சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

கவித்தூரிகை 11

மறுமொழி இடுக »

நண்பர்களுக்காக…..

எதிர்பார்க்கும் போது கூட
வருவதில்லை மழை.
எதிர்பாராத போதும் தேடி
வருகிறார்கள் நண்பர்கள்.
எழுதிவிட்டேன்
நூறு கவிதைகள்
மழைக்காக.
வெட்கமாயிருக்கிறது.
எழுதவில்லை ஒரு கவிதைகூட
நண்பர்களுக்காக!

Written by aravind

செப்டம்பர் 12, 2007 இல் 3:13 பிற்பகல்

கவிதை இல் பதிவிடப்பட்டது

மறுமொழி இடுக