சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

காணாமல் போனவர்கள் 2

2 மறுமொழிகளுடன்

 

கவித்தூரிகை 7

காலத்தை மென்று தின்னும் துர்மரணம்

 

House

தினமும்
யாராவது யாருக்காவது
அடையாளம் காட்டியபடியிருக்கிறார்கள்
துர்மரணம் நிகழ்ந்த வீடுகளை.
அவர்கள் பேசிக்கொண்டேயிருக்கிறார்கள்
அந்த மரணத்தின் கோரத்தைப்பற்றியும்
கடவுளின் கருணையின்மையைப்பற்றியும்.
அந்த வீடுகளை கடக்கையில்
எல்லோரும் அனிச்சையாக
அவசரப்படுகிறார்கள்.
அந்த வீடுகளின் சுவர்ப்பூச்சு
பெரும்பாலும்
மங்கிப்போய்த்தான் இருக்கின்றது.
விளக்குகள் இரவில்
தாமதமாகவே எரியவிடப்படுகின்றன.
அந்த வீடுகளின் முற்றம்
வாசல் திண்ணை அலமாரி
கிணறு அனைத்திலும்
தூசியோடு படிந்திருக்கிறது
அந்த துர்மரணம்.
காலை வெயில் கடப்பது போல
பண்டிகைகள் அவர்களின் வீடுகளை
சலனமில்லாமல் கடக்கின்றது.
அழையா விருந்தாளியாக
மௌனம் எப்போதும்
வரவேற்பறையில் அமர்ந்திருக்கிறது.
அந்த வீடுகளைச் சேர்ந்த இளவட்டங்கள்
தங்களின் காதல் கதைகளை
பரம ரகசியங்களாக பாதுகாக்கின்றனர்.
குழந்தைகளின் விளையாட்டு நேரம்
சுருக்கப்பட்டு உள்ளது.
பெண்களின் சமையல்
ருசியில் சேர்ந்திருக்கிறது
விருந்தினர் மட்டும் உணரும் கசப்பு.
ஆண்கள் பெண்கள் அனைவரும்
துர்மரண நினைவுலகின்
பின்வாசல் தெரியாமல்
மெதுமெதுவாக தினமும்
காணாமல் போய்க்கொண்டிருக்கிறார்கள்.

Written by aravind

மார்ச் 16, 2007 இல் 5:21 பிற்பகல்

கவிதை இல் பதிவிடப்பட்டது

2 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. This poem of you haunted me for days.

    It has happened so naturally to you and indeed a great poem happens so naturally.

    Hats off…

    Manikandan

    ஜூன் 2, 2009 இல் 12:09 பிற்பகல்


மறுமொழி இடுக