சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

இறகுகளும் கொஞ்சம் காதலும்

2 மறுமொழிகளுடன்

featherநதியினில்
தன்னுருவத்தை
கண்டபடி
அமர்ந்திருக்கும்
மரத்தின் பறவை

தன் பிம்பத்தை
கலைக்கிறது
இறகொன்றை
உதிர்த்து

——-

இறகுகளை
புத்தகத்தினுள்
மிகப்பத்திரமாக
பாதுகாப்பவர்கள்
அறிந்தேயிருக்கிறார்கள்
பறவையின்
ஏதோவொரு
ரகசியத்தை

—————

வீட்டுக்குள்ளே
அடைந்து கிடப்பவர்களின்
ஜன்னலில்
நனைந்த பறவை
உதிர்த்துவிட்டுச் செல்கிறது
மழையிறகை

——-

பறந்து பறந்து
தீருவதில்லை
பறவைகளுக்கு

வானில்
அலையும்
சிறகுகள்

பூமியில்
அலையும்
இறகுகள்

—————-

தலை நிமிர்ந்து
பார்க்கையில்
உதிர்த்துவிட்டாய்
ஒரு புன்னகையை

அசைந்தசைந்து
இதமாய் விழுந்தது
மனதின் ரகசியப் படியில்

பின் காற்றடிக்கும்
போதெல்லாம்
படபடக்கிறது
மனது

——————————————————————————————————-

புகைப்படம்: http://www.jeffschneiderman.com

Written by aravind

ஜூன் 24, 2009 இல் 4:18 பிற்பகல்

கவிதை இல் பதிவிடப்பட்டது

Tagged with ,

2 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. Arpudam!

    Romba naal kazhichu, Oru uyirotamulla Tamizh kavidhai padichadilla alaviladangaa santhosham! :)

    Naanum kavidhaigal ezhudaren…Mudinjaa en valaipadip pakkam vandhu paarunga:)
    http://www.tamizhkaalangal.wordpress.com

    Nandri!:)

    Archana

    ஜூன் 29, 2009 இல் 12:11 பிற்பகல்

    • Archana – மனமார்ந்த நன்றிகள். உங்கள் பதிவைக் கண்டேன். வாழ்த்துகள். தொடந்து எழுதுங்கள்.

      aravind

      ஜூலை 9, 2009 இல் 5:10 பிற்பகல்


மறுமொழி இடுக