கண்டேன் காதலை / ஆதவன்
இடைவேளையின் போது திரைக்கு பக்கத்தில் பெரிய பெரிய லைட்டுகள், திரைக்கு கீழே கொஞ்ச தூரத்தில் கேமிரா, ‘என்னடா நடக்குது‘ என்று எட்டிப் பார்த்தால் ‘சன் பிக்சர்ஸ்‘ குழுவினர் ஒரு படையோடு வந்திருந்தனர். ‘ஹையயோ‘ என்று வடிவேலு கணக்காக பதறினால், ‘இன்னிக்கு என்ன சமச்சீங்க‘ என்று டி.வி.யில் மொக்க போடும் ஒரு வி.ஜே மேடையேறினார். தமிழ் சினிமா ரசிகர்களுக்காக சன் பிக்சர்ஸ் ஒரு குடும்ப படத்தை மிகப் பெரிய போராட்டத்திற்கு பின்னர் தியேட்டருக்கு கொண்டு வந்திருக்கிறார்களாம். படம் massive hit ஆம். (அது ரிலீஸான ரெண்டாவது நாள். கமலா தியேட்டர், மேட்னி.). நடிகர் பரத் மற்றும் இயக்குனர் கண்ணன் ஆகியோர் மேடைக்கு வந்து, சன் பிக்ஸர்ஸ் இல்லையென்றால் ‘எங்களுக்கு காலைல டிஃபன் கூட கெடச்சிருக்காது‘ என்ற ரேஞ்சில் பேச, காதுகளில் செக்கச்செவேலென ரத்தம். பத்து நிமிடத்திற்கு பிறகு ‘நாங்க கிளம்பவா?’ என்று அவர்கள் உத்தரவு கேட்க, கூட்டம் ‘ம்ஹூம்‘ என்று கத்துகிறது. ‘வேற யாரு வரணும்‘ என்று தொகுப்பாளர் கேட்க, ‘தமன்னா‘ என்று மொத்த கூட்டமே கத்த, அடுத்த நொடி தமன்னா எங்கிருந்தோ புயலென உள்ளே நுழைகிறார். அதற்கு பிறகு அரை மணி நேரத்திற்கு பரத்தையும் டைரக்டரையும் யாரும் கண்டுகொள்ளவே இல்லை. கிட்டதட்ட படத்திலும் அதே கதை தான்!
பேச்சுப்போட்டியில் ஒரே தலைப்பில் எல்லோரும் பேச தயாராக இருக்கும் போது, நமக்கு முன்னால் ஒரு திறமையான போட்டியாளர் பேசிவிட்டால், நாம் பேச நினைத்தது எல்லாம் தீர்ந்து போகும். உண்மையிலேயே திறமை இருந்தால், நாமும் அதையே பேசலாம், நம் பாணியில். அத்தனை திறமையில்லாதவர்கள், சரக்கில்லாதவர்கள், சவசவ என்று சொன்னதையே திரும்ப சொல்லி ஒப்பேற்றி விட்டு போகலாம். இரண்டாவது வகை தான் ‘கண்டேன் காதலை‘. ஹிந்தியில் கரீனாவும் ஷாகித் கபூரும் jab they metஇன் போது காதலை அறியாமல், போக போக காதலை கண்ட படத்தை ரீமேக்கிருக்கிறார்கள்.‘நான் தேனிப் பொண்ணு‘ என்று சொல்வது மட்டும் கொஞ்சம் பொருந்தவில்லையே தவிர, தமன்னா தான் படத்தின் ராணித் தேனீ. தண்ணீர் பாட்டிலுக்கு சில்லறையை திருப்பிக் கேட்கும் சுவாரசியத்தில் ரயிலை தவற விடும் போது, ஒரிஜினலில் கரீனா கைகளால் முகத்தை அழுத்திக்கொண்டு ஒரு ரியாக்ஷன் தருவாரே, ஆஹ்! பைக்கில் பின்னால் வரும் ஜோக்கரிடம் (இந்தியில் தான் அவர் ஜோக்கர், தமிழில் பாக்ஸர் போல இருக்கிறார்), ‘மேன் வோ நஹி‘ என்று எத்தனை அழகாக கரீனா சொல்லுவார்? இப்படியெல்லாம் தமன்னாவிடம் எதிர்பார்த்தால், கொஞ்சம் கஷ்டம் தான். இருந்தும் சின்சியராக நடித்திருக்கிறார். பின்பாதியில் பயங்கரமாக சொதப்புவாரோ என்று பார்த்தால், சர்ப்ரைஸ் சர்ப்ரைஸ், ‘நான் எவ்ளோ லூஸு மாதிரி இருந்திருக்கிறேன்‘ என்று அழும் போது, நிஜமாகவே அழுதிருக்கிறார். படத்தின் ஒரே ஒரே ஆறுதல் தமன்னா!
முதல் காட்சியில், வாழ்க்கையின் எல்லாம் கட்டத்தில் தோற்று விட்ட வெறுப்பில், தளர்ந்த போன நடையில் பரத் நடந்து வரவேண்டும். அங்கேயே பரத் காலி. அதற்கு பிறகு எங்குமே எழுந்திருக்கவேயில்லை.‘டிரையினை மிஸ் பண்ற மாதிரி ஒரு கனவு வந்துச்சு‘ என்று சொல்வது எத்தனை அழகான பொருத்தமான சிம்பாலஜி. அந்த காட்சிக்கு பொருத்தமாக ‘பாஆஆஆஅங்‘ என்று டிரெயின் ஓடுற சத்தம் எல்லாம் சேர்த்திருக்கிறார்கள். ஆனால் கொஞ்சம் கூட ஃபீலிங்கே வர்லியே?? பரத்தின் அம்மாவினுடைய கதை, தமன்னாவின் முதல் காதல் கதை, பரத் தமன்னா காதல் கதை, எதிலுமே கொஞ்சம் கூட சங்கதி இல்லை. ஒரிஜினலின் பாடல் வரிகளில் கூட அத்தனை ஆழம் (சிலது இயக்குனரே எழுதியது), இங்கு பாட்டெல்லாம் சோ சோ! (தமன்னாவின் அழகை பார்க்க ‘தென்னாங்காயில் கூட மூணாம் கண்ணு முளைக்கிறதே‘ என்றெழுதியது மட்டும் சுகம், நிஜம்) ரொம்ப நாளைக்குப் பிறகு தமிழில் லவ் அட் ப்ஃர்ஸ்ட் சைட் எல்லாம் இல்லாமல் உணர்வுபூர்வமாக ஒரு கதை என்று ஆவலாக இருந்தால், Just we met என்று ஏனோ தானோ என்றிருக்கிறது படம்.
முன்னா ‘அசோகவனம் படத்தில் என் ரோல் இருக்குமா வெட்டிடுவாங்களா‘ என்ற குழப்பத்திலேயே சுற்றி வந்திருக்கிறார். ஏகபட்ட மக்கள் திரையில் வலம் வருகிறார்கள். யாரையும் நினைவில்லை.
இந்த தலைமுறை தமிழ் இயக்குனர்களில் பலருக்கு, எமோஷன்களை கையாளுவதற்கு ரொம்பவே பயம். தியேட்டருக்கு வரும் தமிழ் படங்கள் எல்லாம், காலேஜ் பையன்கள் அமர்ந்திருக்கும் குட்டிச் சுவர் இருக்கும் தெருவில் நடப்பது போல பயந்து பயந்தே வரும் இளம்பெண்கள் போல வருகின்றன. முதல் ரீலிலேயே கமெண்ட் பறக்கத் துவங்கி விடுகிறது. இதை தடுப்பதற்காக, அவர்களே ஒரு காமெடியனை படத்தில் நுழைத்து, படத்தின் எல்லா சீரியஸ் எமோஷனல் காட்சிகளில் கமெண்ட் அடிக்க வைத்து விடுகிறார்கள். கண்ணனின் முந்தைய படமான ‘ஜெயம்கொண்டான்‘ படத்தில் எப்படி விவேக் எல்லா காட்சிகளிலும் மூக்கை நுழைத்தாரோ, அது போல இந்த படத்தில் சந்தானம். இப்படி துக்கடாவாக சேர்க்கப்படும் விஷயங்கள் படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ் பிளஸ்ஸாக மாறுவது தான் கொடுமை!படத்திற்கு ஒரே ஒரு பெருமை கண்டிப்பாக உண்டு. ரீமேக் ராஜாவிற்கு கூட இல்லாத பெருமை. வெளிநாட்டில் இருக்கும் என்னுடைய அக்கா அம்மாவிடம் ‘அடுத்து ரெண்டு ஸ்பூன் உப்பா? எவ்ளோ மொளகா?’ என்று கேட்டு கேட்டு செய்வது போல, ‘பார்த்து, பார்த்து‘ செய்திருக்கிறார்கள். காஸ்ட்யூம் மாறினால் கூட சாமி கண்ண குத்திடும் ரேஞ்சுக்கு படத்தை இறுக்கத் தழுவியிருக்கிறார்கள். சமையல் முடிந்ததும் அக்கா திரும்ப அழைத்து, ‘என்ன இருந்தாலும் உன் கை பக்குவம் வரலியே‘ என்று வருத்தபடுவது தான் மிச்சம்!
அடபோங்கப்பா, ரிவியு கூட மொக்கையாயிடுச்சு.—————————————————————————————————————————————————————–
படத்தின் ஒரே (ஆறுதலான) ஃபீலிங் கட்டம், சுரேஷ் வாத்கர் கடித்து துப்பி பாடியிருக்கும் அந்த சோகப்பாட்டுக்காக ரிசர்வ்ட்.
—————————————————————————————————————————————————————–

‘கேடி’, ‘ஆனந்த தாண்டவம்’, ‘Happy days’ எல்லாம் பார்த்த பின் இதில் தமன்னா செமத்தியாக முன்னேறியிருக்கிறார்.
பாதி drink சின்மயிக்கு, இப்பவே சொல்ட்டேன் ஆமா!
—————————————————————————————————————————————————————–
‘சன் பிக்ஸர்ஸ்’லேர்ந்து யாராச்சும் வந்தா உடனே எஸ்கேப் ஆக. ![]()
(தமன்னாவிடம் கேட்கபட்ட கேள்வி – தொடர்ந்து மூன்று சன் பிக்சர்ஸ் திரைப்படத்தில் நீங்கள் நடித்திருக்கிறீர்கள். Do you think its your luck factor?)
—————————————————————————————————————————————————————–

————————————————————————————————–
ஹையயோ, இங்கயும் சூர்யா ஜோதிகா குடும்ப ஃபோட்டோவ போட்டுட்டாங்களா? ‘ஆனந்பாபு‘னு ஏன் போட்டாங்க? ‘ஆனந்த்பாபு‘ தானே? ‘ஃபெஃப்ஸி விஜயன்‘ எப்போ பெப்ஸி விஜயன் ஆனாரு? ஓ, இவ்ளோ அஷோஷியட் டைரக்டர்ஸா? காயத்ரி ரகுராம் கொரியோக்ராஃபர் ஆயிட்டாங்களா? இங்க பாரேன், சவுத் ஆஃப்ரிகாலேர்ந்து ஒரு ஸ்டண்ட் மாஸ்டராம், பேரு ஆனா ஃப்ராண்ஸாம்! – இப்படியெல்லாம் டைட்டில் போடும் போது உன்னிப்பாக கவனித்து நோட் செய்து ஆரம்பித்தால், அடுத்த இரண்டரை மணி நேரத்திற்கு நோட் செய்ய ஒன்றுமேயில்லை. படம் முடியும் போது போடுகிற டைட்டில்ஸில் ‘கதை விவாதக் குழு‘ என்று ஏழெட்டு பேரை நோட் செய்யும் போது வருதே ஒரு ஆத்திரம்! வடிவேலு நியாயப்படி சூர்யாவிற்கு அடுத்தபடியாக பெயர் போட்டிருக்க வேண்டும். அவரின் காமெடிக்கும் ‘ஹஸிலி ஃபிஸிலிக்கும்‘ மட்டும் தியேட்டர் அதிருகிறது. சூர்யா கட்டிடம் விட்டு கட்டிடம் தாவுவது கூட தாங்கிக்கொள்ளலாம், கடைசியில் ‘உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்ப்பா‘ என்று செண்டிமெண்டலாக ஃபீல் செய்யும் போது வா‘ரணம்‘ ஆயிரம்! ஆய்த எழுத்தெல்லாம் முடித்து விட்டு, அ ஃபார் அயன், ஆ ஃபார் ஆதவன் என்று மசாலாப் பாடம் படிக்க ஆரம்பித்திருக்கிறார் சூர்யா. வாழ்க வளமுடன்!

hai friend,
this film is very boring.i think sun tv will lose its viewers if they telecast this film advts.
i am afraid to watch suntv nowadays.
Ravichandran
நவம்பர் 9, 2009 இல் 7:10 மு.பகல்