சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

மும்பை – சில கேள்விகள்

with 3 comments

1) லஷ்கர் இ தொய்பா தாஜ் ஹோட்டலை தாக்கக்கூடும் என செப்டம்பெர் 2008ல் RAW சொல்லியிருக்கிறது. நவம்பர் 18ம் தேதி அதே RAW கடல் வழியாக தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழையக் கூடும் என்று சொல்லியிருக்கிறது. அவ்வளவு ஏன், ‘சாட்டிலை ஃபோன்’ மூலம் நடைபெற்ற சந்தேகத்திற்கு இடமான உரையாடலை கேட்டதாகவும் சொல்லியிருக்கிறது. இதற்கு மேல் என்ன இண்டெலிஜெண்ஸ் தேவை? இது இண்டெலிஜென்ஸ் ஃபெயிலியரா? (நேற்றிரவு இந்திய கப்பற்படை இதை மறுத்துள்ளது, அதாவது RAW எதுவும் சொல்லவில்லை. எது உண்மை?)

2) இதற்கு முன் வெடிகுண்டுத் தாக்குதல் நடைபெற்ற போது ராஜினாமா செய்யாத ஷிவ்ராஜ் பாட்டில் இப்போது செய்திருக்கிறார். அப்படியென்றால் இதற்கு முன் நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதல்கள் ஒரு நாட்டில் அனுமதிக்கக் கூடியவை என்று அர்த்தமா? இப்போது உயிர் செலவு அதிகம் என்பதால் இந்த ஞானோதயமா? இதற்கு முன் வெடிகுண்டுத் தாக்குதல் நடைபெற்ற போதெல்லாம் அவர் அந்தப் பதவியில் தொடர அவரிடம் என்னத்த கண்டது அரசு? இப்போது அவரிடம் என்ன குறை என்று கண்டுகொண்டு விட்டது? எந்த அடிப்படையில் அவர் ஹோம் மினிஸ்டர் ஆக்கப்பட்டார்? எந்த அடிப்படையில் அவர் தொடர அனுமதிக்கப் பட்டார்? எந்த அடிப்படையில் இப்போது வெளியேற அனுமதிக்கப் படுகிறார்?

3) இந்திய பிரதமர் அவசரமாக நடத்தும் முதல் இரண்டு கூட்டங்களிலும் ஹோம் மினிஸ்ட்டரை அழைக்கவில்லை என்றால் அதை நாம் எப்படி எடுத்துக்கொள்வது? ஷிவ்ராஜ் பாட்டிலால் இனி செய்வதற்கு ஒன்றும் இல்லை என்பதா? அவரோடு இனி நாங்கள் சேர மாட்டோம் என்பதா? துறையின் பொறுப்பில் இருப்பவர் மீது என்ன தான் வெறுப்பு இருந்தாலும், இது எத்தனை மோசமான விஷயம்? அவர் இருந்தும் இல்லாதது போல என்று அரசு நினைக்கிறதா?

4) வியாழக்கிழமை ‘இந்திய அரசுடன் நாங்கள் இருக்கிறோம்’ ‘மன்மோகன் சிங்குடன் ஜோடியாக மும்பை போகப் போகிறேன்’ என்றெல்லாம் சொன்ன அத்வானி அடுத்த நாளே, ‘இந்த அரசு மோசம்’ என்று எதிர்க்கட்சி பல்லவியைப் பாடுகிறார். முதலில், தீவிரவாதிகள் குஜராத் வழியாக வந்தார்கள் என்பதற்கு அவர்களின் கட்சி ஆட்சி என்ன சொல்கிறது? ஹேமந்த கர்கரே குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் தர முண்டியடித்துக் கொண்டு வந்த மோடி, இன்னும் ஏன் அதைப் பற்றி வாய் திறக்கவில்லை. அவர் அரசு அதற்கு என்ன விசாரணை மேற்கொண்டிருக்கிறது? அது அவர் வேலையா? இல்லை இந்திய அரசு ஃப்ளைட் பிடித்து வந்து தான் விசாரிக்கவேண்டுமா?

5) ஆர் ஆர் பாட்டில், ‘பெரிய நகரங்களில் இது போன்ற ‘சின்னச் சின்ன’ விஷயங்கள் நடப்பது சகஜம்’ என்று சொல்லியிருக்கிறார். எவ்வளவு பேர் உயிரிழந்தால் அது சின்ன விஷயம்? எப்போது அது பெரிய விஷயம் ஆகும்? இன்னும் நாம் எத்தனை சின்னச் சின்ன சகஜங்களை எதிர்பார்க்கலாம்?

6) இந்தப் போரில் வீர மரணம் அடைந்த அத்தனை போலீஸ்காரர்களுக்கும் கண்ணியமான அஞ்சலி. அதே சமயம், இது போன்ற தொட்டதும் எதிராளியுடன் துப்பாக்கிச்சூடு சண்டையை துவக்குவது மோசமான உத்தி என்று இஸ்ரேலி அரசு குறிப்பிட்டுள்ளது. இந்திய போலீஸ் இந்த சூழ்நிலையை கையாண்ட விதத்தில் அதிருப்தியும் தெரிவித்துள்ளது. இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது? அதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள ஏதேனும் இருக்கிறதா? (கொல்லப்பட்டவர்களில் இஸ்ரேலிகள் தான் அதிகம் டார்ச்சர் செய்யப்பட்டு பின் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்)

7) நடப்பதை உடனுக்குடன் மக்களுக்கு சொல்ல வேண்டும் என்ற மீடியாவின் பொறுப்புணர்ச்சி பாராட்டுக்குரியதே. ஆனால், GPRS, சாட்டிலைட் ஃபோன் என்ற ரேஞ்சில் தொழில்நுட்ப பலம் பெற்றிருக்கும் தீவிரவாதிகளுக்கு, நீங்கள் காட்டுகிற காட்சிகளை பார்க்க எவ்வளவு நேரம் ஆகும்? அது புரியாமல், ‘போலீஸ் இப்போது மேலிருந்து உள்ளே இறங்கப் போகிறார்கள், வலது ஓர சுவரை உடைத்து உள்ளே போகிறார்கள்’ என்று டெரர் ரியாலிட்டி ஷோ நடத்தியது எந்த அளவு நியாயம்? புத்திசாலித்தனம்? தாஜ் ஒட்டலில் இருந்த தீவிரவாதிகள் தீர்த்துக்கட்ட பின்பு, உயிர் உள்ள வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப் பட்டுக்கொண்டிருக்கிற சூழ்நிலையில் அங்கே தப தப என்று உள்ளே காமிராவுன் ஓடியது என்ன முட்டாள்தனம்? ‘இதோ பார் உடைந்த கண்ணாடி, இந்த ஸ்க்ரீன் துணியை பிடித்து எப்படி தொங்கி எப்படி காப்பாற்றினீர்கள்?’ என்பது எந்த சமயத்தில் தேவை எந்த சமயத்தில் தேவை இல்லை? இந்தியா டிவி எல்லாவற்றுக்கும் மகுடம் சூட்டும் விதமாக, தாஜ் ஹோட்டலில் இருந்த தீவிரவாதியுடன் செல்ஃபோனில் பேசியதை வெளியிட்டு இருக்கிறது. எப்படி இதெல்லாம் சாத்தியம்?

8 – கைப்பற்ற தீவிரவாதிகளை சட்டப்படி நாம் கையாளுகிற முறையில் என்ன தடைகள் தட்டுப்பாடுகள் உள்ளன? பொடா போன்ற சட்டங்களை தங்களின் சொந்த லாபத்துக்கு பயன்பற்றி அதை ஒன்றுமில்லாமல் ஆக்கிய வெட்கங்கெட்ட அரசியல்வாதிகளை என்ன செய்யலாம்?

9) ரஜினிகாந்த மஹாராஷ்ட்ராவிற்கு வந்து சேவை செய்ய வேண்டும் என்கிற அளவிற்கு சமூக அக்கறை சம்பந்தமாக பலமான ஆராய்ச்சி செய்து அறிவுப்பூர்வமான அறிக்கை விடும், ‘மும்பை மராட்டியருக்கே’ என்று கோஷமிடும் தாக்கரே வகையறாக்களும், நினைத்ததை நடத்திக் காட்டும் அவரகளது செயல் வீரர்களும், தொடர்ந்து தாக்குதல்களுக்கு உள்ளாகும் மும்பையை காக்க இது வரை என்ன செய்திருக்கிறார்கள்? NSG படையினரில் மராத்தியர் மராத்தியர் அல்லாதவர் என்று தாக்கரே வகையறாக்கள் வகைபடுத்துவார்களா? ஒரு பொது இடத்தில் வைத்து ஏன் அவர்களை இதை கேட்கக் கூடாது?

10) இதை இந்தியாவின் 9/11 என்று அழைப்பது சரியா? இது, எந்த தேசத்துடன் வம்பு வளர்க்காத, எந்த தேசத்தின் வளத்திற்கும் ஆசைப்படாத, எந்த நாட்டு பிரச்சினைகளிலும் மூக்கை நுழைக்காத ஒரு தேசம், காரணமின்றி தாக்கப்படுவதின் வலி. இதை எந்த ஒரு வலியுடனும் ஒப்பிட முடியாது!

உங்களிடம் என்னென்ன கேள்விகள் உள்ளது?

Written by aravind

நவம்பர் 30, 2008 இல் 3:53 பிற்பகல்

எண்ணங்கள் இல் பதிவிடப்பட்டது

3 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. Yeah, the answers for all these questions will help us in introspection of the useless politicians…Well asked, Aravind!

    Pavithra Vijay

    டிசம்பர் 3, 2008 இல் 7:08 மு.பகல்

  2. good questions. kelvi ketu kondirupadal mattumae enna bayan

    anuradha

    டிசம்பர் 3, 2008 இல் 2:46 பிற்பகல்

  3. Pavithra – Thanks! I was just told that there is some protests going on in major cities headed by youth. Really good thing!!

    Anuradha – Thanks! I think asking questions itself is a welcome change. Dont you think so?

    aravind

    டிசம்பர் 3, 2008 இல் 3:07 பிற்பகல்


மறுமொழி இடுக