சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

அழகிய தமிழ் மகன்

ஒரு மறுமொழியுடன்

கல்லூரி மாணவன் குரு (விஜய்) ஓட்டப்பந்தைய வீரர். தற்செயலாக சந்திக்கிற அபிநயா(ஸ்ரேயா) மீது காதல் கொள்கிறார். அது வெற்றியும் பெறுகிறது. குருவுக்கு ESPயின் காரணமாக பின்னர் நடக்க இருக்கும் விஷயங்கள் முன்கூட்டியே தெரிய வருகிறது. அதில் ஒன்று – அபிக்கு அவர் மூலமாகவே ஆபத்து வருமென்பது. கவலையில் குரு அவரைப் பிரிகிறார். அந்த இடத்தில் வந்து சேர்கிறார் அவரைப் போலவே இருக்கும் ப்ரஸாத்(இன்னொரு விஜய்).

பின்னர் நடப்பது வழக்கமான ஆள்மாறாட்ட காமெடிகள்.

ஆள்மாறாட்ட கதைகளில் நீங்கள் என்ன எல்லாம் லாஜிக் இல்லா மேஜிக் எதிர்பார்க்கலாமோ அதெல்லாம் இதிலும் உண்டு. கோடம்பாக்க டைரக்டர்ஸுக்கு ஒரு வேண்டுகோள் – ஆள்மாறாட்ட கான்செப்ட்டை தமிழ் சினிமா ரொம்பவே அடித்து துவைத்து விட்டது. அதை இனிமே எடுக்காதீங்களேன்! ப்ளீஸ்!

கதையை அவசரப்பட்டு சொல்லாமல் முதல் பாதியில் காமெடி செண்டிமெண்ட் அடிதடி எல்லாம் சொல்லியிருக்கிறார்கள். கதை கவிழ்த்து விட்டாலும் முதல் பாதி கொஞ்சம் கைகொடுக்கிறது.

குருவாக வருகிற விஜய் வழக்கத்தை விட செம ஃபிரெஷ்! வழக்கமான காதல், டான்ஸ், ஃபைட், காமெடி என வருகிறார். “எல்லா புகழும்..” மாஸ் பாடலில் விஜய் ஆடுகிற நடனம் க்ளாஸ்!

ப்ரஸாத் – இன்னொரு விஜய் – நடிப்பில கொஞ்சம் ஸ்கோப் உண்டு. குருவை விட பிரமாதமான டைமிங் காமெடியில். இரண்டாம் பாதியை அனுமார் போல தூக்கி நிறுத்துவதே ப்ரஸாத் தான். டையலாக்கை கடித்து கடித்து பேசுவது வில்லத்தனமாக இருந்தாலும் போக போக கொஞ்சம் ஓவர்டோஸ். இமேஜ் வட்டத்துக்குள் இருக்கிற விஜய் புதிதாக எதையோ செய்ய முயன்றதே பெரிய விஷயம். ஒவ்வொரு முறையும் “எவ்வளவோ பண்ணிட்டோம், இத பண்ண மாட்டோமோ?” என்று சொல்வது வெடிச் சிரிப்பு.
என்னடா தமிழ் சினிமாவே நம் பின்னால் பைத்தியம் பிடித்து அலைகிறதே… கொஞ்சமாவது நடிக்க முயற்சி பண்ணலாமென்று உறுத்த வேண்டாமா ஷ்ரேயாவுக்கு! டையலாக்கை கூட இன்னும் ஒழுங்காக யசைக்கவில்லையென்றால் எப்படி?? “மத்த” விஷயத்திலெல்லாம் ரொம்ப ஸ்டெடியாகவே இருக்கிறார்.

விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறேனென்று பேட்டி பேட்டியாக நமீதா பெருமையடித்துக் கொண்டது இதைத் தானா?? ஐயோ பாவம்!

வில்லனாகவே பார்த்து பழகிய ஆஷிஷ் வித்யார்த்தியை ஷ்ரேயாவின் அப்பாவாக நல்லவராக வருவதை நம்பமுடியவில்லை! இதோ இப்போ வில்லனாக மாறுவார் என்று நாம் எதிர்பார்த்துக்கொண்டே இருக்கிறோம்.

ஷிண்டே இன்னொரு ஐயோ பாவம். லூஸு வில்லனாக இன்னொரு படம் செய்யாதீங்க ப்ளீஸ்! பாரதியாராக நடிச்சவர் சார் நீங்க… தமிழ் சினிமால உங்களுக்கு வேலையே இல்லை…. வேற எங்கயாச்சும் போய்டுங்க.

குருவின் அப்பா அம்மா எபிசோட் முதல் பகுதியின் டோட்டல் கலகல. அப்பா “அலோ” சொல்லியே சிரிக்கவைக்கிறார். அம்மா கீதா படு பாந்தம்.

கஞ்சா கருப்பு, சந்தானம், சத்யன், பாஸ்கர் அனைவரும் ஓகே.

உங்கள் காதலனைப் போலவே ஒருவன் வந்தால் உங்களால் யார் பொய் சொல்கிறார் என்று அடையாளம் சொல்ல முடியாதா?? அப்புறம் காதலித்து என்ன புண்ணியம்?? தமிழ் சினிமாவின் கதாநாயகிகள் அடி முட்டாள்கள்
போலிருக்கிறது.

அதுவும் குரு கொஞ்ச நாள் காணாமல் போன போது அவர் நண்பர்கள் அவரை தேடுவதாகவே காணோம். அவர்களுக்கும் உண்மையான குரு யாரென்று தெரியவில்லை… அட போங்க பா!

பாலசுப்ரமெணியனின் காமிரா ரொம்பவே துல்லியம். விஜய், ஷ்ரேயா எல்லாரும் மினுங்குகிறார்கள். படத்தின் க்ராபிஃஸ் காட்சிகளில் பட்ஜெட் பல்லை இளிக்கிறது.

ஆடியோவில் கேட்டதை விட பாடல்கள் திரையில் கொஞ்சம் பரவாயில்லை. “பொன்மகள்” ரீமிக்ஸ் தொடங்கும் முன்னர் தியேட்டரில் அவ்வளவு அப்ளாஸ். பிண்ணனி இசையை ரஹ்மானின் எந்த அஸிஸ்டெண்ட் போட்டார்??

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவர முயற்சிக்கிறவர் விஜய். குறிப்பாக குழந்தைகள். படத்திலும் அது நன்றாக தெரிகிறது. அந்த குட்டி பெண் எபிஸோட் க்யூட். பின்னர் எதற்கு “தமிழ்நாட்டு மன்மதனே வாராய்” போன்ற முகஸ்துதிகளும், ஹவுஸ் ஓனர் ஷகிலாவும்?

இயக்குனர் பரதனுக்கு முதல் படம். இவரின் குரு “கில்லி” தரணி. தீபாவளி மெகா ரிலீஸ், அதுவும் விஜயை வைத்து… பின்னி பெடலெடுத்திருக்க வேண்டாமா?? முதல் படமென்பதால் என்னவோ பட்டாம்பூச்சி, எறும்புக்கெல்லாம் ஸீன் வைத்திருக்கிறார். டையலாக் குடுக்காத வரைக்கும் சந்தோஷம்.

முதல் பாதி அநியாயத்துக்கு நீளம். ஏற்கனவே மூச்சு முட்டி ஓடிக்கொண்டிருக்கும் இரண்டாம் பாதி க்ளைமாக்ஸில் பொத்தென கீழே விழுகிறது. இந்த வருடத்தின் மிக மோசமான க்ளைமாக்ஸ்.

விஜய் ரசிகர்களை பாதி கவர்ந்து, விஜய் ரசிகரல்லாதவரை பாதி கவர்ந்து.. தீபாவளி ரேஸில் ‘பொல்லாதவனை’ வெல்லாதவன், அழகிய தமிழ் மகன்! ;)

Written by aravind

நவம்பர் 25, 2007 இல் 5:10 மு.பகல்

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. Your money waste, time waste so I didnt read your review.

    But I liked the songs very much

    pugazh

    மே 7, 2009 இல் 6:27 மு.பகல்


மறுமொழி இடுக