இரண்டு கவிதைகள்
பகல் கனவு
நேற்றைப் பற்றிய
தெளிவில்லாத
தவறான குறிப்புகளை
தினமும் அதிகாலையில்
எழுதுகிறது
கனவு
எல்லாம் தவறாக நடைபெற்ற
நாளொன்றின் குறிப்புகளை
அது
திருத்தி சரியாக எழுதும்
தினத்தை
நான் வாழ்ந்திருந்தேன்
தலைகீழாக
——————————-
தனிமையுடன் தனித்திருத்தல்
வழியெங்கும் இரு புறமும்
தலையெடுத்து நிற்கும் விளக்குகள்
ஜன்னல்கள் வழியே
வெட்டிக் கொள்ள,
விழுந்து நகரும்
ஒளி-நிழல்
செவ்வகங்களும்
நினைவலைகளின் மேலே
இலக்கின்றி மிதக்கும்
வெறித்த கண்களும்
இணையும் புள்ளியில்
சீராக
விரைகிறது
இந்த இரவுப் பேருந்து
//தனிமையுடன் தனித்திருத்தல்
வழியெங்கும் இரு புறமும்
தலையெடுத்து நிற்கும் விளக்குகள்
ஜன்னல்கள் வழியே
வெட்டிக் கொள்ள,
விழுந்து நகரும்
ஒளி-நிழல்
செவ்வகங்களும்
நினைவலைகளின் மேலே
இலக்கின்றி மிதக்கும்
வெறித்த கண்களும்
இணையும் புள்ளியில்
சீராக
விரைகிறது
இந்த இரவுப் பேருந்து
//
This is too good…
Thanks!!
Karthikeyan G
அக்டோபர் 26, 2009 இல் 11:47 மு.பகல்