சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

பிளாட்ஃபாரம் எண் 6 – சில குறிப்புகள்

13 மறுமொழிகளுடன்

தடதடவென
உள்ளே வந்த ரயில்
இடித்து கொண்டு முன்னேறியது
ஏழே முக்கால் பிளாட்ஃபாரமை.

கடைசி பெட்டி
வெளியேறுகையில்
பின் விட்டு செல்லும்
எட்டு மணி பிளாட்ஃபாரமை.

*****************

இந்த எக்ஸ்ப்ரெஸ் வண்டி
இது வரை
கடந்திருக்கிறது
ஆறு ரயில்களை.
மூன்று பாசஞ்சர்,
ஒரு கூட்ஸ்,
நிற்காமல் கடந்த
ரெண்டு பிளாட் ஃபாரங்கள்
எல்லாம் சேர்த்து.

*****************

இந்த
எடை பார்க்கும் மிஷின்கள்
பிறந்தது
வளர்ந்தது
எல்லாம்
இதே
பிளாட் ஃபாரத்தில்
தானா?

*****************

யானைப்பிளறல் ஒன்று கேட்கிறது.
மடை திறந்தது போல
ஆயிரம் வார்த்தைகள்
அமைதியாக பேசிக் கொண்ட
விழிகளுக்கிடையில்
நீளத் துவங்கியது
ரயில்.

*****************

ரயில் புறப்பட்ட போன பின்
கசக்கி எறியப்படுகின்றன
காலி காஃபி கோப்பைகள்
பிளாஸ்டிக் கவர்கள்
மற்றும்
சொல்லாமலே விட்டு விட்ட
சில வார்த்தைகள்

Written by aravind

ஜனவரி 22, 2009 இல் 5:02 மு.பகல்

கவிதை இல் பதிவிடப்பட்டது

Tagged with , ,

13 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. //இந்த எடை பார்க்கும் மிஷின்கள் பிறந்தது வளர்ந்தது எல்லாம் இதே பிளாட் ஃபாரத்தில் தானா?//
    :-) பின்றான்யா!

    venkatramanan

    ஜனவரி 22, 2009 இல் 5:08 மு.பகல்

  2. நண்பரே.. அரவிந்த்.. எப்படி இருக்கீங்க..
    கொஞ்ச நாளாவே.. இல்லை இல்லை.. ரொம்ப நாளாவே உங்க பதிவு பக்கம் வர முடியல..

    Saravana Kumar MSK

    ஜனவரி 24, 2009 இல் 5:56 பிற்பகல்

  3. //இந்த எக்ஸ்ப்ரெஸ் வண்டி
    இது வரை
    கடந்திருக்கிறது
    ஆறு ரயில்களை.
    மூன்று பாசஞ்சர்,
    ஒரு கூட்ஸ்,
    நிற்காமல் கடந்த
    ரெண்டு பிளாட் ஃபாரங்கள்
    எல்லாம் சேர்த்து. //

    அட்டகாசம்.. மிக அழகு..

    Saravana Kumar MSK

    ஜனவரி 24, 2009 இல் 5:57 பிற்பகல்

  4. //ரயில் புறப்பட்ட போன பின்
    கசக்கி எறியப்படுகின்றன
    காலி காஃபி கோப்பைகள்
    பிளாஸ்டிக் கவர்கள்
    மற்றும்
    சொல்லாமலே விட்டு விட்ட
    சில வார்த்தைகள் //

    அசத்தல்.. அருமை..

    Saravana Kumar MSK

    ஜனவரி 24, 2009 இல் 5:57 பிற்பகல்

  5. ரயில் கவிதைகள் எல்லாமே அழகு.

    வாழ்த்துக்கள்.

    Surya

    ஜனவரி 24, 2009 இல் 8:38 பிற்பகல்

  6. சரவணா,

    நன்றி நன்றி நன்றி நண்பா. உனக்கு இவை பிடித்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி. :D

    சூர்யா,

    வருகைக்கும் மறுமொழிக்கும் மிக்க நன்றி அன்பரே. :)

    aravind

    ஜனவரி 25, 2009 இல் 4:53 மு.பகல்

  7. Thalaiva,

    Pinreeeeeeeeeeeeeengale!!!!

    Good Work again!!!!

    ~Pavithra Vijay

    Pavithra Vijay

    ஜனவரி 25, 2009 இல் 3:54 பிற்பகல்

  8. Thanks Pavithra :)

    aravind

    பெப்ரவரி 19, 2009 இல் 4:07 மு.பகல்

  9. ரயில் கவிதைகள் நன்றாக இருக்கின்றன .
    இப்போதுதான் உங்களை வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன்.
    படித்துவிட்டு தொடர்கிறேன். வாழ்த்துக்கள்.

    kavin

    April 30, 2009 இல் 3:24 பிற்பகல்

  10. கவின் – நன்றி :)

    aravind

    மே 3, 2009 இல் 4:39 பிற்பகல்

  11. nice. enjoyed

    PUGAZH

    மே 5, 2009 இல் 6:59 மு.பகல்


மறுமொழி இடுக