சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

இரண்டு கவிதைகள்

ஒரு மறுமொழியுடன்

பகல் கனவு

நேற்றைப் பற்றிய
தெளிவில்லாத
தவறான குறிப்புகளை
தினமும் அதிகாலையில்
எழுதுகிறது
கனவு

எல்லாம் தவறாக நடைபெற்ற
நாளொன்றின் குறிப்புகளை
அது
திருத்தி சரியாக எழுதும்
தினத்தை
நான் வாழ்ந்திருந்தேன்
தலைகீழாக

——————————-

தனிமையுடன் தனித்திருத்தல்

வழியெங்கும் இரு புறமும்
தலையெடுத்து நிற்கும் விளக்குகள்
ஜன்னல்கள் வழியே
வெட்டிக் கொள்ள,
விழுந்து நகரும்
ஒளி-நிழல்
செவ்வகங்களும்

நினைவலைகளின் மேலே
இலக்கின்றி மிதக்கும்
வெறித்த கண்களும்

இணையும் புள்ளியில்
சீராக
விரைகிறது
இந்த இரவுப் பேருந்து

Written by aravind

அக்டோபர் 13, 2009 இல் 3:06 பிற்பகல்

கவிதை இல் பதிவிடப்பட்டது

Tagged with

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. //தனிமையுடன் தனித்திருத்தல்

    வழியெங்கும் இரு புறமும்
    தலையெடுத்து நிற்கும் விளக்குகள்
    ஜன்னல்கள் வழியே
    வெட்டிக் கொள்ள,
    விழுந்து நகரும்
    ஒளி-நிழல்
    செவ்வகங்களும்

    நினைவலைகளின் மேலே
    இலக்கின்றி மிதக்கும்
    வெறித்த கண்களும்

    இணையும் புள்ளியில்
    சீராக
    விரைகிறது
    இந்த இரவுப் பேருந்து
    //

    This is too good…
    Thanks!!

    Karthikeyan G

    அக்டோபர் 26, 2009 இல் 11:47 மு.பகல்


மறுமொழி இடுக