிகழும் எதையும் கேட்கும் எதையும் பார்க்கும் எதையும் அழத்தந்திருந்தமாக உள்வாங்குகிறது என்ற சான்று அவசியமாக இருந்தது. அப்படி உள்வாங்கிக்கொண்ட ஆயிரயமாயிரம் விஷயங்களிலிருந்து ஒரு கதையோ ஒரு கவிதையோ ஒரு எண்ணமோ உதித்துக்கொண்டே இருந்தது. கனவுகளுக்கும் மற்ற அனைத்திற்குமான தொடர்பு விழித்தெழும் நொடியில் அறுந்தாலும் நாள் முழுக்க கண்ணுக்குத் தெரியாமல் உயிர்ப்புடனே இருந்தது. தூங்கிக்கொண்டிருக்கையில் என் நாடி பிடித்து உயிர் அறிவதம் விழித்தெழும் எனக்கு கனவு தோன்றியதா என்று அறிவதும் ஒன்று போலானது.</p>
<p>கவனம் எனும் தும்பி பின் கைகளுக்கு அடங்காமல் பறக்கத் துவங்கியது. ஒரு அடர்ந்த புள்ளியென இருக்கும் கவனம் – வெள்ளைத் தாளில் சொட்டினால் பெரும் வட்டமாக தீவிரமாக பரவும் கவனம் – கணினியின் சுட்டியால் தொட்டுத் திறக்கும் எண்ணற்ற பக்கங்களுக்கிடையே பிரிந்து தேய்ந்து மறையத் துவங்கியது. இரண்டரை மணி நேரம் அமர்ந்து பார்த்த திரைப்படம் இரண்டரை நொடியில் மறந்திருக்கும். ஒரு வலை பக்கத்தை முழுதாக படிக்க பொறுமையின்றி போயிருக்கும். பிடித்திணைத்து இழுக்கும் வலுவின்றி மேலே மேலே பறந்துகொண்டேயிருக்கிற ஊதுபை மட்டுமே மனநிலையை வர்ணிக்க பயன்பட்டிருக்கும். இசை மட்டும் எப்போதும் போல ஈர்த்துக்கொண்டிருந்தது, தொலைதூரத்தில் ஒலிக்கும் இசையை நோக்கி நீர்மட்டத்தில் வேரின்றி மிதக்கும் தாவரம் ஆனது மனம். எதைப்பற்றியும் கவலையின்றி நகர்ந்து கொண்டே இருக்கிற நாட்களை பிடித்து நிறுத்திப் பார்த்தபோது, எதிர்பார்த்தபடி கனவுகளும் அறவே நின்று போயிருந்தன. இந்த நாட்டிற்கு வந்த பிறகு இரவு தூக்கங்களிருந்து சத்தமின்றி காணாமல் போன மின்விசிறியின் ஓசை போல, கனவுகளும் காணாமல் போயிருந்தன. கூடவே கதைகளும், கவிதைகளும். கனவுகளுக்குள் இடம் மாறியிருந்த பொருட்களைப் போல, நானும் எங்கோ இடம் மாறி இருந்தேன்.</p>
<p>இதை எழுதிமுடித்து உறங்கத் துவங்கும் பொழுது ஒரு கனவு வரக்கூடும்.</p>
<p style="text-align:center;">*****</p>
<p>சென்னை இரைச்சல் மிக விசித்திரமானது. உருத்தெரியாத பூதம் போல இருந்தாலும் மனதை எப்படியோ அது பழக்கி வைத்திருந்தது. முழு நிசப்தத்தின் மேலே நிகழும் மனதின் எண்ணங்களை அப்படியே தலைகீழாக இரைச்சலின் மேலும் தடையின்றி நிகழும் கயிற்று வித்தையை அது கற்று தந்திருந்தாலும், அபூர்வமாக கிடைக்கிற நிசப்தங்களும் நிசப்ந்தமான இடங்களும் அழகானவை. அடிக்கடி செல்லும் ஒரு கட்டிடத்தின் மாடிப் பகுதி தான் அது. வானம் மிக அழகாக இருண்டிருந்தது. விளக்குகள் பிரகாசமாக எரிந்து படிப்படியாக தேயும் ஒளிவட்டங்களாக இல்லாமல் தெளிவாக தங்கள் வெளிச்சக்கோட்டை வரைந்து வைத்திருந்தன. இரைச்சல் ஓடை போல எங்கோ கீழே சன்னமாக ஒலித்தபடி ஓடிக்கொண்டிருந்தது. சத்தங்கள் நிரம்பிய நீர்த்தொட்டியில் மேலெழும்பி மிதக்கும் குமிழி போல உயரத்தில் அமைதியாக இருந்தது மாடி. இருளில் நானும் அவரும் நின்றிருந்தபடி எதையோ பேசிக்கொண்டிருக்கையில் அவர் முன்னறிவிப்பின்றி தன் காதல் கதையை எனக்கு சொல்லத்துவங்குகிறார். மனதிற்கு மிக நெருக்கமான காதலாக இருந்திருக்க வேண்டுமென்பது அவரின் குரலிலேயே தொனிக்கிறது. என்னை விட மூத்தவர் என்றாலும் என்னை அவருடன் சமமாக வைத்து மரியாதை தருபவர். எனக்கும் அவருக்குமான தொடர்பு பெரும்பாலும் கதைத் தொடர்பே. எப்பொழுதும் ஒரு கதை புனைபவனாகவே என்னை பாவிப்பவர். எங்கள் பேச்சின் வாக்கியங்கள் சிறுகதை பற்றி துவங்கி சிறுகதையிலேயே முடிந்துவிடக்கூடியவை. என்னிடம் தன் கதையை சொல்வதென்ற அவரின் முடிவு என்னை ஒரு நொடிப்பொழுது குழப்பத்தில் ஆழ்த்துகிறது. இந்த உரையாடல் சிறுகதைவெளிக்கு உள்ளே நிகழ்கிறதா வெளியா நிகழ்கிறதா என்பதை பாவனைகள் முழுதும் மறைந்த இருளில் கணிக்க முடியவில்லை. இருந்தும் அவர் சொல்லத்துவங்கிய கதை என்னை ஆட்கொள்கிறது. யாரும் யாரிடமும் பகிரக் கூடிய கதை நிச்சயமல்ல. கதையாக எழுத முற்பட்டால் அந்தரங்கத்தின் குரலில் மட்டுமே சொல்ல முடிகிற கதை. இடையிடையே அவர் கொண்ட எண்ணற்ற மௌனங்களில் ஒன்றின் பொழுது தொலைவில் அவர் நின்றுகொண்டிருந்த திசையில் வானவேடிக்கை துவங்குகிறது. ஒலியும் ஒளியும் இணைந்த வேடிக்கையில் ஒலி தூரத்திலியே விடைபெற்றிருக்க ஒளி மட்டும் சிதறலாய் வானில் தெரிகிறது. நிழலுருவமாய் அவரும் அவரின் கதைக் குரலும் பிண்ணனியில் தூரத்தில் ஒளிச்சிதறலுமாய் அழகான காட்சியாகிறது. கவனமாக கேட்டுக்கொண்டிருப்பினும் அந்த உரையாடலில் எந்த விதத்திலும் பங்குகொள்ளாமல் தவிர்க்கிறேன். நான் கேட்பதை அவருக்கு ஊர்ஜிதப்படுத்த வேண்டிய அவசியம் என்னை விட அவருக்கு நிச்சயம் தேவையில்லை என்று எனக்கு தெரிந்திருந்தது. அக்காட்சியை ஒரு தனி நபரின் கதையாகவே விட்டுவைக்கிறேன். நீண்ட வலியாக கதை தொடரத் தொடர, அவர் நான் கேட்டுக்கொண்டிருப்பதையே மறந்து சொல்லிக் கொண்டே போவது போலிருக்கிறது. அவர் பார்த்துக் கொண்டிருந்த திசையில் துவக்கத்தில் இருந்த ஒரே ஒரு ஒளிச்சிதறலும் மெல்ல மங்கி மறைந்தது போல இருட்டைப் பார்த்து அவர் பேசிக்கொண்டிருக்கிறார். கதை முடிவு பெறுவதற்கு முன்னரே மாடிப்படிகளின் விளக்கை யாரோ உயிர்ப்பிக்கிறார்கள். அவரின் அலைபேசி பேரொளியாக கண் விழிக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக ஒளி எங்கெங்கிருந்தோ நிரம்பிக்கொண்டிருக்கிறது. நண்பர்கள் மேலே வருகிறார்கள். உரையாடல் திசை மாறுகிறது. அதற்கு பின் அன்று பேசிய அத்தனையும் பொய்யைப் போலிருந்தது. இன்னும் சிறுகதையை விட்டு வெளியே வராதவர்கள் போலவோ, ஒரு சிறுகதை பாதி நிகழ்ந்துகொண்டிருக்கையிலே வெளிஉலகிற்கு தள்ளப்பட்டு விட்ட கதை மாந்தர்கள் போலவோ குழம்பியிருந்தோம். இல்லை அச்சிறுகதையின் போக்கே அப்படியோ என்றும் குழப்பம். சிறுகதை முடிவை தேடித் தேடி அலுத்து உரையாடல் நீர்த்துப் போனபின் எல்லோருடனும் வீடு திரும்பினோம். பின் பல நாட்கள் நானும் அவரும் பல சிறுகதைகளைப் பேசி தொடர்ந்து விவாதிக்கிறோம். இனி எப்பொழுதும் மீண்டும் விவாதிக்கக் கூடாத ஒன்றாக அக்கதை மட்டும் எஞ்சிப் போகிறது.</p>
<p style="text-align:center;">*****</p>
<p>கையடக்க பாடல் கருவிகள் வருவதற்கு முன்னர் இரண்டு பாடல்களுக்கிடையேயான இடைவெளி இத்தனை குழப்பமாக இருந்ததில்லை. ஒலிநாடாக்கள் பெரும்பாலும் தொடர்புடைய பாடல்களை வரிசையாக நிரப்பி வைத்திருக்கும். அல்லது ஒரே படத்தின் பாடல்களை வரிசை கட்டி வைத்திருக்கும். வரிசை பல முறை கேட்டதால் மனப்பாடமாகியிருக்கும். ஒரே கதைவெளியில் ஒலிப்பதாலோ என்னவோ ஒரே படத்தின் பாடல்களுக்கிடையே மனம் எப்படியோ ஒரு தொடர்பை ஏற்படுத்தி விடுகிறது. வெவ்வேறு பாவங்களை கொண்ட பாடல்கள் ஆனாலும் அடுத்த பாடலுக்கான மனநிலை பாடல்களுக்கிடையேயான இடைவெளியில் கச்சிதமாக தேங்கி நிற்கிறது. அடுத்த அறையின் பேச்சு இங்கே கசிவது போல அடுத்த பாடலின் துவக்கம் இடைவெளியில் கசியத் துவங்கினாலும் துவங்கிவிடக்கூடும். ஒலிநாடாவில் தொடுத்த பாடல்களுக்கிடையே நார் போல அங்கங்கே தெரியும் இடைவெளியில் இசை இன்னும் அடர்த்தியாக இருக்கிறது, உரையாடலில் மௌனத்தை போல. ஆயிரமாயிரம் பாடல்களை உள்ளடக்கிய கையடக்க கருவிகளுக்கு எந்தவித பாடல் எல்லைகளும் இல்லை. அதனால் பாதியில் முடியும் பாலங்கள் போல இடைவெளிகள் இலக்கின்றி குழம்பி நிற்கின்றன. இசை அதீத உற்சாகத்திலிருந்து ஆழ்ந்த சோகத்திற்கு தாவுவதற்கான ஏதுவான இடைவெளி இருப்பதில்லை. அவசரமாக அடுத்தடுத்த பாடல்களுக்கு தாவித் தாவி தோதான பாடலுக்கு வரும் வரை இடைவெளி நீட்டிக்கப்பட்டு விடுகிறது. பாடல்களை வகைப்படுத்தி வைப்பது பிடிக்காது என்பதால், மறைமுகமாக இந்த இடைவெளிக் குழப்பத்தை ரசிக்கிறேன் என்று ஒரு சந்தேகம். தினமும் பேருந்து பயணத்தை அடுத்த என்ன பாடல் என்று கணிக்கவே முடியாத இடைவெளிகள் மட்டுமே சுவாரசியமாக்கிக் கொண்டிருக்கின்றன. பாடலில் ஆழ்ந்து மனதுக்குள் பாடிக் கொண்டு பாடலை தொடர்ந்து வந்து அது முடிந்ததும் மொத்த சிந்தனையும் ஒரு நொடி அந்தரத்தில் பறப்பதை நிறுத்தும் பறவைச் சிறகுகள் போல நின்றுவிடுகிறது. அடுத்து சிறகுகளின் இயக்கம் எப்படியிருக்கும் என்ற கணிக்கும் இடைவெளி தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இந்த சுவாரசியமான விளையாட்டை எப்போதும் போல ரசித்துக்கொண்டிருந்த பொழுது மிகப் பழக்கமானதும் மிகப்பிடித்தமானதுமான ஒரு பாடலை கருவி எடுத்துத் தருகிறது. பதினைந்து வயதிருக்கையில் கேட்டு கேட்டு முடிவில்லாமல் தொடர்ந்த விரட்டிய பரவசமூட்டும் தூரத்து இசைப் பறவை அப்பாடல். சிந்தனை முழுக்க அந்தப் பாட்டில் கரைகிறது. அடுத்த பாடலோ அதற்கு முன் வரும் இடைவெளியோ எதுவுமே கவனத்தில் இல்லை. பாடலை மட்டுமே மனம் ஒற்றையடிப் பாதை போல தொடர்ந்து செல்கிறது. பாடல் முடிகிற தருணம் சிந்தனை இன்னும் மீளவில்லை. இடைவெளி விழுகிறது. அடுத்த பாடலுக்கான இசை துவங்கும் கணத்தில் மனம் வேறொரு பாடலை இசையுடன் துவக்குகிறது. காதில் கேட்கும் இசையும் மனதில் கேட்கும் இசையும் கொஞ்சமும் ஒத்திசைக்கவில்லை. கவனம் மொத்தமும் அலுவகலப்பணியில் இருந்து மீள்கிறது. என்ன நிகழ்ந்ததென்று புரியவில்லை. பாடலை அனிச்சையாக விரல் நிறுத்திய பின், மனம் பாடும் பாடல் மட்டும் கேட்கிறது. பதினைந்து வயதில் கேட்டு கேட்டுத் தீர்த்த பொழுது இடைவெளிக்கு பின் ஒலிநாடாவில் வரிசையில் அடுத்த வந்த பாடலை மனம் தானாக பாடிக்கொண்டிருக்கிறது. அடுக்கு அடுக்காக ஏற்றி வைத்துக்கொண்டேயிருக்கிற நினைவுகளின் அடியில் இது மட்டும் எப்படியோ சிக்கித் தவித்து பிழைத்து அன்று ஊர்ந்து மேலெழும்பி வந்து விட்டது, சுமார் பத்து வருடங்களுக்குப் பிறகு. நினைவுகளின் ஆழம் ஏனோ அதிர்ச்சியாக இருந்தது. இன்னும் எளிமையாக மறக்கக் கூடிய நினைவும் மனமும் வேண்டும் போல் இருந்தது. ஒரு வேளை நினைவுகளை எல்லாம் மறக்க வேண்டியே பாடலைகளை எப்போதும் கலைத்தே வைக்கிறேன் என்று தோன்றியது. எதுவாயினும், என் நினைவுகளின் தாய்மொழி இசை மட்டுமே என்று புரிந்தது.</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/sirumazai.wordpress.com/1268/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/sirumazai.wordpress.com/1268/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/sirumazai.wordpress.com/1268/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/sirumazai.wordpress.com/1268/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/sirumazai.wordpress.com/1268/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/sirumazai.wordpress.com/1268/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/sirumazai.wordpress.com/1268/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/sirumazai.wordpress.com/1268/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/sirumazai.wordpress.com/1268/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/sirumazai.wordpress.com/1268/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/sirumazai.wordpress.com/1268/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/sirumazai.wordpress.com/1268/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/sirumazai.wordpress.com/1268/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/sirumazai.wordpress.com/1268/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sirumazai.wordpress.com&amp;blog=312050&amp;post=1268&amp;subd=sirumazai&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://sirumazai.wordpress.com/2011/10/24/%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%9f%e0%ae%bf-7/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/696d6f93a60d344ddad261acf7b4259e?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">aravind</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>அருகில் வரு</title>
		<link>http://sirumazai.wordpress.com/2011/05/05/%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81/</link>
		<comments>http://sirumazai.wordpress.com/2011/05/05/%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81/#comments</comments>
		<pubDate>Thu, 05 May 2011 04:03:08 +0000</pubDate>
		<dc:creator>aravind</dc:creator>
				<category><![CDATA[கவிதை]]></category>
		<category><![CDATA[பாடல்]]></category>

		<guid isPermaLink="false">http://sirumazai.wordpress.com/?p=1263</guid>
		<description><![CDATA[&#8216;ஹீரோவும் ஹீரோயினும்.. ரொம்ப சாஃப்ட் சாங் சார்.. தொட்டும் தொடாமலே அப்படிம்பாங்களே&#8230; அது தான் மொத்த பாட்டுமே சொல்லணும்.. ஒரு மழை பெய்யுற ஈவினிங்ல..&#8217; என்று எந்த இயக்குனரும் என்னிடம் சொல்லவில்லை என்றாலும், ‘நமக்கு நாமே&#8217; திட்டத்தின் கீழ் நானே சொல்லி நானே எழுதியது. விரல் நுனியில் பூவானம் தலை திரும்பி பூக்கும் இருவிரல் மௌனங்கள் தீர தீராததாய் மழையின் சொல் துளியினையே நீ தீண்ட நமக்கிடையே மழை நீளும் &#8212;&#8211; இடைவெளிகள் கொண்டாலும் அறிந்திடாமல் தாண்டும் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sirumazai.wordpress.com&amp;blog=312050&amp;post=1263&amp;subd=sirumazai&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><em>&#8216;ஹீரோவும் ஹீரோயினும்.. ரொம்ப சாஃப்ட் சாங் சார்.. தொட்டும் தொடாமலே அப்படிம்பாங்களே&#8230; அது தான் மொத்த பாட்டுமே சொல்லணும்.. ஒரு மழை பெய்யுற ஈவினிங்ல..&#8217; என்று எந்த இயக்குனரும் என்னிடம் சொல்லவில்லை என்றாலும், ‘நமக்கு நாமே&#8217; திட்டத்தின் கீழ் நானே சொல்லி நானே எழுதியது.</em></p>
<p>விரல் நுனியில்<br />
பூவானம்<br />
தலை திரும்பி பூக்கும்</p>
<p>இருவிரல் மௌனங்கள் தீர<br />
தீராததாய் மழையின் சொல்</p>
<p>துளியினையே<br />
நீ தீண்ட<br />
நமக்கிடையே மழை நீளும்</p>
<p>&#8212;&#8211;</p>
<p>இடைவெளிகள் கொண்டாலும்<br />
அறிந்திடாமல் தாண்டும்</p>
<p>கனவினுள்ளே கண் தூங்கிப் போகும்<br />
பிள்ளை முகம் போலவே<br />
மனம் சரியுமே உன் தோளில்</p>
<p>&#8212;&#8211;</p>
<p>இதழ் பெருகும் இச்சொல்லில்<br />
இருந்திடாதோ முத்தம்</p>
<p>ரகசியம் போல் நீ கண்டுணர்ந்து<br />
புன்னகைத்தால் போதுமே<br />
இதழ் ஸ்பரிசம் நிறைவாகும்</p>
<p>&#8212;&#8211;</p>
<p>கொசுறு &#8211; மளையாளத் திரைப்பாடலான ‘<a target="_blank" href="http://www.youtube.com/watch?v=avvLBgcoO9M">அருகில் வரு</a>&#8216;  மெட்டிற்கு எழுதியது. கொசுறுக்குள் கொசுறு &#8211; அதற்கு இசை ‘ஆரோமலே&#8217; அல்ஃபோன்ஸ். கொசுறுக்குள் கொசுறுக்குள் கொசுறு &#8211; அதன் ஒரிஜினல் <a target="_blank" href="http://www.youtube.com/watch?v=QKEuOO0lQPc">நோரா ஜோன்ஸினுடையது</a>.</p>
<p>கொசுறு #2 &#8211; இதழ் பெருகும் ‘<em>இச்</em>&#8216;சொல்லில் என்பதை கவனித்தீர்கள் தானே?</p>
<p>கொசுறு #3 &#8211; மளையாளத் திரைப்படமான ‘எலக்ட்ரா&#8217;வில் நடித்த நயன்தாராவிற்காக எழுதப்பட்டது. பாடல் அழகாக இருப்பதில் ஆச்சர்யமில்லை தானே? <img src='http://s1.wp.com/wp-includes/images/smilies/icon_wink.gif' alt=';)' class='wp-smiley' /> </p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/sirumazai.wordpress.com/1263/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/sirumazai.wordpress.com/1263/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/sirumazai.wordpress.com/1263/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/sirumazai.wordpress.com/1263/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/sirumazai.wordpress.com/1263/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/sirumazai.wordpress.com/1263/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/sirumazai.wordpress.com/1263/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/sirumazai.wordpress.com/1263/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/sirumazai.wordpress.com/1263/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/sirumazai.wordpress.com/1263/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/sirumazai.wordpress.com/1263/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/sirumazai.wordpress.com/1263/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/sirumazai.wordpress.com/1263/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/sirumazai.wordpress.com/1263/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sirumazai.wordpress.com&amp;blog=312050&amp;post=1263&amp;subd=sirumazai&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://sirumazai.wordpress.com/2011/05/05/%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81/feed/</wfw:commentRss>
		<slash:comments>3</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/696d6f93a60d344ddad261acf7b4259e?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">aravind</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>தேநீரில் சினேகிதம்</title>
		<link>http://sirumazai.wordpress.com/2011/05/03/%e0%ae%a4%e0%af%87%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%87%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-3/</link>
		<comments>http://sirumazai.wordpress.com/2011/05/03/%e0%ae%a4%e0%af%87%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%87%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-3/#comments</comments>
		<pubDate>Tue, 03 May 2011 04:10:21 +0000</pubDate>
		<dc:creator>aravind</dc:creator>
				<category><![CDATA[தொடர்]]></category>

		<guid isPermaLink="false">http://sirumazai.wordpress.com/?p=1246</guid>
		<description><![CDATA[Sip #1 &#8211; &#8216;இந்த நேரத்துல எங்க ஏரியால ஹெலிகாப்டரா&#8217; என்று வியப்பத்தில் துவங்கி, &#8216;இப்ப தூரத்துல இன்னொரு வெடிச்சத்தம்&#8217;, ‘ஜன்னல் ஆடுது வேகமா..&#8217; என்று நடந்து கொண்டிருந்த சம்பவங்களையெல்லாம் ஒவ்வொன்றாக நேரடியாக டிவிட்டரில் பதிவு செய்துகொண்டிருந்த பாகிஸ்தானிய ஐடி தொழிலாளி Shoiab Athar, அப்போது நிகழ்ந்துகொண்டிருந்தது ஓசாமாவை கொல்வதற்கான ரெய்டு என்பதை அறிந்த கணம், டிவிட்டரின் வலிமையும் பதினைந்து நிமிஷப் புகழும் கச்சிதமாக இணைந்த புள்ளி. அவரின் ட்வீட்டுகளை இங்கே படிக்கலாம். #2 &#8211; மிகப்பிடித்த [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sirumazai.wordpress.com&amp;blog=312050&amp;post=1246&amp;subd=sirumazai&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>Sip #1 &#8211; &#8216;இந்த நேரத்துல எங்க ஏரியால ஹெலிகாப்டரா&#8217; என்று வியப்பத்தில் துவங்கி, &#8216;இப்ப தூரத்துல இன்னொரு வெடிச்சத்தம்&#8217;, ‘ஜன்னல் ஆடுது வேகமா..&#8217; என்று நடந்து கொண்டிருந்த சம்பவங்களையெல்லாம் ஒவ்வொன்றாக நேரடியாக டிவிட்டரில் பதிவு செய்துகொண்டிருந்த பாகிஸ்தானிய ஐடி தொழிலாளி Shoiab Athar, அப்போது நிகழ்ந்துகொண்டிருந்தது ஓசாமாவை கொல்வதற்கான ரெய்டு என்பதை அறிந்த கணம், டிவிட்டரின் வலிமையும் பதினைந்து நிமிஷப் புகழும் கச்சிதமாக இணைந்த புள்ளி. அவரின் ட்வீட்டுகளை <a href="https://twitter.com/#!/ReallyVirtual">இங்கே</a> படிக்கலாம்.</p>
<p>#2 &#8211; மிகப்பிடித்த இயக்குனர்களில் ஒருவரான மைக்கேல் ஹனாகே, Children are evil, என்று கருதுகிறார் என்றே நினைக்கிறேன். அக்கருத்தில் உண்மையுண்டு என்றெனக்கு ஒரு எண்ணம். ஆஃபடர் ஆல், நானும் ஒரு காலத்தில் குழந்தையாக இருந்தவன் தானே? அமெரிக்கா வந்த பிறகு அந்த எண்ணத்தில் இன்னும் வலு சேர்கிறது. இங்குள்ள எல்லா சிறுவர் சிறுமிகளும் bullying செய்பவர்கள் என்று ஏனோ ஒரு நம்பிக்கை. (ஹாலிவுட், உன்னால் தானே?!) ஆகையால் பொதுவாக அவர்களிடம் ஒரடி இரண்டு அங்குலம் தள்ளியே நிற்கிறேன். கோ கார்ட்டிங்கில் என்னை முதலிடத்திற்கு வர விடாமல் இருபது நிமிடம் தொல்லை படுத்திய சிறுவனை கூட கண்டுகொள்ளாமல் மன்னித்து விட்டேன். இரண்டே வயதான சிறுவன் என்ன செய்து விட முடியும் பெரிதாக? என்பதனால் பேருந்தில் தினமும் வருகிற அந்த அம்மா-இரண்டு வயது மகனை பார்த்து அவ்வப்போது சினேகமாக புன்னகைப்பதுண்டு. சென்ற வாரம் சந்தர்ப்பவசத்தால் நாங்கள் எதிரெதிர் இருக்கையில் அமர நேர, நானும் பயணம் முழுக்க சிறுவனுக்கு முக சேஷ்டைகள், பழிப்புகள் என்றெல்லாம் எண்டர்டெய்ன் செய்ய, பேருந்தை விட்டு இறங்க இரண்டே நிமிடங்கள் இருக்கும் தருவாயில், அது வரை அமைதியாக இருந்த சிறுவன் என்னைப் பார்த்து எதுவோ சொன்னான். இரைச்சலில் சரியாக கேட்காததால் என்னவென்று மீண்டும் கேட்க, அவன் மீண்டும் சொல்ல, ம்ஹூம். அவனுடைய அம்மாவை பார்த்து நான் விழிக்க, அவள் எடுத்த எடுப்பிலிலேயே, Did you call him a dinosour?, என்றாளே பார்க்கலாம். டைனோசர் அறைந்தவன் போல அமைதியாகி விட்டேன். பையன் சொல்ல சொல்ல, அம்மா டைனோசர் தானே சொன்னாய் டைனோசர் தானே சொன்னாய் என்கிறாள். வீட்டிலியே திட்டம் போட்டு வந்திருக்க வேண்டும் இருவரும். கடைசி வரை அது என்னவென்றே புரியவில்லை. அடுத்த நாள் முதல் அவர்களிடத்தில் நான் பேசுவதாயில்லை. அலுவலக ஜமா அன்று முதல் அந்த சிறுவன் ஏன் அப்படி சொல்லியிருப்பான் என்று விவாதித்துக்கொண்டே இருக்கிறார்கள். வால் இருப்பதால் இருக்கும் என்பது பரவலான கருத்து. சக பணியாளாரான இன்னொரு தாய்குலம், ‘குழந்தைங்க அப்படித்தாங்க. என் பொண்ணு முதலைய டைனோசார் என்று தான் சொல்வாள்&#8217; என்றார் சீரியஸாக.</p>
<p>#3 &#8211; இது வரை பனி பூத்துக்கொண்டிருந்த புல்வெளிகளில் வசந்த காலம் சின்னஞ்சிறு மஞ்சள் பூக்களை பூக்க வைப்பதை பார்த்தபடி பேருந்தில் வந்து கொண்டிருக்கும் பொழுது, பெரிய ஃபவுண்டைனுக்குள் ஒரு குழந்தை எட்டிப் பார்ப்பதை காண நேர்ந்து மனம் ஒரு நொடி ‘ஐயோ பத்திரம்&#8217; என்று வாய் பிளந்தது. இந்த வருடம் இதுவரை பார்த்ததிலேயே மிகவும் கவனம் ஈர்த்த ஜப்பானிய திரைப்படமான Confessionsஇல் இரண்டே நிமிடங்களில் டெட்டி பேரை கட்டியணைத்தும் கதைகளும் ரைம்ஸும் சொல்லி நெஞ்சை அள்ளிய சிறுமி சட்டென குளத்தில் விழுந்து இறந்த காட்சி இரண்டு நாட்களுக்கு தொண்டையை அடைத்தது. இந்த இரண்டு மனச் சலனங்களின் நிழலும் மெல்ல நீண்டு பாடகி சித்ராவிற்கு நிகழ்ந்த துயரத்தையே அடைகின்றன என நினைக்கிறேன். ‘கல்கி&#8217; படப்பாடலை பாடிய பொழுது அழுதார் என்பது தொடங்கி, ஸ்ரீலங்கா தொடங்கி பல நாடுகளுக்கு சென்று மருத்துவ ஆலோசனைகள் பெற்றது, பதினைந்து வருடங்களுக்குப் பிறகு பெண் குழந்தை பிறந்தது, ராஜாவிடம் கொண்டு சென்ற பொழுது அவர் அவளை அப்படியே பியானோவின் மீது வைத்து வாசித்தது என ஒவ்வொரு செய்தியையும் கவனித்து தொடர்ந்து வந்த எனக்கு, இச்சம்பவம் அதிர்ச்சியை தந்தது. சென்ற பதிவில் கேட்டது போலவே, திரைப்பிரபலங்களுடன் நமக்கு தோன்றுகிற மனநெருக்கம் வியப்பானது தானே?</p>
<p>#4 &#8211; பாட்டு பாடத் தெரியுமா, ஆடத் தெரியுமா என்று கேட்டு என்ன புண்ணியம் என்று தெரியவில்லை. சுற்றி நடக்கிற/கேட்கிற அரேஞ்சுடு மாரேஜ் கதைகளை வைத்து நான் யோசிக்கிற, ‘மொதல்ல இதப்பத்தி கேளுங்க&#8217; லிஸ்ட்டு.</p>
<p>      # எங்க மாப்பிள்ளைய கொஞ்சம் தூங்கச் சொல்லி குறட்டை விட்டுக்காட்டச் சொல்லுங்க</p>
<p>      # பொண்ணுக்கு சிம்புவ புடிக்குமா?</p>
<p>      # பையன் மீசய ட்ரிம் பண்ண தனி கத்திரிக்கோல் வெச்சிருக்காரா இல்ல கிச்சனில் இருந்து எடுத்துப்பாரா?</p>
<p>      # பொண்ணு ஃபேஸ்புக்குல பிங்க் டெட்டி பேரோட ஃபோட்டோ கீட்டோ போட்டிருக்கா?</p>
<p>      # மாப்பிள்ள &#8216;மாப்பிள்ள&#8217; படத்த தியேட்டர்ல போயி பாக்குற ஆளா?</p>
<p>      # ‘பொண்ணு&#8217; அடிக்கடி actually என்று சொல்லுமா?</p>
<p>உங்களுக்கு இப்படி கேட்டு அறிந்துகொள்ளவேண்டியது ஏதேனும் இருந்தால் இணைக்கவும்.</p>
<p>#5 &#8211; டைவர்ஷன் எடுப்பது டைரக்டர்களைப் பொருத்த வரையில் நல்லதே. ‘ஆனந்தம்&#8217; திரைப்படத்திற்கு பிறகு ‘ரன்&#8217; வந்ததும், நான் லிங்குசாமி ஆகச்சிறந்த இயக்குனர் என்று நம்பினேன், கதையில்/களத்தில்/ இயக்கத்தில் வித்தியாசம் காட்டுவது முக்கியம் என்று நினைத்ததால். ஆனால், இந்த வருடத்தின் (இதுவரையிலான) மிக மோசமான இரண்டு படங்களுமே அப்படி டைவர்ஷன் எடுத்ததால் வந்தது என்பது சங்கடமான விஷயம். ராதா மோகன் திருவான்மியூரிலிருந்து டைவர்ஷன் எடுத்தாலும் மீண்டும் திருவான்மியூருக்கே வந்திருக்கிறார். அப்படியே விமானத்தினுள் தன்னுடைய அத்தனை க்ளீஷேக்களுக்கும் டிக்கெட் போட்டு கொடுத்திருக்கிறார். நடிகர்களை கையாண்ட விதம், நாடகத்தன்மை, சுவாரசியமே அற்ற திரைக்கதை என படம் பகீர் பப்படம். நாகார்ஜுன் எதற்காக விரல்களால் டப்பிங் பேச முயன்றிருக்கிறார் என்று தெரியவில்லை. டிலோ நோ டீலா நிகழ்ச்சியில் வந்து மொக்கை போடுகிறவர் தான் படத்தின் dude என்கிற அளவுக்கு நிலைமை படு மோசம். அந்தப்பக்கம் நம் கௌதம் மேனன் நடுநிசி நாய்களை பற்றி பேச நினைக்கும் போதெல்லாம் விக் தலையுடன் அந்தப்பெண்மணி நினைவுக்கு வந்து குபீர் சிரிப்பு வருகிறது. இந்தப்படத்திலும் ‘அவ அவ்ளோ அழகு&#8217; என்று வந்துவிட்டது. ரொம்ப டைவர்ஷன் எடுத்து படம் எங்கே போனது என்றே தெரியவில்லை. உப குறிப்பு ஒன்று &#8211; இந்த யுத்தம் செய் திரைப்படத்தில் அந்தச்சிறுவனுக்கு நடந்த/சந்திக்க நேர்ந்த சம்பவங்களையெல்லாம் பார்த்தால் க்ளைமாக்ஸில் அவன் தனியாக நடந்து சென்று அந்தப்பக்கமாக நடுநிசி நாய்கள் ஃப்ளாஷ்பேக்கில் நுழைவான் என்று தோன்றுகிறது. உங்கள் கருத்து என்னவோ?</p>
<p>#6 &#8211; என்னுடைய சிறிய வயதில் அம்மா சுற்றி இருப்பவர்களிடம், ‘ஃபளவர்ஸ எல்லாம் அழகாக படம் புடிக்கிற ஆளா வருவான் பாருங்க&#8217; என்று சொன்னதில்லையென்றாலும், நான் அப்படி ஆகிவிட்டேன் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. செர்ரி மலர்களை எடுத்த சில படங்கள்.</p>
<p><img class="aligncenter size-full wp-image-1248" title="IMG_2739" src="http://sirumazai.files.wordpress.com/2011/05/img_27391.jpg?w=700" alt=""   /></p>
<p><img class="aligncenter size-full wp-image-1251" title="IMG_2746" src="http://sirumazai.files.wordpress.com/2011/05/img_2746.jpg?w=700" alt=""   /></p>
<p><img class="aligncenter size-full wp-image-1249" title="IMG_2737" src="http://sirumazai.files.wordpress.com/2011/05/img_2737.jpg?w=700" alt=""   /></p>
<p><img class="aligncenter size-full wp-image-1250" title="IMG_2741" src="http://sirumazai.files.wordpress.com/2011/05/img_2741.jpg?w=700" alt=""   />       </p>
<p>#7 &#8211; ஒரு தமிழ் சினிமா க்விஸ். கமெண்ட்டில் விடை தெரிவிக்கலாம். தேவையான அளவு உப்பு சேர்ப்பது போல தேவையான தகவல்களை சேர்த்தே தயாரித்திருக்கிறேன், இருந்தாலும் க்ளூ வேண்டுமென்றாலும் கேட்கலாம். க்விஸ்ஸின் பெயர், ‘பெண்களும், பெண்களின் பெயர்களும், பெண்களை மையமாக வைத்து வந்து திரைப்படங்களின், அவற்றின் பெயர்களும்&#8217;. (ஷப்பா)</p>
<p><em>நடிகர் A நடித்த பெண்ணை-மையமாக-வைத்து-வந்த-படத்தின் தலைப்பு W. இது வேற்றுமொழியில் டப் செய்யப்பட்ட பொழுது X என்று அழைக்கப்பட்டது.  </em></p>
<p><em>நடிகை B, இது போன்ற பெ-மை-வை-வ திரைப்படங்களுக்காக பிரபலபானவர். அப்படியொரு அவரின் தமிழ்ப்படத்தின் தலைப்பும் X. </em><em> </em></p>
<p><em>இன்னொரு நடிகை(யின் பெயரும்!) X. அறிமுகமானது தமிழில், அவரின் ஒரே தமிழ்ப்படம் இதுவரை. அவர் பிரபலமாக இருப்பது அந்த வேற்றுமொழியில். இதில் B சைட் ஆர்டிஸ்டாக வந்தார்.  (சைல்டு இல்ல, சைடு சைடு!)</em></p>
<p><em>நடிகை D, Cயின் சீனியர் என பல அர்த்தங்களில் சொல்லலாம். அதே வேற்றுமொழியில் பிரபலம். அவரும் ஹீரோயினாக ஒரே தமிழ்ப்படத்தில் தான் நடித்திருக்கிறார். அந்த தமிழ்படத்தில் அவரின் பெயர் Y. அப்பெயரை வைத்து அந்தப்படத்தில் வந்த பாடல் அக்கட்டத்தில் பிரபலம். </em></p>
<p><em>இந்த வேற்றுமொழியில் ஆல் டைம் சூப்பர்ஹிட் நடிகைகளில் ஒருவர் Aயுடன் நடிப்பதாக துவங்கி பாதியில் நின்று போன தமிழ் படம் Z. அவர் தமிழில் நடிக்காமலே போனது நமது துரதிர்ஷடம். </em></p>
<p><em>W, X, Y ஆகியற்றை இணைக்க, Zஐ வைத்து. </em></p>
<p>க்ளூ கேட்டால் 24 மணி நேரம் கழித்தே அதை சொல்ல முடியும். நான் டாக்டர் அல்ல, timezone அப்படி.  வேலைக்கு நடுவில் தலையை பிய்த்துக்கொள்ளும் திறமை இல்லாதவர்கள் வீட்டுக்குச் சென்று யோசிக்கவும்.</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/sirumazai.wordpress.com/1246/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/sirumazai.wordpress.com/1246/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/sirumazai.wordpress.com/1246/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/sirumazai.wordpress.com/1246/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/sirumazai.wordpress.com/1246/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/sirumazai.wordpress.com/1246/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/sirumazai.wordpress.com/1246/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/sirumazai.wordpress.com/1246/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/sirumazai.wordpress.com/1246/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/sirumazai.wordpress.com/1246/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/sirumazai.wordpress.com/1246/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/sirumazai.wordpress.com/1246/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/sirumazai.wordpress.com/1246/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/sirumazai.wordpress.com/1246/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sirumazai.wordpress.com&amp;blog=312050&amp;post=1246&amp;subd=sirumazai&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://sirumazai.wordpress.com/2011/05/03/%e0%ae%a4%e0%af%87%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%87%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-3/feed/</wfw:commentRss>
		<slash:comments>7</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/696d6f93a60d344ddad261acf7b4259e?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">aravind</media:title>
		</media:content>

		<media:content url="http://sirumazai.files.wordpress.com/2011/05/img_27391.jpg" medium="image">
			<media:title type="html">IMG_2739</media:title>
		</media:content>

		<media:content url="http://sirumazai.files.wordpress.com/2011/05/img_2746.jpg" medium="image">
			<media:title type="html">IMG_2746</media:title>
		</media:content>

		<media:content url="http://sirumazai.files.wordpress.com/2011/05/img_2737.jpg" medium="image">
			<media:title type="html">IMG_2737</media:title>
		</media:content>

		<media:content url="http://sirumazai.files.wordpress.com/2011/05/img_2741.jpg" medium="image">
			<media:title type="html">IMG_2741</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>இசையலைகள் #6</title>
		<link>http://sirumazai.wordpress.com/2011/04/21/%e0%ae%87%e0%ae%9a%e0%af%88%e0%ae%af%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-6/</link>
		<comments>http://sirumazai.wordpress.com/2011/04/21/%e0%ae%87%e0%ae%9a%e0%af%88%e0%ae%af%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-6/#comments</comments>
		<pubDate>Thu, 21 Apr 2011 03:13:43 +0000</pubDate>
		<dc:creator>aravind</dc:creator>
				<category><![CDATA[இசை]]></category>
		<category><![CDATA[இசையலைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://sirumazai.wordpress.com/?p=1234</guid>
		<description><![CDATA[ ’இந்தியன்’ திரைப்பட பாடல்கள் தாம் முதன் முதலில் நாங்கள் வீட்டில் டேப் ரிகார்டர் வாங்கிய துவக்கத்தில் அதிகம் கேட்டது. அறியாத வயதில் நான் அப்போது இருந்ததால் (இப்பவும் தான்), ‘அக்கடான்னு நாங்க உடை போட்டா’ பாடலை ஸ்வர்ணலதா நிச்சயம் மைக் முன்னர் அதி உற்சாகமான உடல்மொழியுடன் பாடியிருப்பார் என்றே நம்பிக்கொண்டிருந்தேன். கவர்மெண்ட்டுக்கே தடா போடுகிற நாயகியின் அலட்சியத்தை வெறும் குரலை மூலதனமாக வைத்து மட்டுமே கொண்டு வர முடியும் என்று என்னால் நம்பமுடியவில்லை. குறைந்தபட்சம் ஒரு குறுஞ்சிரிப்புடன் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sirumazai.wordpress.com&amp;blog=312050&amp;post=1234&amp;subd=sirumazai&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><span style="font-family:Times New Roman;font-size:small;"> <img class="alignleft size-full wp-image-1235" title="sorna" src="http://sirumazai.files.wordpress.com/2011/04/sorna.jpg?w=700" alt=""   /></span>’இந்தியன்’ திரைப்பட பாடல்கள் தாம் முதன் முதலில் நாங்கள் வீட்டில் டேப் ரிகார்டர் வாங்கிய துவக்கத்தில் அதிகம் கேட்டது. அறியாத வயதில் நான் அப்போது இருந்ததால் (இப்பவும் தான்), ‘அக்கடான்னு நாங்க உடை போட்டா’ பாடலை ஸ்வர்ணலதா நிச்சயம் மைக் முன்னர் அதி உற்சாகமான உடல்மொழியுடன் பாடியிருப்பார் என்றே நம்பிக்கொண்டிருந்தேன். கவர்மெண்ட்டுக்கே தடா போடுகிற நாயகியின் அலட்சியத்தை வெறும் குரலை மூலதனமாக வைத்து மட்டுமே கொண்டு வர முடியும் என்று என்னால் நம்பமுடியவில்லை. குறைந்தபட்சம் ஒரு குறுஞ்சிரிப்புடன் தான் பாடியிருக்க வேண்டும் என்று தோன்றியது. நான்கு பாடகர்கள் சேர்ந்து பாடியிருந்தாலும், ‘கண்ணைக் கொஞ்சம் திறந்தேன் / கண்களுக்குள் விழுந்தாய்’ என்ற ரகசிய காதல் வலை விரிப்பின் கிறக்கத்தை பாடுகையில் ஸ்வர்ணலதா மட்டுமே அதை அநாயசமாக கொண்டு வந்திருந்தார். (உன்னிமேனனுக்கு சாதாரணமாகவே கடினம். இதில் ஸ்வர்ணலதாவுடன் இணைந்து வேறு!). எஸ்.பி.பி நடித்த வேடத்திற்கு உதித்தும், நாகார்ஜுனுக்கு எஸ்.பி.பியும் பாடி மிச்சம் வைத்தது சில வரிகளிலே என்றாலும், ‘உதட்டுக்கும் உதட்டுக்கும் தூரம்’ என துவங்கும் போதே பாடல் ஸ்வர்ணலதாவின் கைவசம். (தொடர்ச்சியான அடுத்த வரிகள் ஒவ்வொன்றிலும் அதகளம்). இப்பொழுது பார்த்தாலும் மனதை அள்ளுகிற சிம்ரன் இடை வெட்டும் நடனத்தை மீறி, கூர்மையான குரலால் ‘ஒவ்வொரு காலையின் போது உன் மார்பில் நான் தூங்க வேண்டும்’ என்று வெட்டுவது சுகம். சந்தோஷப்பாடல்கள் ஒவ்வொன்றிலும் தெறிக்கும் உற்சாகமும், கேலியும், உச்சரிப்பின் செழுமையும் முழுநிலவாக பிரகாசித்த பாடல், கன்னத்தில் முத்தமிட்டாலின் pick-of-the-album பாடலான signore signore பாடலில். பாடல் முழுக்க பிண்ணனியில் ஊஞ்சலாடும் ‘ம்..ம்’ குரலும், இடையிசையில் குரல்ச்சறுக்கு விளையாட்டும்,  புருஷனக் கூட்டிட்டு வாரேன் என்கிற செல்ல மிரட்டலும், கட்டக் கடைசியில் நிராகரித்துச் சிரிக்கும் வரை, பார்த்து பார்த்து இல்லை இல்லை பாடிப் பாடி பிரமாதப்படுத்திய பாடல். இத்தனை சந்தோஷம் தெறிக்க பாடுபவர் நேரடி ஒளிபரப்பில் பாடுகையில் அத்தனை அதிர்ச்சி – தனிக்குரல் காற்றிலிருந்து மாயமாக அத்தனை குதூகலத்தையும் எங்கிருந்தோ கொண்டு வருகிறது.</p>
<p>அமெரிக்காவில் பகலெனில் இந்தியாவில் இரவு போல, இப்பாடல்களை தவிர்த்து பார்த்தால், தனித்து தவிக்கும் பெண்களின் குரலாகவும் அவர் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறார். வைரமுத்துவும் ரஹ்மானும் படைத்த சிறப்பான சோக இசைச் சிறுகதைகளின் நாயகி – எவனோ ஒருவன் வாசிக்கிறான் மற்றும் போறாளே பொன்னுத்தாயி. கதையின் இடையே வந்து மறையும் அழகிய வர்ணனை போல ‘கண்ணில் ஒரு வலி இருந்தால் / கனவுகள் வருவதில்லை’ என்றும் வந்து போனார்.  அவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்த தனிமையும் துயரும் இப்பாடல்களில் அவரின் குரல் மூலம் வெளிப்பட்டிருக்கிறது என்றே தோன்றுகிறது.</p>
<p>‘கொடுத்த சம்பளமோ ஐந்து ரூபாய், நடிப்போ ஆனால் பத்து ரூபாய்’ என்று ஜோதிகா கவனத்தை ஆக்ரமிக்க முயற்சிக்கும் ‘திருமண மலர்கள் தருவாயா’ பாடல் அவரின் மற்றொரு பவுண்டரி. (’மாடி கொண்ட ஊஞ்சல்’ என்று ஏறும் போது கொஞ்சம் இடித்தாலும்). ரஹ்மான், வித்யாசாகருக்குப் பிறகு வந்த இசையமைப்பாளர்கள் யாரும் அவரை சரியான பாடல்களில் பயன்படுத்தவில்லை.</p>
<p>எம்.எஸ்.வி அறிமுகப்படுத்தியிருந்தாலும் இளையராஜாவால் பிரபலம் ஆனவர். இளையராஜா – ஸ்வர்ணலதா என்று பேசத்துவங்கினால், முதலில், ‘என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட’ பாடலைப் பற்றி பேசியே துவங்க வேண்டும். அதிலும் அந்த துவக்க ஆலாபனை பற்றிப் பேசியே துவங்க வேண்டும். அதை அவர் பாடி முடித்த உடனே, ‘ஆங் போட்டி முடிஞ்சது எல்லோரும் வீட்டுக்கு போங்க’ என்று எஸ்.பி.பியிடம் சொல்லத் தோன்றும். (No offense meant). அதே போல கிறக்கமும் இனிப்புமாய் ஜேஸுதாஸையே மறைத்த பாடல் ‘மாசி மாசம் ஆளான பொண்ணு’. முதல் சரணத்தையும் பல்லவியையும் இணைக்கும் ஆலாபனையை அவர் பாடி முடித்ததும் அதிலிருந்த கூடுதல் தேன் கீற்றை கேட்டு அடுத்த ஆலாபனையும் அவருக்கே தரப்பட்டது என்று தாரளமாக வாதிடலாம். இசையின் ராஜாதி ராஜரின் தந்திரங்களில், அவர் குரல் நிற்காமல் பம்பரமாய் கூத்தாடிய பாடலும் மிகச்சிறப்பானது.</p>
<p>தொண்ணூறுகளில் இளையாராஜா இசையமைப்பில் auto-tune modeக்கு சென்ற பின் வந்த இனிமையான செழுமையான மெலடிகளில் ஸ்வர்ணலதாவிற்கு அழகான பாடல்கள் அமைந்தன. <a href="http://meetmadhan.blogspot.com/" target="_blank">மதன்</a> எப்போதும் சொல்லும் ‘நீ தானே நாள் தோறும் நான் பாடக் காரணம்’ (ரெண்டு தடவ தானே சொன்னேன் என்கிறார்), ’காலையில் கேட்டது கோயில்மணி’, ‘நான் ஏரிக்கர மேலிருந்து எட்டுத்திச பாத்திருந்து ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணல’ (எத்தனை அழகான பாடல்!), கேட்டதும் இழுக்கும் தாளகதியும் இதமான இசையுமாய் எப்போதும் ஈர்க்கும் ‘அந்தியில வானம்’ பாடல், ‘மலைக்கோயில் வாசலில்’ என சுருக்கமான ஆனால் சுவையான பட்டியல். அயிட்டம் நம்பர் பாடுவதென்பது வெறும் குரல் விளையாட்டாக இருந்த காலத்தில் (இப்போது அடித்தொண்டை, மூக்கு எல்லாம் சேர்த்தி) வந்த ‘ஆட்டமா தேரோட்டமா’ அது ஒரு கனாக்காலமாக இருக்கிறது.</p>
<p>நீருக்குள் மெதுவாக அசையும் தாவரம் போல நகரும் ‘மாலையில் யாரோ மனதோடு பேச’ பாடலிலிருந்து அவரின் குரலை பிரித்தெடுத்து தனியே கற்பனை செய்ய ஏலாது. (பின்னர் ஒரு முறை அவர் அதை தொலைகாட்சியில் அதை பாடும் பொழுது அவருக்கு இருந்த உடல் வாதைகளினால் ஏற்பட்ட வலி குரலில் முகத்திலும் அப்பட்டமாக தெரிந்து வருத்தியது.)  மிகச்சமீபமாக கண்டெடுத்த ’உன்னை எதிர்பார்த்தேன் / தென்றலிடம் கேட்டேன்’ பாடலை அவருக்காக கேட்டு கேட்டே இரவில் தூக்கத்தில் ஆழ்வது பழக்கமாகி இரண்டு வாரங்கள் ஓடிப்போக, மறு நாள் காலை அவரின் மரணச் செய்தி வெளியாகி, அப்பாடலை மறக்க முடியாததாக்கி விட்டது.</p>
<p>ஆகச்சிறந்த பாடல் என்பது வாதங்களின்றி ’வள்ளி’யில் வந்த ‘என்னுள்ளே என்னுள்ளே’ பாடலாக இருக்கும். காலமென்னும் தேரை ஆடிடாமல் நிறுத்தி வைக்கும் மெட்டும், ராஜா அந்தப்பக்கமாக இசைத்துக்கொண்டிருந்த சிம்பொனியின் வயலின் சிதறல்களும் சேர்ந்து மிக அற்புதமான கணமொன்றில் நிகழ்ந்த அப்பாடல் அவருகென அமைந்தது மிகப்பொருத்தமே.</p>
<p>திரையுலக ஆதர்ஸ கலைஞர்களின் மரணம் நம்முள் ஏற்படுத்துகிற சலனங்கள் வியப்பானவை. யாரோ ஒரு ரசிகர் மிகச் சகஜமான சூழலில் அவர் பாடுவதை படமெடுத்ததை <a href="http://www.youtube.com/user/GudsyGaura#p/u/5/B6ZroJwCncs" target="_blank">பார்த்த பொழுது</a>, இவர் இன்னும் கொஞ்சம் அதிகமாக தொலைகாட்சிகளில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று தோன்றியது. இல்லை ஒரு வேளை அதுவும் நல்லதே. வெறும் இந்த இசை கொண்டு மட்டுமே அவரை நினைவில் கொண்டு வரலாம் எப்போதும்.</p>
<p>&#8212;&#8212;&#8212;-</p>
<p>பி.சுசீலா தன் வெண்கலக் குரலில் பாடும் பொழுதெல்லாமே ஞாபங்களை கிளறிவிடக் கூடிய சாத்தியங்கள் உண்டு.  அதிலும்<br />
<img class="alignleft size-full wp-image-1236" title="msv-raja-rahman" src="http://sirumazai.files.wordpress.com/2011/04/msv-raja-rahman.jpg?w=700" alt=""   />குறிப்பாக நினைவுகளை தட்டி எழுப்பெவென பாட முடிவு செய்து விட்டு துவங்கும் ஹம்மிங், தமிழ் திரையின் எக்காலத்திலும் வந்த துவக்கங்களிலும் சிறப்பானவற்றுள் இடம்பெறும். திரைக்கதைப்படி இறந்தவள் உயிர் கொண்டு மீண்டு வருவதை ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ என்ற கவிஞர் அடிக்கோடிட்டு இப்பொழுதே நாயகியை பாட வைக்க, விஸ்வனாதன் – ராமமூர்த்தி அமைத்த மெட்டு காலத்தை அநாயசமாக வெல்லும். மெல்லிசை சுரங்கத்தை அப்போது தான் கண்டெடுத்த சமயம், அதை இவ்விசைமபைப்பாளர்கள் மிகக்கச்சிதமாகவே பயன்படுத்தினார்கள். ’அந்த நீல நதிக்கரையோரம்’ என்று துவங்கி மிகச்செழுமையாக வளையும் மெட்டு அதிக ஆபரணங்களின்றி எளிமையாக இருப்பதே வியப்பு. பக்க வாத்தியங்கள் உறுத்தாமல் ஒத்திசைக்க, மெட்டில் எத்தனை தேனெடுக்க முடியுமோ அத்தனை தேனெடுக்கும் விஸ்வனாதன் – ராமமூர்த்தி ஜோடியின் பாணியில் இன்றும் மயக்கும் பாடல்.</p>
<p>தென்றல் மெல்ல ஒரு பெரிய அறையின் உள்ளே பெருகும் உணர்வை தருகிறது என்று ஏற்கனவே சொல்லியிருந்த ‘பூவே செம்பூவே’வின் துவக்க இசை தாண்டி வரும் மெட்டு முன்னோர்களுக்கு கொஞ்சமும் சளைத்ததல்ல. அது நமக்கு மிகச் சுலபமாக வருகிற விஷயம் தானே என்று ராஜாவே உணர்ந்தது போல, பாடல்களின் இசையிலும் இடையிசைத் துணுக்குகளிலும் புகுத்தப்பட்டிருக்கும் நுணுக்கங்களே அவர் காலத்து முத்திரை. இறந்து போனதாக நினைத்த திருமதி கண்ணெதிரே மேடையில் நடனமாடும் சூழ்நிலைக்கு, மேடை மெல்லிசைப் பாடலுக்கான தேவைகளை மெட்டில் பூர்த்தி செய்துவிட்டு, சூழ்நிலை அதிர்ச்சியை முதல் இடையிசையில் ஹிந்துஸ்தானி பாணியிலும் அடுத்த இடையிசையில் மேற்கத்திய பாணியிலும் தருகிற அசாத்திய உழைப்பும் மேதமையும் என்னைப் போன்ற பக்தர்களை எப்போதும் ராஜா ராஜா என்றே முணுமுணுக்க வைக்கும்.</p>
<p>எண்பதுகளின் லைவ் ரிகார்டிங் மெல்ல மறைந்து அதிகத் தரமில்லாத சின்த்தசைஸர்கள் வைத்துக்கொண்டு புது இசையமைப்பாளர்கள் தவித்துகொண்டு இருந்த சமயத்தில் ரஹ்மான் கொண்டு வந்த ஒலியின் தரம், ‘மலர்களே மலர்களே இது என்ன கனவா’ பாடலின் துவக்கத்தில் திரைப்படக் காட்சியின் ஆயிரம் மலர்கள் கண்ட புத்துணர்ச்சியை எளிதாக தருகிறது. அதுவரை காலம் காலமாக தொடர்ந்த வந்த மெட்டமைக்கும் பாணி, இடையிசைக் கோர்ப்பு பாணியும் காலத்துக்கேற்ற மாற்றங்கள் பெற்று மெருகேறி, இறந்த காதலன் உயிருடன் இருக்கிறான் என்று காதலி நம்புகிற சூழலுக்கு வந்த அருமையான பாடல். கடைசியாக ”புத்தம் புது இசை” என்று விளம்பரங்கள் பெருமையாகச் சொல்லிக்கொண்டது மிகப்பொருத்தமாக இருந்தது புதுக்குரல்கள், புது ஒலிகள் என்று ரஹ்மான் காலத்தை தன் வசப்படுத்திய பொழுது தான்.</p>
<p>இந்திய திரையிசையில் தொடர்ச்சியாக இத்தனை செழுமையான இசை வேறெங்கும் கிடைத்ததாவென்பது சந்தேகமே. தமிழ் திரையிசை ரசிகர்கள் எல்லோரும் மூன்று முறை காலரை உயர்த்திக் கொள்ளலாம்.</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/sirumazai.wordpress.com/1234/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/sirumazai.wordpress.com/1234/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/sirumazai.wordpress.com/1234/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/sirumazai.wordpress.com/1234/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/sirumazai.wordpress.com/1234/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/sirumazai.wordpress.com/1234/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/sirumazai.wordpress.com/1234/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/sirumazai.wordpress.com/1234/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/sirumazai.wordpress.com/1234/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/sirumazai.wordpress.com/1234/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/sirumazai.wordpress.com/1234/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/sirumazai.wordpress.com/1234/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/sirumazai.wordpress.com/1234/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/sirumazai.wordpress.com/1234/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sirumazai.wordpress.com&amp;blog=312050&amp;post=1234&amp;subd=sirumazai&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://sirumazai.wordpress.com/2011/04/21/%e0%ae%87%e0%ae%9a%e0%af%88%e0%ae%af%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-6/feed/</wfw:commentRss>
		<slash:comments>11</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/696d6f93a60d344ddad261acf7b4259e?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">aravind</media:title>
		</media:content>

		<media:content url="http://sirumazai.files.wordpress.com/2011/04/sorna.jpg" medium="image">
			<media:title type="html">sorna</media:title>
		</media:content>

		<media:content url="http://sirumazai.files.wordpress.com/2011/04/msv-raja-rahman.jpg" medium="image">
			<media:title type="html">msv-raja-rahman</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>2010 கவுண்ட்டவுன் &#8211; எலக்‌ஷென் ஸ்பெஷல்</title>
		<link>http://sirumazai.wordpress.com/2011/04/11/2010-%e0%ae%95%e0%ae%b5%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e2%80%8c%e0%ae%b7%e0%af%86%e0%ae%a9%e0%af%8d/</link>
		<comments>http://sirumazai.wordpress.com/2011/04/11/2010-%e0%ae%95%e0%ae%b5%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e2%80%8c%e0%ae%b7%e0%af%86%e0%ae%a9%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Mon, 11 Apr 2011 03:28:48 +0000</pubDate>
		<dc:creator>aravind</dc:creator>
				<category><![CDATA[நகைச்சுவை]]></category>
		<category><![CDATA[தேர்தல்]]></category>

		<guid isPermaLink="false">http://sirumazai.wordpress.com/?p=1225</guid>
		<description><![CDATA[2010ல் வெளியான சிறந்த பத்து பாடல்களை உங்களுக்கென தொகுத்து வழங்குகிறார்கள் – toast of the season – தமிழக அரசியல் பரபரப்பு புள்ளிகள்! ஒவ்வொருவராக வந்து பாடலை பாடிக்காட்டும் சிறப்பு நிகழ்ச்சி! 2010 முடிஞ்சு இவ்ளோ நாள் கழிச்சு இப்போ என்ன countdownனு கேட்கக் கூடாது, ஐடியா இப்போத்தானே வந்தது? முதலில், மிஸ்டர் கார்த்திக், நீங்க தான் இந்த எலக்‌ஷனின் நொந்தலாலாவாமே? ஒண்ணுக்கொண்ணு துணையிருக்கும் உலகத்திலே கட்சி மட்டும் தான் அநாதையா? கார்த்திக் மட்டும் தான் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sirumazai.wordpress.com&amp;blog=312050&amp;post=1225&amp;subd=sirumazai&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>2010ல் வெளியான சிறந்த பத்து பாடல்களை உங்களுக்கென தொகுத்து வழங்குகிறார்கள் – toast of the season – தமிழக அரசியல் பரபரப்பு புள்ளிகள்! ஒவ்வொருவராக வந்து பாடலை பாடிக்காட்டும் சிறப்பு நிகழ்ச்சி! 2010 முடிஞ்சு இவ்ளோ நாள் கழிச்சு இப்போ என்ன countdownனு கேட்கக் கூடாது, ஐடியா இப்போத்தானே வந்தது?</p>
<p><strong>முதலில், மிஸ்டர் கார்த்திக், நீங்க தான் இந்த எலக்‌ஷனின் நொந்தலாலாவாமே?</strong></p>
<p><em>ஒண்ணுக்கொண்ணு துணையிருக்கும் உலகத்திலே</em></p>
<p><em>கட்சி மட்டும் தான் அநாதையா?</em></p>
<p><em>கார்த்திக் மட்டும் தான் அநாதையா?</em></p>
<p><em>யாரு என்னை கண்டுகொள்வார் கூட்டணியில் சேர்த்துக்கொள்வார்</em></p>
<p><em>சேதி சொல்ல யார் வருவார் மீட்டரின் மேல் சீட் தருவார்</em></p>
<p>&#8212;&#8212;&#8212;&#8212;</p>
<p><strong>நீரா ராடியா, உங்களுக்கு ஏன் சம்மந்தமில்லாம தமிழ்நாட்டு பிரச்சாரத்தில எல்லாரும் சம்மன் அனுப்பறாங்ங்க? தமிழ் தெரியாதுன்னா ‘ராவண்’ பாட்டு பாடுங்க, டப் பண்ணிக்கிறோம்.</strong></p>
<p><em>கள்வரே கள்வரே கள்வரே கள்வரே </em></p>
<p><em>phone-புகும் கள்வரே</em></p>
<p><em>tap செய்து போனீரோ </em></p>
<p><em>map போட்டு சாய்த்தீரோ</em></p>
<p><em>உலை வைக்கப் பார்த்தீரோ</em></p>
<p><em> </em></p>
<p><em>உம்மை எண்ணி உம்மை எண்ணி </em></p>
<p><em>ஊமை செல்ஃபோன் பேசாது  </em></p>
<p><em>தலைவா எம் தலைவா</em></p>
<p><em>வலியறிவீரோ வதை புரிவீரோ</em></p>
<p><em> </em></p>
<p><em>வாரம் தோறும் tapeஇன் பாரம் </em></p>
<p><em>கூடும் கூடும் குறையாது</em></p>
<p><em>உளவே என் உளவே</em></p>
<p><em>பழி களைவீரோ அனல் தணிவீரோ</em></p>
<p><em> </em></p>
<p><em>ஒலி மிகும் இடங்கள் ஒலி மிகா இடங்கள் தமிழுக்கு தெரிகின்றதே</em></p>
<p><em>ஒலி மிகும் இடங்கள் ஒலி மிகா இடங்கள் தங்களுக்கும் தெரிகின்றதோ</em></p>
<p>&#8212;&#8211;</p>
<p><strong>இந்தப் பெண் யாரு, யாரப் பாத்து பாடறாங்க அப்படிங்கிறது சஸ்பென்ஸ். (விண்ணைத் தாண்டி அமெரிக்காவுக்கே ஆட்டோ வரும் சார்).</strong></p>
<p><em>டெல்லியில் scene-ஆக இருந்தவள் நான்</em></p>
<p><em>உனக்கென சீட் வாங்கி தந்தவள் தான்</em></p>
<p><em>துடித்திருந்தேன் தனிமையிலே </em></p>
<p><em>திரும்பிவிட்டேன் பொதுக்குழுவிடமே</em></p>
<p><em> </em></p>
<p><em>ஒரு நாள்.. பெயிலில் மறு நாள்.. ஜெயிலில்</em></p>
<p><em>உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே </em></p>
<p><em>மன்னிப்பாயா மன்னிப்பாயா</em></p>
<p><em> </em></p>
<p><em>2g scamஇல் ஓர் அலை தான் நான்</em></p>
<p><em>’உள்ளே’ உள்ள பாரம் நீ தான்</em></p>
<p><em> </em></p>
<p><em>அனைவரும் பார்த்திடும் இலவச டிவி </em></p>
<p><em>எனக்கது எரிச்சலை தந்திடும் தோழி </em></p>
<p>&#8212;&#8212;&#8212;&#8211;</p>
<p><strong>பிரச்சாரத்திற்காக மதராஸபட்டிணம் வரும் மிஸஸ் சோனியா காந்தியை வரவேற்று காங்கிரஸ் பாட்டுக் கோஷ்டி பாட அழைக்கப்படுகிறார்கள். மிஸஸ் எர்ர் மிஸ்டர் தங்கபாலு, டேக் கேர் ஆஃப் த டிராண்ஸ்லேஷன் ப்ளீஸ்!</strong></p>
<p><em>வாம்மா துரையம்மா இது காங்கிரஸ் கிளையம்மா</em></p>
<p><em>சுணக்கம் காட்டித்தான் வரவேற்கும் கிளையம்மா </em></p>
<p><em>(we welcome with சுணக்கம். ஓ சுணக்கம்)</em></p>
<p><em> </em></p>
<p><em>வாக்கு சேர்க்கவும் போவோம் ஆளு சேர்க்கவும் போவோம்</em></p>
<p><em>சீட்டு ஒன்றுக்கு ஆளேயில்லையம்மா</em></p>
<p><em> </em></p>
<p><em>தொகுதி கேட்டுத்தான் ரொம்ப ஆடினோம் அம்மா (snake dance)</em></p>
<p><em>ஒரு குருட்டு நம்பிக்கை ஆசை வேறென்ன யம்மா (empty hands)</em></p>
<p><em>கோடி கோஷ்டிகள் இருந்தும் என்னம்மா</em></p>
<p><em> </em></p>
<p>&#8212;-</p>
<p><strong>மிஸ்டர் கலைஞர், எந்த மூலை முக்கு போனாலும் எந்த அங்காடித் தெரு போனாலும் 2G பத்தியே பேச்சா இருக்கே?</strong></p>
<p><em>அது அப்படி ஒன்றும் பெரிசில்லை</em></p>
<p><em>எங்களில் யாருக்கும் தொடர்பில்லை</em></p>
<p><em>அது அப்படி ஒன்றும் பிழையில்லை</em></p>
<p><em>ஆனால் பயமோ குறையவில்லை</em></p>
<p><em> </em></p>
<p><em>அதில் பெரிதாய் எதுவும் சுருட்டவில்லை</em></p>
<p><em>சுருட்டிய கணக்கே புரியவில்லை</em></p>
<p><em>அதில் தொடுக்கும் வழக்குகள் பிடிக்கவில்லை</em></p>
<p><em>இருந்தும் கூட்டணி முறிக்கவில்லை</em></p>
<p>&#8212;</p>
<p><strong>மிஸ்டர் ராமதாஸ், எப்படி எதுவுமே நடக்காத மாதிரி மந்திரப்புன்னகையோட உக்காந்திருக்கீங்க? எத்தன தடவயா கூட்டணி மாறியிருக்கீங்க?</strong></p>
<p><em>சட்டச்சடசடசடவென தேர்தல் முளைக்கும்</em></p>
<p><em>இருக்கும் இக்கூட்டணி புளிபுளிக்கும்</em></p>
<p><em>புத்தம்புதுபுது சீட் கிடைக்கும்</em></p>
<p><em>தித்தித்திடும்படி உறவும் முளைக்கும்</em></p>
<p><em> </em></p>
<p><em>இந்தக் கூட்டணி நானடைய எத்தனை முறை நான் தாவி வந்தேன்</em></p>
<p><em>இந்தக் கட்சியினை நானடைய எத்தனை முறை நான் மாறி வந்தேன்</em></p>
<p>&#8212;-</p>
<p><strong>டியர் உடன் பிறவா சிஸ்டர்ஸ், என்ன தில்லாலங்கடி வேல நடக்குது கார்டன்ல? ஒருத்தர் சித்ரா வாய்ஸ்லயும் ஒருத்தர் ஷ்ரேயா கோஷல் வாய்ஸ்லயும் பாடுங்க ப்ளீஸ்.</strong></p>
<p><em>சொல் பேச்சு கேக்காத சுந்தரியே </em></p>
<p><em>நில்லுன்னா நிக்காம துள்ளுறியே</em></p>
<p><em>நீயாக list-ஒன்னை தேத்துறியே </em></p>
<p><em>ஆற்காடு மேலே போய் மோதுறியே</em></p>
<p><em>ஏமாந்து போகாதே ஏமாத்திப் போகாதே</em></p>
<p><em>என்னையும் மைனாரிட்டி ஆக்கி வைக்கப் பாக்காதே</em></p>
<p><em> </em></p>
<p><em>இந்த வைகோ தேவை தானா? இந்த கார்த்திக் தேவை தானா?</em></p>
<p><em>தெரியலையே புரியலையே மெல்ல கன்ஃப்யூஸ் ஆனேன்</em></p>
<p><em>இந்த கேப்டன் தேவை தானே விஜயும் தேவை தானே</em></p>
<p><em>இடமிருக்கா இடமில்லையா யாரை கேட்டுச்சொல்வேன்?</em></p>
<p>&#8212;</p>
<p><strong>இம்சை தரும் இம்சை அரசரே, நாட்டில் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்திருக்கும் ஹீரோ யாராம்?</strong></p>
<p><em>who is the hero who is the hero?</em></p>
<p><em>தாக்குகின்ற வாத்தியாரோ</em></p>
<p><em>வாக்கு கேட்கும் வேட்புகளை </em></p>
<p><em>நாறு நாறாய் கிழிக்கும் zorro</em></p>
<p><em> </em></p>
<p><em>டேமாஜாகும் அவர் பேரோ</em></p>
<p><em>சீறிவந்த மந்தமான arrow</em></p>
<p><em>காமிராவில் மாட்டும் லாவகத்தை பாரு</em></p>
<p><em>Hey come on, கேப்டன் பேசும் சத்தம் கேட்குதே</em></p>
<p><em> </em></p>
<p><em>1 2 3 And 4<br />
Captain Shut Yourself And Lock The Door<br />
Ak Dho Theen Ya Char<br />
We Will Get Where Ever You Are</em></p>
<p><em>Go Go Go Go Captain Go<br />
Go As Far As You Can Go<br />
Nowhere Is Too Far Man<br />
We will Drag You Out Of Any Jam</em></p>
<p><em> </em></p>
<p><em>வேலி தாண்டும் ஆளும் நம் ஆளு ஆளே ஆளே</em></p>
<p><em>வேவு பார்க்கும் அந்த ஆள் யார்? நான் நான் நான் நான்</em></p>
<p>&#8212;</p>
<p><strong>எலக்‌ஷன்ல எல்லாரு(ரையு)ம் அடிக்கிற பையா, மிஸ்டர் கேப்டன், ஏன் ஒண்ணா பிரச்சாரம் பண்ண மாட்டேங்கிறீங்க, நீங்களும் மேடமும்?</strong></p>
<p><em>நாம் மேடை ஏற நேரமில்லை</em></p>
<p><em>ஒன்றாக பேசத் தேவையில்லை</em></p>
<p><em>நம் கூட்டணிக்குள் பாரமில்லை</em></p>
<p><em>உண்மை மறைத்தாலும் மறையாதது</em></p>
<p><em> </em></p>
<p><em>என் மொழியாலே என் மொழியாலே</em></p>
<p><em>நம் வழி மாறும் மெல்ல தடுமாறும்</em></p>
<p><em> </em></p>
<p><em>அடி இது ஏதோ ஒரு புது குழுப்பம்</em></p>
<p><em>இது வலித்தாலும்</em></p>
<p><em>நெஞ்சம் அதை ஏற்கும்</em></p>
<p><em> </em></p>
<p>&#8212;&#8212;</p>
<p><strong>ஆயிரம் பேர் எலக்‌ஷென்ல நிக்கிற இந்த டைம்ல, ஆயிரத்துல ஒருத்தரா தனியா புறக்கணிச்சு நிக்கிறீங்களே, மிஸ்டர் வைகோ, கிரேக்க புராணத்தில் என்ன தான் நடக்கிறது?</strong></p>
<p><em>மாலை நேரம் மறு தேர்தல் காலம் என் ஜன்னல் ஓரம் நிற்கிறேன்</em></p>
<p><em>நீயும் நானும் ஒரு கூட்டணிக்குள்ளே இன்னுமிருப்பது போலே நினைக்கிறேன்</em></p>
<p><em> </em></p>
<p><em>ஓடும் காலங்கள் </em></p>
<p><em>உடன் சேரும் கட்சிகள் </em></p>
<p><em>இடம் மாறும் தொகுதிகள் தொடர்கிறதே</em></p>
<p><em> </em></p>
<p><em>இது தான் தேர்தலா</em></p>
<p><em>ஒரு துணை தான் தேவையா </em></p>
<p><em>மனம் என்னையே கேட்கிறதே</em></p>
<p><em> </em></p>
<p><em>ஓஹோ கூட்டணி இங்கே ஓய்ந்தது</em></p>
<p><em>கடிதம் இன்று வந்தது </em></p>
<p><em>பேசும் போதே முறிந்தது அன்பே</em></p>
<p><em> </em></p>
<p><em>தாய் மனமே இந்த தாயகம் </em></p>
<p><em>நெஞ்சில் எதையும் தாங்கிடும்</em></p>
<p><em>இத்தேர்தலை அறவே தாண்டிடும் அன்பே </em></p>
<p><em>ஒரு தரமே&#8230;</em></p>
<p><em> </em></p>
<p><em>ஒரு முறை தாயகம் நீயாய் வந்தால் என்ன?</em></p>
<p><em>நான் கேட்கவே துடித்திடும் தொகுதி தந்தால் என்ன?</em></p>
<p><em>துரோகத்தில் விழுந்த இதயம் மீட்க முடியாதது</em></p>
<p><em>பேச்சினில் தொலைந்த தொகுதிகள் மீண்டும் கிடைக்காதது</em></p>
<p><em>ஒரு மாலையில் நீயில்லை லிஸ்ட்டிலும் பேர் வரவில்லை</em></p>
<p><em>படித்ததும் புரிந்தது நான் இழந்தேனென</em></p>
<p><em> </em></p>
<p>&#8212;&#8212;&#8212;</p>
<p><strong>மறக்காம ஓட்டு போடுங்க! ஓட்டு போடுங்க! ஓட்டு போடுங்க!</strong></p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/sirumazai.wordpress.com/1225/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/sirumazai.wordpress.com/1225/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/sirumazai.wordpress.com/1225/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/sirumazai.wordpress.com/1225/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/sirumazai.wordpress.com/1225/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/sirumazai.wordpress.com/1225/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/sirumazai.wordpress.com/1225/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/sirumazai.wordpress.com/1225/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/sirumazai.wordpress.com/1225/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/sirumazai.wordpress.com/1225/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/sirumazai.wordpress.com/1225/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/sirumazai.wordpress.com/1225/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/sirumazai.wordpress.com/1225/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/sirumazai.wordpress.com/1225/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sirumazai.wordpress.com&amp;blog=312050&amp;post=1225&amp;subd=sirumazai&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://sirumazai.wordpress.com/2011/04/11/2010-%e0%ae%95%e0%ae%b5%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e2%80%8c%e0%ae%b7%e0%af%86%e0%ae%a9%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>4</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/696d6f93a60d344ddad261acf7b4259e?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">aravind</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>Tagged</title>
		<link>http://sirumazai.wordpress.com/2011/04/10/tagged/</link>
		<comments>http://sirumazai.wordpress.com/2011/04/10/tagged/#comments</comments>
		<pubDate>Sun, 10 Apr 2011 23:05:42 +0000</pubDate>
		<dc:creator>aravind</dc:creator>
				<category><![CDATA[பொது]]></category>
		<category><![CDATA[Tag]]></category>

		<guid isPermaLink="false">http://sirumazai.wordpress.com/?p=1219</guid>
		<description><![CDATA[நண்பர் கார்த்திக் இந்தப் பதிவை மீண்டும் எழுதுமாறு அன்புக்கட்டளை இட்டிருந்தார். அவருக்காக.  மற்றவர்களுக்கு அவர் வீட்டு அட்ரெஸ் தேவைப்பட்டால் சொல்லவும். &#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8211; நிறம் – கருப்பு. சில காலமாக சிகப்பும். தேர்தல் அர்த்தங்கள் ஏற்றவேண்டாம். உணவு – ஜனவரியில் இருந்து சமைக்கத் துவங்கியிருக்கிறேன். நான் சமைக்கிற எதுவுமே பிடிக்கிறது. வேறு யாராவது சமைத்தால் இன்னும் பிடிக்கிறது. மாதம் – குறிப்பிட்டு எதையும் சொல்ல முடியவில்லை. பாடல் &#8211; சமீபமாக அடிக்கடி கேட்பது, கன்னத்தில் முத்தமிட்டாலில் வரும் இலங்கைப் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sirumazai.wordpress.com&amp;blog=312050&amp;post=1219&amp;subd=sirumazai&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>நண்பர் <a href="http://chummaaorublog.wordpress.com" target="_blank">கார்த்திக்</a> இந்தப் <a href="http://sirumazai.wordpress.com/2007/03/04/50/#comment-972" target="_blank">பதிவை</a> மீண்டும் எழுதுமாறு அன்புக்கட்டளை இட்டிருந்தார். அவருக்காக.  மற்றவர்களுக்கு அவர் வீட்டு அட்ரெஸ் தேவைப்பட்டால் சொல்லவும்.</p>
<p>&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8211;</p>
<p><strong>நிறம்</strong> – கருப்பு. சில காலமாக சிகப்பும். தேர்தல் அர்த்தங்கள் ஏற்றவேண்டாம்.</p>
<p><strong>உணவு</strong> – ஜனவரியில் இருந்து சமைக்கத் துவங்கியிருக்கிறேன். நான் சமைக்கிற எதுவுமே பிடிக்கிறது. வேறு யாராவது சமைத்தால் இன்னும் பிடிக்கிறது.</p>
<p><strong>மாதம்</strong> – குறிப்பிட்டு எதையும் சொல்ல முடியவில்லை.</p>
<p><strong>பாடல்</strong> &#8211; சமீபமாக அடிக்கடி கேட்பது, கன்னத்தில் முத்தமிட்டாலில் வரும் இலங்கைப் பாடல்.</p>
<p><strong>விளையாட்டு</strong> – பனிச்சறுக்கு. (ஹே நான் ஜெயிலுக்கு போறேன் ஜெயிலுக்கு போறேன் ஜெயிலுக்கு போறேன்)</p>
<p><strong>பருவம்</strong> – மழைக்காலம்.</p>
<p><strong>வார நாள்</strong> – சனிக்கிழமை. வார இறுதி என்பது ஒரு நாள் தான் என்பது என் கணக்கு. இந்த ஞாயிற்றுக்கிழமை அசிங்கமாக திங்கட்கிழமையுடன் ஒட்டிக்கொண்டிருக்கிறது. (சதிலீலாவதியில் வத்சலா பாட்டி ரமேஷ் அரவிந்தையும் ஹீராவையும் பற்றிச் சொல்வது நினைவுக்கு வருகிறது)</p>
<p><strong>ஐஸ்க்ரீம் ஃப்ளேவர்</strong> – வனீலா. (போன முறை சொன்னதையும் இந்த முறை சொன்னதையும் வைத்து நான் எத்தனை முன்னேறியிருக்கிறேன் என்று புரிந்து கொள்ளலாம்)</p>
<p><strong>பொழுது</strong> – இரவுப் பொழுது. No contest.</p>
<p><strong>தற்போதைய..</strong></p>
<p><strong>மனநிலை</strong> – வார இறுதி வேலைகள் முடிந்தன. இரவு சாப்பாட்டு பிரச்சினைக்கு சமைத்தாயிற்று. ஜன்னல் அருகே லேப்டாப்புடன் வெகு நாட்களுக்குப் பிறகு எழுத அமர்ந்திருக்கிறேன். இனி இந்த ஞாயிறு மெல்லச் சாகும் நிம்மதியாக, அந்த ஞாயிறு முளைக்கும் வரை.</p>
<p><strong>சுவை</strong> – french onion sauce. சூப்பர்மார்கெட்டில் சும்மானாச்சுக்கும் சுவைக்க கொடுத்தார்கள்.</p>
<p><strong>உடை</strong> – டீ ஷர்ட், நைட் பேண்ட். (போன முறையும் இதே தான் சொல்லியிருக்கிறேன். அதே டீ ஷர்ட், பேண்ட் ஆக இருந்தாலும் ஆச்சரியமில்லை.)</p>
<p><strong>கணினியின் முகப்பு</strong> – ஐயோ, இப்பவும் ராஜா தான்.</p>
<p><strong>கால் நகத்தின் நிறம்</strong> – ஙே. ஒரு மாதிரி வெள்ளைனு வெச்சுக்கலாம்.</p>
<p><strong>நேரம்</strong> – 6:00 PM EST</p>
<p><strong>சூழல்</strong> – யாருமில்லாத பெரிய ஹாலை ஆக்ரமித்திருக்கிறேன். பக்கத்து அறையில் தோழர் பார்த்துக்கொண்டிருக்கிருக்கும் தெலுங்கு படத்தின் பிண்ணனி இசை லேசாக கேட்கிறது. லேப்டாப்பில் ‘தானா வந்த சந்தனமே’. ஜன்னல் வழியே பார்க் செய்யப்பட்ட கார்களின் அணிவகுப்பும் யாருமில்லாத சாலையும் சூரியன் இல்லாத மந்தமான வானமும்.</p>
<p><strong>எண்ணம்</strong> – எழுத வேண்டிய பதிவுகளைப் பற்றி.</p>
<p><strong><span style="text-decoration:underline;">ஐந்து முதல்கள்</span></strong></p>
<p>இது போன முறை குறிப்பிட்டவையே தான். திடீரென மாற்றிக்கொள்ள இன்னும் அரசியல்வாதியோ சினிமா பிரபலமோ ஆகவில்லை.</p>
<p>போன முறை மிலிண்டா மெயிலில் விளக்கிய பின்னர் அப்டேட் செய்யவில்லை. முதல் screenname – silverprince. எதோ சுஜாதா கதையில் வந்ததாக நினைவு.</p>
<p><strong><span style="text-decoration:underline;">’ஆறு’ கடைசிகள்</span></strong></p>
<p><strong>சிகரெட்</strong> – வெள்ளிக்கிழமை மாலை டேட்டாபேஸ் கனெக்‌ஷன் முழித்துக்கொண்டு விட்டது என்பதை சொல்ல வந்த க்ளையண்ட் சற்று முன் இழுத்ததில் கொஞ்சத்தை முகத்தில் விட்டுப் போனார்.</p>
<p><strong>குடித்த திரவம்</strong> – ஆரஞ்சு பழச்சாறு.  றகர ரகர பிரச்சினை இருக்கும் நபர்களுக்கு மட்டும் ஸ்பெஷல் குறிப்பு &#8211; ஒரே பழச்சாறு தான்.</p>
<p><strong>கார் பயணம்</strong>-  போன வாரம் வாஷிங்கடன் போய் வந்தது – ஏழு + ஏழு மணி நேரம். இரவு முழுக்க பாடல்கள். சத்தமாக உடன் பாடிக்கொண்டு காரை ஓட்டிக்கொண்டிருந்த நண்பரை தூங்காமல் பார்த்துக்கொண்டேன்.</p>
<p><strong>பார்த்த படம்</strong> – நேற்றிரவு நடுநிசி நாய்கள். எத்தனை கொடுமையாய் ஒரு படம்.</p>
<p><strong>தொலைபேசி உரையாடல்</strong> – அறை நண்பரின் ஃபோன் வேலை செய்யவில்லை. அதை சோதிக்க வேறு வேறு அறையில் இருந்தபடி நாலு ஹலோ சொல்லிக்கொண்டோம். நான் ரெண்டு அவர் ரெண்டு.</p>
<p><strong>புத்தகம்</strong> – A Fine Balance (Rohinston Mistry). துவங்கி நூறு பக்கங்கள் தாண்டியிருக்கிறேன்.</p>
<p><strong>நீங்கள் எப்போதாவது சட்டத்தை மீறியிருக்கிறீர்களா? </strong></p>
<p>இல்லை, அறியாத வயசில் சொல்ல சொல்லக் கேட்காமல் புகைப்படம் எடுக்கையில் எம்பிவிட்டதால், சுவற்றில் மாட்டியிருந்த புகைப்படத்தில் ஒரு கை சட்டத்தை மீறியிருந்தது. (உங்களுக்கு வேணும் கார்த்திக் <img src='http://s2.wp.com/wp-includes/images/smilies/icon_lol.gif' alt=':lol:' class='wp-smiley' />  )</p>
<p><strong>நீங்கள் எப்போதாவது கைது செய்யப்பட்டிருக்கிறார்களா? </strong></p>
<p>கண்ணீரால் சில முறை, வார்த்தைகளாலும் மௌனங்களாலும் சில முறை, கண்களால் பல முறை. (அவ்வ்வ்வ்வ்!)</p>
<p><strong>நீங்கள் எப்போதாவது டிவியில் வந்திருக்கிறீர்களா?</strong></p>
<p>போன முறை போட்ட மொக்கை மாதிரி வேறு வராது. ஆகையால் சீரியஸாக சொல்கிறேன். ராஜ் டிவிக்காக நடிகை கஸ்தூரி நடத்திய க்விஸ் போட்டிக்காக பங்கேற்றிருக்கேன். அப்போது மங்கலாக வந்திருக்கிறேன்.</p>
<p><strong>நீங்கள் எப்போதாவது பொய் சொல்லியது உண்டா?</strong></p>
<p>நிறைய. பொய் சொல்வதை மிகவும் internalize செய்துகொண்டுவிட்டேன் என்று பயமாக இருக்கிறது. சில சமயங்களில் பொய் சொல்கிறோம் என்பதே உறைப்பதில்லை.</p>
<p><strong>நீங்கள் முன்பின் தெரியாத ஒருவருக்கு முத்தம் கொடுத்திருக்கிறீர்களா?</strong></p>
<p>ஒரு முறை <img src='http://s1.wp.com/wp-includes/images/smilies/icon_wink.gif' alt=';)' class='wp-smiley' />  (இந்த ஒற்றை விடையிலாவது இந்த பதிவு ஹிட்டாகிவிடாதா விடாதா!)</p>
<p><strong>நான்கு விஷயங்கள்:</strong></p>
<p><strong>இன்று செய்தவை – </strong>பூண்டு ரசம், கத்தரிக்காய் பொரியல், சோறு பொங்கியது, அதை ரசத்தோடும் கத்தரிக்காயுடனும் தின்றது.</p>
<p><strong>இப்போது காதால் கேட்பது</strong> – வா வா மஞ்சள் மலரே.  வேறெதுவும் சத்தமில்லை.</p>
<p><strong>நீங்கள் வாழத்தேவையான வஸ்து</strong> – இண்டெர்நெட். இண்டெர்நெட், இண்டர்நெட், இண்டர்நெட்.</p>
<p><strong>போரடிக்கும் போது செய்வது</strong> – அடுத்தவர்களை போரடிப்பது. (சுவாரசியமான கமெண்ட் அடிப்பவர்களுக்காக இந்த இடத்தில் கொஞ்சம் ஸ்கோப் வைக்கிறேன்)</p>
<p> <strong>நீங்கள் இன்று சென்ற நான்கு இடங்கள்</strong> – சூப்பர் மார்கெட், சலூன், எர்ர் சூப்பர் மார்கெட்டில் பழங்கள் நிறைத்து வைக்கப்பட்டிருக்கும் அறை, எர்ர், அப்படியே குளியலறை சாதனங்கள் இருக்கும் பகுதி.</p>
<p><strong>நீங்கள் சொல்லத்தோன்றியதை தயங்காமல் எந்த மூவரிடம் சொல்வீர்கள்</strong><strong><span style="font-family:Times New Roman;">  &#8211; </span></strong> என்னிடம், என் கண்ணாடியிடம், என்னைத் தவிர யாருமில்லாத அறையிடம்.</p>
<p><strong> </strong><strong>இரண்டு விருப்பங்கள்</strong><strong>:</strong></p>
<p><strong>கருப்பா? வெள்ளையா? – </strong>கருப்பு.</p>
<p><strong>Hot or Cold – </strong>Hot!</p>
<p><strong> </strong><strong>இறப்பதற்குள் செய்ய வேண்டிய ஒன்று</strong><strong> – </strong>இறந்த பிறகு என்னாகும் என்பதை தெரிந்து கொள்வது. ஒரு வேளை இறந்த பிறகு தெரியாமல் போய்விட்டால்?</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/sirumazai.wordpress.com/1219/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/sirumazai.wordpress.com/1219/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/sirumazai.wordpress.com/1219/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/sirumazai.wordpress.com/1219/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/sirumazai.wordpress.com/1219/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/sirumazai.wordpress.com/1219/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/sirumazai.wordpress.com/1219/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/sirumazai.wordpress.com/1219/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/sirumazai.wordpress.com/1219/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/sirumazai.wordpress.com/1219/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/sirumazai.wordpress.com/1219/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/sirumazai.wordpress.com/1219/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/sirumazai.wordpress.com/1219/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/sirumazai.wordpress.com/1219/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sirumazai.wordpress.com&amp;blog=312050&amp;post=1219&amp;subd=sirumazai&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://sirumazai.wordpress.com/2011/04/10/tagged/feed/</wfw:commentRss>
		<slash:comments>4</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/696d6f93a60d344ddad261acf7b4259e?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">aravind</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>மேகத்தின் ஈரச்சிறகுகள்</title>
		<link>http://sirumazai.wordpress.com/2011/03/14/%e0%ae%ae%e0%af%87%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%88%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/</link>
		<comments>http://sirumazai.wordpress.com/2011/03/14/%e0%ae%ae%e0%af%87%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%88%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Mon, 14 Mar 2011 04:19:20 +0000</pubDate>
		<dc:creator>aravind</dc:creator>
				<category><![CDATA[எண்ணங்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://sirumazai.wordpress.com/?p=1211</guid>
		<description><![CDATA[தொன்னூற்றி ஐந்தாம் ஆண்டு ஜூன் மாதத்தில் அப்பா தவறிப்போனப் பிறகு வீட்டில் நாங்கள் மொத்தம் நான்கு பேரானோம். புத்தம் புதிதாக கட்டப்பட்ட வீட்டை வாடகைக்கு எடுத்து வந்திருந்தோம். எலி வளையானாலும் தனி வளையென்று சொல்லிக் கொள்வதற்கேற்றவாறு எலி வளையினைப் போலவே ஒற்றை வாசலுடன் துவங்கி பக்கவாட்டிலேயே மூன்று அறைகளாக நீண்டு படுக்கையறைச் சுவரில் முடியும் வீடு. சிறிய வீடாயினும் எங்கள் நால்வருக்கு சரியாக இருந்தது. அந்த ஆண்டிற்குப் பிறகு வேலை, படிப்பு போன்ற காரணங்களினால் வீட்டில் எப்போதும் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sirumazai.wordpress.com&amp;blog=312050&amp;post=1211&amp;subd=sirumazai&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>தொன்னூற்றி ஐந்தாம் ஆண்டு ஜூன் மாதத்தில் அப்பா தவறிப்போனப் பிறகு வீட்டில் நாங்கள் மொத்தம் நான்கு பேரானோம். புத்தம் புதிதாக கட்டப்பட்ட வீட்டை வாடகைக்கு எடுத்து வந்திருந்தோம். எலி வளையானாலும் தனி வளையென்று சொல்லிக் கொள்வதற்கேற்றவாறு எலி வளையினைப் போலவே ஒற்றை வாசலுடன் துவங்கி பக்கவாட்டிலேயே மூன்று அறைகளாக நீண்டு படுக்கையறைச் சுவரில் முடியும் வீடு. சிறிய வீடாயினும் எங்கள் நால்வருக்கு சரியாக இருந்தது. அந்த ஆண்டிற்குப் பிறகு வேலை, படிப்பு போன்ற காரணங்களினால் வீட்டில் எப்போதும் இருவரோ மூவரோ மட்டுமே இருந்திருக்கிறோம். எத்தனை இடமிருந்தும் சில தருணங்களில் ஒவ்வொருக்கும் தனிமை தேவைப்பட்டது. பதின்ம வயதின் ஒரு பக்க வாசல் வழியே நான் நுழைய எத்தினித்திருக்க, இரு சகோதரிகளும் மறு வாசல் வழியே அப்போதே வெளியேறி இருந்தார்கள். எங்கள் மூவருக்கும் அவ்வாசல்களுக்கிடையேயான வெளியென எப்போதும் விரிந்திருந்தது மொட்டை மாடி. மொட்டை மாடியில் தனியே உலாத்திக்கொண்டிருப்பது அந்த வயதின் அவசிய தேவையாக இருந்தது.</p>
<p>வீடு ஏற்கனவே மாடியில் தான் இருந்தது. மாடியின் மூன்றில் ஒரு பங்கை வீடாக கட்டி, மீதமிருந்த இடத்தை அப்படியே வானம் பார்க்க திறந்து விட்டிருந்தார்கள். வீட்டு வாசலை தாண்டி வந்தால் மழையும் நட்சத்திரங்களும் இரவும் கிடைக்கும். மாடிப்படியில் ஏறி இறங்கியிருக்க வேண்டிய வானம் வாசலில் மிதயடியைப் போல கிடந்தது. ஒரு அடி தாண்டி ஈரத்துணிகளை வெயிலில் பரப்பிவிட்டு உள்ளங்கால் சுடுவதற்குள் உள்ளே ஓடி வந்துவிடலாம். ஒரு அடி தாண்டிச் சென்றால் அம்மாவின் கோபத்திலிருந்து நாமும் தப்பிக்கலாம் அம்மாவையும் தப்பிக்கச் செய்யலாம். விருந்தினர்களுக்கு விடைகொடுத்து விட்டு வாசல் தாண்டிச் சென்று மீண்டும் உரையாடத் துவங்கலாம். தாண்டாமல் நின்றுக்கொண்டே இருந்தால் இரு வேறு உலகங்களுக்கிடையேயான வாயிலில் நிற்கலாம், ஈரம் சொட்டச் சொட்ட கதவருகே சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் குடையைப் போல. வீட்டிற்கு குடி வந்த இரண்டே மாதங்களில் ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்குப் போவது போல மாடிக்கு வந்து சென்றுகொண்டிருந்தோம். பின்னெப்போதேனும் கட்டுமானப்பணிகளை துவங்கவென மூன்று சிமெண்டுத் தூண்கள் என்னில் பாதி உயரத்திற்கு மாடியில் சம தொலைவில் நின்றுகொண்டிருக்கும். அதனுடன் நின்று நின்று என் உயரத்தின் மாற்றைத்தை அளவெடுத்துக்கொண்டே இருக்கத் துவங்கினேன்.</p>
<p>ஏராளமான ரகசியங்கள் எனக்கென ஒன்றன் பின் ஒன்றாகச் சேரத் துவங்கியிருந்தன. வளர்ப்புப் பிராணிகளின் பின்னங்கழுத்து ரோமப்பட்டு போல இதம் தரும் ரகசியங்கள். அவற்றை தனியே வருடிப்பார்த்துகொண்டே இருப்பது உயிர்ப்பின் தேவையாக இருந்தது. அனிச்சையாக கால்கள் வீட்டைக் கடந்து வெளியே வந்து மனம் காற்றை உள்வாங்கி ரகசியத்தை சுவாசித்துக் கொண்டிருந்து விட்டு, வீட்டிலிருந்து அழைப்பு வந்ததும் பிரம்மாண்ட சிறகுகளை சட்டென மடக்கி குறுகிய இடைவெளியினுள் லாவகமாக நுழையும் பறவையினைப் போல வீட்டிற்குள் செல்வது வழக்கமானது. விடுமுறைக்கு சகோதரிகள் வீட்டிற்கு வந்த நான்காம் நாளிலிருந்து மாடியின் வானம் பறவைகளுக்கிடையில் சமமாக பங்கிடப்பட்டிருக்கும். தொலைவில் இருந்த திரையரங்குகள் மாலை காட்சியின் துவக்கத்தை அறிவிக்க ஒலிபரப்பும் பாடல்களின் சிற்சில வார்த்தைகள் சிப்பிகள் போல காற்றில் மாடியில் வந்து ஒதுங்க ஒதுங்க காலாற நடக்கத் துவங்கினால் இரவின் கடைசி இலை உதிரும் வரை தொடரலாம்.</p>
<p>அம்மா அப்படி நடந்து பார்த்ததேயில்லை. மூன்று பிள்ளைகளை தனியாக வளர்ப்பது அவளை ஏற்கனவே இலக்கு புரியாத பெருவெளியில் தனியே நடக்க விட்டிருப்பதை போல இருந்திருக்க வேண்டும். அவள் மாடியில் நடந்துகொண்டிருந்தால் சென்னைக்கு சென்ற சகோதரிகளில் யாரோ வீடு திரும்ப தாமதாகிக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம். மணி ஆறினை கடந்தால் அம்மாவுக்கு இருப்பு கொள்ளாது. ஊரின் பெரிய தெருவின் கிளைத்தெருவில் முதல் வீடு எங்களுடையது. எங்கள் வீட்டிற்கும் தெருவில் கிளை துவங்கும் இடத்திற்கும் இடையே வானை முட்டும் பெரிய தண்ணீர் டாங்க் இருந்தது. அதைச் சுற்றி ஒரு மைதானமும் சில புதர்களும். தடையின்றி தெருவினுள் யார் நுழைகிறார்கள் என்று பார்க்கும் கோணம். அம்மா தனியே நின்றுகொண்டு பார்த்திருக்க துவங்கினால் மற்றவர்கள் மாடியில் இருக்க மாட்டோம். வீடு திரும்ப வேண்டியிருந்தது மூத்த சகோதரியெனில் அம்மாவின் நடையினில் பதற்றைத்தை விட கோபம் அதிகமிருக்கும் அக்காவிற்கு தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகம் என்பதால். இளைய சகோதரியெனில் நடையினில் பதற்றமே மிஞ்சும், அவளுக்கு பயம் அதிகமென்பதால். கோபம் உச்சைத்தை எட்டும் போதெல்லாம் வெடுக்கென அம்மா வீட்டினுள் நுழைந்தால் எஞ்சியிருக்கும் நாங்கள் வெளியே வந்து பார்த்திருந்து விட்டு அம்மா வந்ததும் மீண்டும் உள்ளே சென்று விடுவோம். தாமதம் ஆக ஆக எல்லோருமாக மாடியில் அமைதியாக உலாத்த துவங்கி விடுவதுண்டு, அம்மாவை விட்டு விட்டு எங்களுக்குள் மட்டும் ரகசிய கேலியுடன். பின்னர் கடைசி பேருந்திலிருந்து சோர்வாக இறங்கி கலையும் மக்கள் எங்கள் தெருவை கடந்து போகத்துவங்கியதும் சோடியம் வேப்பர் விளக்கின் வெளிச்சத்தில் உற்றுக் கவனித்திருந்து, ‘வந்தாச்சு’ என்று நாங்கள் யாரேனும் சொல்லும் ஒற்றை வார்த்தையுடன் அம்மா உள்ளே சென்று விடுவர். நாங்கள் மூவரும் கொஞ்சம் நேரம் சிரித்து அவ்விரவை தீர்த்து விட்டு அடுத்த நாள் அம்மா சரியாகும் வரை காத்திருப்போம். மீண்டும் அடுத்த முறை தெரு முனையை பார்த்துக்கொண்டு அம்மா நிற்கிற நாள் வரவே செய்யும். பல வருடங்களுக்குப் பிறகு, வெளியே சென்றிருந்த அக்காவும் அவளின் கணவரும் வீடு திரும்ப காத்திருந்த அம்மா அபார்ட்மெண்ட் கதவின் கண்ணாடிக் கண்ணின் வழியே நெற்றியைச் சுருக்கி அனிச்சையாக பார்ப்பதை தற்செயலாக கவனிக்க நேர்கையில் பிரம்மாண்ட ஒளிக்கற்றை குவியத்தின் வழி புகுந்து தலைகீழாகிச் சுருங்கி சிறு புள்ளியாவதைப் போல காலம் மாறியிருந்தது.</p>
<p>எனக்கென அவர்கள் அப்படி மாடியில் காத்திருப்பது நிகழ வெகு நாள் காத்திருக்க வேண்டிருயிருந்தது. அந்த நாளுக்கு நான் காத்திருந்தேன் என்றே நினைக்கிறேன். மிக குழுப்பமாக கழிந்தது என்னுடைய பதின்ம வருடங்கள். வாக்குவாதமே பேச்சுமுறையாக இருந்தது. வீட்டில் அம்மாவும் நானும் மாத்திரம் இருக்க வேண்டியிருந்த காலங்கள். மீசை முளைத்த மறுநாளோ முதன் முறையாக சவரம் செய்த நாளுக்கு மறுநாளோ, ஒரு நாள் திடீரென இரவு மொட்டை மாடியில் தூங்கப்போவதாக பாயைச் சுருட்டிக்கொண்டு வந்தமர்ந்தேன். இரவு பத்து மணியானால் இரும்புக் கதவை இழுத்துச் சாத்தி பூட்டிவிடுவது அம்மாவின் வழக்கம். அன்று அப்படிச் சொன்னதும் ஏதும் வாக்குவாதம் நிகழவில்லை. அது ஒரு வாக்குவாதத்திற்கும் மற்றொன்றிற்கும் இடையேயான மௌனத்தில் இது நிகழ்ந்துகொண்டிருந்தது. அம்மா இரும்புக் கதவை மட்டும் பூட்டிக்கொண்டு பெரிய கதவை திறந்து வைத்துக் கொண்டு படுக்கச்சென்று விட்டார். வானம் என் மேலே வந்து வந்து விழுவது போன்ற பிரமை. கண்களை இறுக்க மூடிக்கொண்டு எதற்கோ பிடிவாதமாக கிடந்தேன். பாதி இரவில் யாரை வென்றோம் என்று தெரியவில்லையென்றாலும் திருப்தியுடன் அம்மாவை கதவை திறக்கச் சொல்லி உள்ளே சென்றேன். கல்லூரி நுழைவுத்தேர்வு பயிற்சிக்காக தினமும் சென்னை சென்று வரத் தேவை ஏற்பட்ட முதல் தினத்தில் பின்னிரவில் தெருவினில் நுழைந்ததும் மாடியில் மூன்று பெண்களின் நிழலுருவத்தை கண்டது முதல் நினைவாக இருக்கிறது. அதன் பின்னர் பல சமயங்களில் தாமதமாக வீடு திரும்புகையில் மூவரும் காத்திருப்பது வழக்கமானது.</p>
<p>வீட்டிற்கு நண்பர்களை அழைத்து வருவது அரிதாகவே நிகழ்ந்தது. அதுவும் உடன் படித்த பெண்களை அழைத்து வருவது மிக அரிதே.  நான் வலுக்கட்டாயமாக செய்யத் துவங்கிய விஷயங்களில் அதுவும் ஒன்று. அப்படி ஆண் நண்பர்களையும் பெண் நண்பர்களையும் வந்தால் அந்தப்பக்கம் ஊரும் இந்தப்பக்கம் அம்மாவும் பார்க்கும் வண்ணம் மாடிச்சுவற்றின் மீது சாவகாசமாக அமர வைத்து மாலைப் பொழுதுகளில் பேசிக்கொண்டிருக்கத் துவங்கினேன். கல்லூரியில் இணைந்த பின் கொஞ்சம் கொஞ்சமாக மனதில் இருந்த வீம்பும் குழப்பங்களும் மறைந்து தெளியத் துவங்கியபின் விடுமுறைக்கு வரும் போதெல்லாம் மாடியில் உலாத்துகையில் இவை தொடர்பான நினைவுகள் அலையடித்துக்கொண்டேயிருக்கும். எனக்கென தனி அறை ஒன்றிருந்த அதில் எனக்கான நினைவுகளை நிதமும் அடைத்து வைத்திருந்தால் எப்படியிருக்குமோ அப்படியே இருந்தது திறந்த மாடிவெளியும.</p>
<p>கோடை காலங்களில் வெப்பம் குறைய குடம் குடமாக மாடி முழுக்க தண்ணீர் ஊற்றி காற்றில் தண்மை ஏற்படுத்தியிருக்கிறோம். அங்கங்கே தண்ணீர் பரவாமல் காய்ந்திருக்கும் இடத்தை தேடிச் சென்று தண்ணீர் ஊற்றிய துண்டு நிலமே பின்னர் கார்காலத்தில் இரவில் அவசரமாக கடந்து மறைந்த மழைப்பறவையின் ஒற்றை ஈரச்சிறகாக காலைப்பொழுதுகளில் மாறிக் கிடக்கும். பக்கத்தில் இருந்த ஊராட்சித் தண்ணீர் டாங்க்கைச் சுற்றி வளர்ந்திருந்த புதர்களை ஒரு நாள் அழிக்கத்துவங்கிய பொழுது கிடைத்த, நானும் அண்ணனும் அடித்து வெளியேற்றியிருந்த ஏராளமான கிரிக்கெட் பந்துகளை கொத்துக் கொத்தாக விசிறு மாடியில் இறைத்ததைப் போல ஏராளமான நினைவுகள். மாடிகளைப் பற்றி சமீபத்தில் நண்பர்களிடையே பேச்சு வந்த பொழுது இவையெல்லாம் சொல்ல நினைத்து சொல்லவில்லை. இதைப் பற்றிச் சொன்னதும் புரிந்து கொள்ளும் பள்ளி நண்பர்கள் யாருடனும் தொடர்பில் இல்லை என்று உறைத்தது.</p>
<p>சொந்த ஊரிலிருந்து வெகு தூரம் வந்து விட்டாயிற்று. அவ்வப்போது அங்கிருந்து சென்னை வரும் யாரேனும் வீட்டிற்கு வந்தால் சம்பிரதாய பேச்சுடன் நான் உள்ளறைக்குச் சென்று ஏதேனும் இளையராஜாவின் பாடலில் அடைக்கலம் தேடிக்கொள்வதுண்டு. அவர்களின் பேச்சில் ஊரில் நிகழ்கிற மாற்றங்களைச் சொல்லி போகிற போக்கில் நெருக்கமான ஏதேனும் நினைவினை சுவடின்றி அழித்து விடுவார்கள். அப்படித் தொடர்ந்து தவிர்த்து தப்பித்து வந்திருந்த நிலையில் அம்மா ஊருக்கு செல்ல நேர்ந்தது. அன்றிரவு அலுவலகத்தில் இருந்து வீடு திரும்புகையில் எல்லாம் அம்மா என்னவெல்லாம் பேசக்கூடும் என்று எண்ணிக்கொண்டே இருந்தேன். திரும்பி வந்ததிலிருந்து அம்மா என்ன பேச எத்தனித்தாலும் துண்டித்தபடி நகர்ந்து கொண்டே இருந்தேன். ஒரு கட்டத்தில் விட்டுக்கொடுத்து கேட்கத் துவங்கிய பின் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்பில்லாத செய்திகள் – திருமணங்கள், மரணங்கள், ஊரை விட்டு வெளியேறிய குடும்பங்கள். எல்லாவற்றையுமே ஆர்வத்துடன் சொல்லிக்கொண்டிருந்தாள். பின்னர் மெதுவாக நாங்கள் இருந்த வீட்டைப் பற்றியும் சுற்றியிருந்த மக்களைப் பற்றி பேசத்துவங்குகிறாள். ஏதேனும் கேட்க விரும்பாததை கேட்க நேர்ந்தால் பார்வையாலேயே அதை துண்டிப்பதைப் போல கண்களை கூராக்கி பாய்ச்சி அமர்ந்திருந்தேன். மெல்ல வீடு புதுப்பிக்கப் பட்டிருந்ததைப் பற்றிச் சொல்கிறாள். மாடியிலிருந்த வீடு மிக அழகாக விரிவுபடுத்திவிட்டதாகச் சொல்கிறாள். எப்படி என்று கேட்கத் தோன்றாமல் அமைதி காத்தபடியே இருக்கின்றேன். குடியிருந்தவர்களை தற்காலிகமாக வேறு இடத்தில் தங்கவைத்து, அந்த மூன்று சிமெண்ட்டுத் தூண்களை வளர்த்தி மேலும் அறைகளை கட்டியிருப்பதாகச் சொல்கிறாள். எத்தனை என்று கேட்கிறேன். அந்த இடம் முழுக்க கட்டியிருப்பதாகச் சொல்கிறாள். இன்னும் அவளின் கண்களில் ஆச்சரியம் விலகவில்லை. முழுக்க என்றால் எப்படி என்று புரியவில்லை. எங்கள் வீட்டு வாசலையும் அதன் முன்னர் கோலம் போடுமளவிற்கு இடத்தையும் விட்டுவிட்டு மீதி இடம் முழுக்க சுவர் எழுப்பி அறைகள் நிரம்பியிருப்பதை விவரித்துக்கொண்டே இருக்கிறாள். புதிதாக நிரம்பிய அறைகளை எல்லாம் இணைத்து ஒரே வீடாக மாற்றியதாகச் சொல்கிறாள். வானம் எங்கே போச்சு என்று அபத்தமாக எனக்கு கேள்வி எழுகிறது. சலவைக் கற்களால் இழைக்கப்பட்ட தரைகள், குளிரூட்டப்பட்ட அறைகள் என்று அழகாக இருந்த எல்லாவற்றையும் சொல்லிக்கொண்டே போகிறாள். எனக்கு இன்னும் அந்த மாற்றம் சிந்தையில் இறங்கவேயில்லை. தலை நிமிர்ந்து வானம் வரை பார்த்த கற்பனையை மேல்சுவர் முட்டிக்கொண்டே இருந்தது. வீட்டு உரிமையாளர்கள் நாங்கள் எல்லோரும் நிச்சயம் ஒரு நாள் வந்து வீட்டைப் பார்க்க விரும்புவதாக அம்மா முடித்தாள். இனி எப்போதும் அந்த வீட்டிற்குச் செல்வதில்லை என்று மட்டும் நினைத்துக்கொண்டேன்.</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/sirumazai.wordpress.com/1211/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/sirumazai.wordpress.com/1211/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/sirumazai.wordpress.com/1211/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/sirumazai.wordpress.com/1211/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/sirumazai.wordpress.com/1211/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/sirumazai.wordpress.com/1211/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/sirumazai.wordpress.com/1211/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/sirumazai.wordpress.com/1211/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/sirumazai.wordpress.com/1211/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/sirumazai.wordpress.com/1211/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/sirumazai.wordpress.com/1211/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/sirumazai.wordpress.com/1211/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/sirumazai.wordpress.com/1211/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/sirumazai.wordpress.com/1211/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sirumazai.wordpress.com&amp;blog=312050&amp;post=1211&amp;subd=sirumazai&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://sirumazai.wordpress.com/2011/03/14/%e0%ae%ae%e0%af%87%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%88%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>5</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/696d6f93a60d344ddad261acf7b4259e?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">aravind</media:title>
		</media:content>
	</item>
	</channel>
</rss>
